id
int64 1
400
| பாடியவர்
stringlengths 0
32
| பாடப்பட்டோன்
stringlengths 0
52
| திணை
stringclasses 28
values | துறை
stringlengths 0
59
| சிறப்பு
stringclasses 36
values | poem
stringlengths 0
1.3k
| title
stringlengths 15
51
| explanation
stringlengths 31
4.28k
|
|---|---|---|---|---|---|---|---|---|
1
|
பெருந்தேவனார்.
|
இறைவன்
|
கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
5
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
10
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.
|
புறநானூறு - 1. இறைவனின் திருவுள்ளம்!
|
தலையில் கொன்றைப் பூ சூடியவன். மார்பில் கொன்றை - மாலை அணிந்தவன். ஊர்தி வெண்ணிறக் காளைமாடு. கொடியும் காளைமாடு என்று கூறுகின்றனர். தொண்டையில் நஞ்சுக் கறை. அந்தக் கறை அந்தணர் மறையில் போற்றப்படுகிறது. ஒருபாதி (இடப்புறம்) பெண் - உருவம். அதனைத் தனக்குள் மறைத்துக்கொள்வதும் உண்டு. நெற்றியில் பிறை. அந்தப் பிறையை 18 வகையான தேவ கணங்களாலும் போற்றி வணங்கப்படும். அவன் எல்லா உயிரிங்களுக்கும் பாதுகாவலாக விளங்குபவன். நீர் வற்றாத கரகத்தைக் கையில் வைத்திருப்பவன். தாழ்ந்த சடைமுடியிலும் நீர் வற்றுவதில்லை. இந்தக் கோலத்தில் அவன் தவம் செய்துகொண்டிருக்கிறான்.
|
|||
2
|
முரஞ்சியூர் முடிநாகராயர்.
|
சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்.
|
பாடாண்.
|
செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
|
மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
5
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அணியும், உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
10
யாணர் வைப்பின், நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ, பெரும!
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ,
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது, களத்து ஒழியப்
15
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்,
20
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற், றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!
|
புறநானூறு - 2. போரும் சோறும்!
|
நிலம் போல் பொறுமை, வானம் போல் சூழ்திறன், காற்றைப் போல் வலிமை, தீயைப் போல் எரிக்கும் - திறன், நீரைப் போல் அளிக்கும் கொடைத்திறன் ஆகியவற்றை உடையவன் நீ. உன் கடலிலே தோன்றிய ஞாயிறு உன் கடலிலேயே மறையும் நிலப்பரப்பை உடையவன் நீ. இப்படிப்பட்ட வானவரம்பன் நீதானா? தும்பைப் பூ சூடி ஐவரை எதிர்த்த நூற்றுவர் மாண்ட போர்க்களத்தில் இருபாலாருக்கும் பெருஞ்சோறு கொடுத்தவன் நீ. பால் புளித்தாலும், பகல் இருளானாலும், நான்கு வேதங்களின் நெறிமுறை மாறினாலும் திரிபில்லாச் சுற்றத்தாருடன் வாழ்வாயாக. இமயம் பொதியம் ஆகிய மலை அடுக்கத்தில் அந்தணர் வளர்க்கும் முத்தீ விளக்கொளியில் நவ்வி - மான்கள் உறங்குவது போல அச்சமின்றி உன் மக்கள் - சுற்றம் நிலைகொள்வதாகுக. முந்தைய பாடல்
|
|
3
|
இரும்பிடர்த் தலையார்.
|
பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.
|
பாடாண்.
|
செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
|
இரும்பிடத் தலையாரைப் பற்றிய செய்தி.
|
உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,
ஏம முரசம் இழுமென முழங்க,
நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்,
தவிரா ஈகைக், கவுரியர் மருக!
5
செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ!
பொன் னோடைப் புகர் அணிநுதல்
துன்னருந் திறல் கமழ்கடா அத்து
எயிரு படையாக, எயிற்கதவு இடாஅக்
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கில்.
10
பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி!
நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்;
பொலங் கழற்காற்,புலர் சாந்தின்
15
விலங் ககன்ற வியன் மார்ப!
ஊர் இல்ல, உயவு அரிய,
நீர் இல்ல, நீள் இடைய,
பார்வல் இருக்கைக், கவிகண் நோக்கிற்,
செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
20
அம்புவிட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை,
நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்! அது
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்
25
இன்மை தீர்த்தல் வன்மை யானே.
|
புறநானூறு - 3.வன்மையும் வண்மையும்!
|
நீ கவுரியர் மரபில் வந்தவன். அவர்கள் முழுமதி போல் உருவம் கொண்ட வெண்கொற்றக் குடையால் ஆளும் மண்ணிலுள்ள அனைத்துக்கும் நிழல் தந்தவர்கள். முரசு முழக்கத்துடன் ஆட்சிச் சக்கரத்தை உருட்டியவர்கள். நெஞ்சில் நேயம் கொண்டு இல்லை என்று சொல்லாமல் கொடை வழங்கியவர்கள். நீ கற்புக்கரசியின் கணவன். உன்னைக் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி என்பார்கள். (ஏனென்றால்) மருந்தில் கூற்றம் என்னும் நிலப்பகுதியை வென்றாய். யானைத் தலையில் இருந்துகொண்டு போரிட்டு வென்றாய். அந்த யானை பொன்னாலான ஓடைக் கவசத்தை நெற்றியில் கொண்டது. வலிமை மிக்கது. மதம் பொழிவது. கயிற்றில் கட்டிய மணி கொண்டது. அதனை உதைத்துக் கொண்டுதான் நீ அதன் தலையில் அமர்ந்திருந்தாய். உன்னை ஒன்று வேண்டுகிறேன். நிலமே மாறினாலும் நீ சொன்ன சொல் தவறாமல் வாழவேண்டும். நீ பொன்னாலான வீரக்கழலைக் காலில் அணிந்தவன். ஈரச்சந்தனம் புலர்ந்த மார்பை உடையவன். உன்னை நயந்து இரவலர் வருவர். ஊர் இல்லாத, வாழ முடியாத, நீர் இல்லாத நீண்ட வழியைக் கடந்து வருவர். வன்கண் ஆடவர் பதுங்கியிருந்து அம்பு விட வீழ்ந்தவர்களை உண்ணும் பருந்து உன்னமரத்தில் காத்திருக்கும் வழியில் வருவர். அவர்களின் நிலைமையை எண்ணிப்பார்த்து அவர்களின் வறுமையைப் போக்குவதுதான் உன் வலிமை. முந்தைய பாடல்
|
4
|
பரணர்.
|
சோழன் உருவப் பறேர் இளஞ்சேட் சென்னி.
|
வஞ்சி.
|
கொற்ற வள்ளை.
|
சோழரது படைப் பெருக்கமும், இச் சோழனது வெற்றி மேம்பாடும்.
|
வாள்,வலந்தர, மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன!
தாள், களங்கொளக், கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;
தோல்; துவைத்து அம்பின் துனைதோன்றுவ,
5
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
மாவே, எறிபதத்தான் இடங் காட்டக்,
கறுழ் பொருத செவ் வாயான்,
எருத்து வவ்விய புலி போன்றன;
களிறே, கதவு எறியாச், சிவந்து, உராஅய்,
10
நுதி மழுங்கிய வெண் கோட்டான்,
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி,
மாக் கடல் நிவந் தெழுதரும்
15
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!
அனையை ஆகன் மாறே,
தாயில் தூவாக் குழவி போல,
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.
|
புறநானூறு - 4. தாயற்ற குழந்தை!
|
வெற்றிகண்ட உன்வாள் செவ்வானம் போலக் கறைபட்டுக்கிடக்கிறது. களம்கொண்ட உன் தாளிலுள்ள வீரக்கழல் கொல்லும் களிற்றின் தந்தம் போன்றன. மார்புக் கவசமாகிய தோல் அம்பால் துளைக்கப்பட்டு நிலையில்லாமல் மின்னும் விண்மீன் கொண்ட வானம் போன்றது. குதிரையின் வாய் கடிவாளம் சுண்டியதால் காளைமாட்டைக் கடித்த புலியின் வாயைப் போன்றன. யானையின் கொம்பு பகைவர் கோட்டைக் கதவைக் குத்தி நுனி மழுங்கி உயிர் உண்ணும் எமனைப் போன்று ஆயிற்று. நீ குதிரைகள் பூட்டிய தேரில் கடலில் தோன்றும் கதிரவனைப் போலக் காட்சி தருகிறாய். இப்படியே என்றும் திகழ்வாயாக. உன்னைச் சீண்டியவர் நாடு தாய்ப்பால் குடிக்காத குழந்தை போல ஓயாமல் கூவிக்கொண்டே இருக்கட்டும். முந்தைய பாடல்
|
5
|
நரிவெரூஉத் தலையார்.
|
சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல்.
|
பாடாண்.
|
வெவியறிவுறூஉ: பொருண் மொழிக் காஞ்சியும் ஆம்.
|
பார்வையானே நோய் போக்கும் கண்ணின் சக்தி பற்றிய செய்தி.
|
எருமை அன்ன கருங்கல் இடை தோறு,
ஆனிற் பரக்கும் யானைய, முன்பின்,
கானக நாடனை!நீயோ, பெரும!
நீயோர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்;
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
5
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,
குழவி கொள் பவரின், ஓம்புமதி!
அளிதோ தானே; அது பெறல்அருங் குரைத்தே.
|
புறநானூறு - 5. அருளும் அருமையும்!
|
எருமைகள் போல் தோற்றமளிக்கும் கரிய நிறமுடைய கற்கள் நிறைந்த இடமெல்லாம் மாடுகளைப் போலப் பரவியிருக்கும் யானைகள் நிறைந்த வலிமையான காடுகளைக் கொண்ட நாட்டை ஆளும் தலைவனே! நீ இவ்வாறு வளமும், சிறப்பும் பெற்றவனாக இருப்பதால் உனக்கு ஒன்று சொல்கிறேன். கேட்பாயாக! அருளும், அன்பும் இல்லாமல், தீமைகள் செய்து, நரகத்தைத் தனது இடமாகக் கொண்டு வாழும் தீயவரோடு சேராமல், உனது நாட்டை, ஒரு குழந்தையை வளர்ப்பவர்கள் அக்குழந்தையைப் பாதுகாப்பது போல் பாதுகாப்பாயாக. அளிக்கத் தக்கது அக்காவல். அத்தகைய காக்கும் வாய்ப்பைப் பெறுவது அரியதாகும். குறிப்பு: ஒளவை துரைசாமி உரை - அருளும் அன்பும் நீக்கி, நீங்கா நிரயங் கொள்பவரொடு ஒன்றாது என்றமையால் பொருண்மொழிக் காஞ்சி ஆயிற்று. மதி - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26). அளிதோ தானே (8) - ஒளவை துரைசாமி உரை - அளிக்கத்தக்கது ஒன்று அதன் காவல், உ. வே. சாமிநாதையர் உரை - அளிக்கத்தக்கது ஒன்று அதன் காவல். அளிதோ தானே என்ற சொற்கள் வரும் பாடல்கள் (புறநானூறு 109-1, 111-1, 243-11) பிறவற்றில் இவ்விரு அறிஞர்களும் ‘இரங்கத்தக்கது அது’ என பொருள் கூறியுள்ளனர். குரை - ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப (தொல்காப்பியம், இடையியல் 24). சொற்பொருள்: எருமை - எருமை மாடுகள், அன்ன - போல, கருங்கல் - கரிய கற்கள், இடைதோறும் - இடங்கள் எல்லாம், ஆனின் - மாடுகளைப் போல், பரக்கும் - பரவியிருக்கும், யானைய - யானைகள் உடைய, முன்பின் - வலிமையான, கானக - காடுகளை அகத்தே கொண்ட, நாடனை - நாட்டினை உடையனாய் (நாடனை - ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது), நீயோ - நீ தான் (ஓகாரம் அசைநிலை), பெரும - பெருமகனே, நீயோர் ஆகலின் - நீ இவ்வாறு இருப்பதால், நின் - உனக்கு, ஒன்று - ஒன்று மொழிவல் - சொல்கிறேன், அருளும் - நெஞ்சில் ஈரமும், அன்பும் - அன்பும், நீக்கி - விலக்கி, நீங்கா - நீங்காத, நிரயம் - நரகம், கொள்பவரொடு - இடமாகக் கொள்பவரோடு, ஒன்றாது - சேராமல், காவல் - காக்கும் நாட்டை, காவல் - ஆகுபெயர் காக்கப்படும் நாட்டிற்கு, குழவி - குழந்தை, கொள்பவரின் - வளர்ப்பவர்களைப் போல் (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஓம்புமதி - பாதுகாப்பாயாக (மதி முன்னிலையசை), அளிதோ தானே - அளிக்கத் தக்கது அக்காவல் (அளிதோ - ஓகாரம் அசைநிலை, தானே - தான், ஏ அசைநிலைகள்), அது பெறல் - அத்தகைய காக்கும் வாய்ப்புப் பெறுவது, அருங்குரைத்தே - அரியது ஆகும் (அருங்குரைத்தே - குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று, ஏகாரம் அசைநிலை) முந்தைய பாடல்
|
6
|
காரிகிழார்.
|
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
|
பாடாண்.
|
செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
|
பாண்டியனின் மறமாண்பு.
|
வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,
குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்,
கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்
5
நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது
ஆனிலை உலகத் தானும், ஆனாது,
உருவும் புகழும் ஆகி, விரிசீர்த்
தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம்
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க!
10
செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்,
கடற்படை குளிப்ப மண்டி, அடர்ப் புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்,
பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து,
அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம்
15
பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்,
பணியியர் அத்தை நின் குடையே; முனிவர்
முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே!
இறைஞ்சுக, பெரும! நின் சென்னி; சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே!
20
வாடுக, இறைவ நின் கண்ணி! ஒன்னார்
நாடுசுடு கமழ்புகை எறித்த லானே!
செலிஇயர் அத்தை, நின் வெகுளி; வால்இழை
மங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே!
ஆங்க, வென்றி எல்லாம் வென்றுஅகத்துஅடக்கிய
25
தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!
தண்கதிர் மதியம் போலவும், தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்,
மன்னிய, பெரும! நீ நிலமிசை யானே!
|
புறநானூறு - 6. தண்ணிலவும் வெங்கதிரும்!
|
உன் உருவமும், புகழும் பரவ வேண்டும். வடக்கில் இமயமலைக்கு அப்பாலும், தெற்கில் குமரிமுனைக்குத் தென்பாலும், கிழக்கில் தோண்டப்பட்ட கடலுக்கு அப்பாலும், மேற்கில் பழமையான கடலுக்கு அப்பாலும், மூன்றாக அடுக்கப்பட்டுள்ள உலகங்களில் கீழே உள்ள உலகம், மேலே உள்ள உலகம் ஆகியவற்றிற்கு அப்பாலும் பரவ வேண்டும். உன் செங்கோல் ஒருபுறமும் சாயாமல் நடுவுநிலைமை கொண்டிருக்க வேண்டும். இப்படி உன் திறமை வெளிப்பட வேண்டும். உன் செயல்பாட்டுக்கு மாறுபட்ட பகைவர் நாட்டில்மீது உன் கடற்படையையும் யானைப்படையையும் ஏவி, அவர்களது பாசி பிடித்த அகழியையும், மதிலையும் கடந்து, அவர்களின் நாட்டில் பெற்ற அணிகலன்களை உன்னிடம் பரிசில் நாடி வரும் மக்களுக்கு அவர்களின் தரம் அறிந்து வழங்க வேண்டும். சிவபெருமான் ஊர்வலம் வரும்போது உன் குடை வணங்க வேண்டும். நான்மறை முதல்வர் உன்னிடம் கையேந்தும்போது நீ தலைவணங்க வேண்டும். நீ தலையில் சூடியுள்ள பூ நீ பகைவர் நாட்டை எரிக்கும் புகையால் மட்டுமே வாடவேண்டும். உன் சினம் உன் மனைவியர் ஊடும் முகத்தின்முன் காணாமல் போக வேண்டும். இப்படிப்பட்ட வெற்றியோடு தடையின்றி வழங்கும் தகைமை மிக்க ‘குடுமி’ என்னும் பெயர் கொண்ட அரசே! நீ குளுமையான நிலவு போலவும் ஒள மிக்க ஞாயிறு போலவும் இந்த நிலவுலகில் நிலைபெற்று வாழ்வாயாக! முந்தைய பாடல்
|
7
|
கருங்குழல் ஆதனார்.
|
சோழன் கரிகாற் பெருவளத்தான்.
|
வஞ்சி.
|
கொற்ற
|
களிறு கடைஇய தாள்,
கழல் உரீஇய திருந்துஅடிக்,
கணை பொருது கவிவண் கையால்,
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து
மா மறுத்த மலர் மார்பின்,
5
தோல் பெயரிய எறுழ் முன்பின்,
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல
இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ!
10
தண்புனல் பரந்த பூசல் மண் மறுத்து
மீனின் செறுக்கும் யாணர்ப்
பயன்திகழ் வைப்பின், பிறர் அகன்றலை நாடே.
|
புறநானூறு - 7. வளநாடும் வற்றிவிடும்!
|
களிற்றுப்படை, காலாள்படை ஆகியவற்றின் காலால் மிதித்தும், கை வளத்தால் அம்பு தொடுத்தும் பகைநாட்டை அழித்தாய். விரும்பி வந்த திருமகளை ஏற்க மறுத்த மலர்ந்த மார்பில் தோல் என்னும் கவசத்தை அணிந்திருக்கும் வலிமை மிக்க மார்பினை உடையவன் நீ. இரவு பகல் என்று பார்க்காமல் பகைநாட்டைச் சுட்டு அது எரியும் விளக்கில் அவர் நாட்டு மக்கள் அழுகுரலைக் கேட்பவன் நீ. இயல்தேர் வளவ! இது நல்லது அன்று. புனல் பாயும் வளநாட்டைக் காப்பதை மறுத்து மீன் பாயும் நாட்டில் இப்படிச் செய்யலாமா? முந்தைய பாடல்
|
|
8
|
கபிலர்.
|
சேரமான் கடுங்கோ வாழியாதன் : சேரமான் செல்வக்
|
பாடாண்.
|
இயன்மொழி; பூவை நிலையும் ஆம்.
|
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்,
போகம் வேண்டிப், பொதுச்சொல் பொறாஅது ,
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப,
ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகைக்,
கடந்து அடு தானைச் சேரலாதனை
5
யாங்கனம் ஒத்தியோ? வீங்குசெலல் மண்டிலம்!
பொழுதுஎன வரைதி; புறக்கொடுத்து இறத்தி;
மாறி வருதி; மலைமறைந்து ஒளித்தி;
அகல்இரு விசும்பி னானும்
பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே.
10
|
புறநானூறு - 8. கதிர்நிகர் ஆகாக் காவலன்!
|
விரைந்து செல்லும் கதிரவனே! உலகத்தைக் காக்கும் மன்னர்கள் தனக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்ற இன்பத்தை விரும்பி, இவ்வுலகம் யாவர்க்கும் பொது என்ற சொல் பொறுக்காமல், தன்னுடைய நாடு சிறியது என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு, ஊக்கமுடைய உள்ளத்துடன் குறையாத ஈகையுடனும் பகைவரை வெல்லும் படையையுடைய சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு நீ எவ்வாறு ஒப்பு ஆகுவாய்? நீ பகற்பொழுதை உனக்கென்று கூறுபடுத்துகின்றாய். பின் புறமுதுகிட்டு போகின்றாய். மாறி மாறி வருகின்றாய். மலையின் பின் மறைந்து ஒளிகின்றாய். அகன்ற பெரிய ஆகாயத்தில் பகல் பொழுதில் பல கதிர்களை விரித்து ஒளியுடன் விளங்குகின்றாய். குறிப்பு: பொழுது என வரைதி (7) - ஒளவை துரைசாமி உரை - என்பதற்கு காலத்தை பல பொழுதுகளாக (சிறுபொழுது பெரும்பொழுதுகளாக) வகுத்தற்கு ஏதுவாகுவை என்று உரைப்பினும் அமையும் உரை கிடந்தவாறே கொள்ளுமிடத்து. பகற்பொழுது நினக்கென கூறுபடுக்கும் நீ அப்பகல் போதில்தான் பல் கதிர்களையும் பரப்பி விளங்குவை என்றதாகக் கொள்க. சொற்பொருள்: வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக - உலகத்தைக் காக்கும் மன்னர்கள் தனக்குப் பணிந்து நடக்க, போகம் வேண்டி - இன்பத்தை விரும்பி, பொதுச் சொல் பொறாஅது - இவ்வுலகம் யாவர்க்கும் பொது என்ற சொல் பொறுக்காமல் (பொறாஅது - அளபெடை), இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப - தன்னுடைய நாடு சின்னது என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு, ஒடுங்கா உள்ளத்து - ஊக்கமுடைய உள்ளத்துடன், ஓம்பா ஈகைக் கடந்து அடு தானைச் சேரலாதனை யாங்கனம் ஒத்தியோ - குறையாத ஈகையுடனும் பகைவரை வெல்லும் படையையுடைய சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு நீ எவ்வாறு ஒப்பு ஆகுவாய் (ஒத்தியோ - ஒத்தி - முன்னிலை வினைமுற்று, ஓகாரம் வினா), வீங்கு செலல் மண்டிலம் - விரைந்து செல்லும் கதிரவனே, பொழுது என வரைதி - பகற்பொழுதை உனக்கென்று கூறுபடுத்துகின்றாய் (வரைதி - முன்னிலை வினைமுற்று), புறக்கொடுத்து இறத்தி - புறமுதுகிட்டு போகின்றாய் (இறத்தி - முன்னிலை வினைமுற்று), மாறி வருதி - மாறி மாறி வருகின்றாய் (வருதி - முன்னிலை வினைமுற்று), மலை மறைந்து ஒளித்தி - மலையின் பின் மறைந்து ஒளிகின்றாய் (ஒளித்தி - முன்னிலை வினைமுற்று), அகல் இரு விசும்பினானும் பகல் விளங்குதியால் பல் கதிர் விரித்தே - அகன்ற பெரிய ஆகாயத்தில் பகல் பொழுதில் பல கதிர்களை விரித்து ஒளியுடன் விளங்குகின்றாய் (விளங்குதியால் - ஆல் அசைநிலை, விரித்தே - ஏகாரம் அசைநிலை) முந்தைய பாடல்
|
|
9
|
நெட்டிமையார்.
|
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
|
பாடாண்.
|
இயன்மொழி. குறிப்பு : இதனுடன் காரிகிழாரின்
|
ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின் என
5
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
10
நன்னீர்ப் பறுளி மணலினும் பலவே!
|
புறநானூறு - 9. ஆற்றுமணலும் வாழ்நாளும்!
|
போர் அறம் - பசு, பசுப் போன்ற இயல்புடைய பார்ப்பனர், பெண்டிர், மரபுநோய் உள்ளவர், இறந்த முன்னோருக்குக் கடன் செலுத்தும் குழந்தைப்பேறு இல்லாதவர் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள். இங்கே என் அம்பு பாயும் போர் நிகழவிருக்கிறது - என்று அறவழி கூறியபின் போரிடும் பாங்குடையவன் இந்த அரசன். கொல்களிற்றின் மேல் கொடி தோன்ற இருந்துகொண்டு போரிடுபவன். இவன் என் அரசன். பெயர் குடுமித் தங்கோ (குடுமியான் மலை அரசன்). இவன் பஃறுளி ஆற்று மணலின் எண்ணுக்கையைக் காட்டிலும் பல்லாண்டுகள் வாழ்வானாக! பஃறுளி ஆறு நெடியோன் நாட்டில் ஓடிய ஆறு. இந்த நெடியோன் முந்நீர் விழா நடத்தியவன். அதில் யாழ் மீட்டும் பாணர்களுக்கு தூய பொன் அணிகளை வழங்கியவன். முந்தைய பாடல்
|
|
10
|
சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி.
|
பாடாண்.
|
இயன்மொழி.
|
வழிபடு வோரை வல்லறி தீயே!
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;
நீமெய் கண்ட தீமை காணின்,
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
5
தண்டமும் தணிதி, நீ பண்டையிற் பெரிதே;
அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப!
10
செய்து இரங்காவினைச், சேண்விளங் கும்புகழ்,
நெய்தருங் கானல் நெடியோய்!
எய்த வந்தனம்யாம்; ஏத்துகம் பலவே!
|
புறநானூறு - 10. குற்றமும் தண்டனையும்!
|
நெய்தலங்கானல் நெடியோய்! உன்னை வாழ்த்தி வேண்டுகிறேன். வழிபடுவோர் உன்னை எதற்காக வழிபடுகின்றனர் என்பதை உடனே தெரிந்துகொள். பிறன்மீது பழி கூறுபவர்களின் சொல்லை நம்பாதே. நீ ஒருவனிடம் உண்மையாகவே தீமையைக் கண்டால் ஒத்திட்டு ஆராய்ந்து தக்க தண்டனை வழங்கு. அவர் தன் தவற்றை உணர்ந்து உன் காலடியில் வணங்கி நின்றால் பண்டைய தண்டனையைக் குறை. மகளிர் அமிழ்தம் போலச் சமைத்து வந்தவர்க்கெல்லாம் வழங்கும் குற்றமற்ற வாழ்க்கையை உடையவர்கள் மகளிர். அவர்கள் தழுவுதல் அன்றி போரிடும் மள்ளர் தழுவ முடியாத கல்மலை போன்ற மார்பினை உடையவன் நீ. செய்துவிட்டு வருந்தாத நற்செயல்களைப் புரிபவன் நீ. அதனால் உன் புகழ் விளங்குகிறது. நெய்தலங்கானல் நிலத்தெய்வம் (நெடியான்) நீ. உன்னை நாடி வந்திருக்கிறேன். பலவாகப் பாராட்டிப் புகழ்கிறேன். முந்தைய பாடல்
|
||
11
|
பேய்மகள் இளவெயினியார்.
|
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
|
பாடாண்.
|
பரிசில் கடாநிலை.
|
அரி மயிர்த் திரள் முன்கை
வால் இழை, மட மங்கையர்
வரி மணற் புனை பாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து
தண் பொருநைப் புனல் பாயும்
5
விண் பொருபுகழ், விறல்வஞ்சிப்
பாடல் சான்ற விறல்வேந் தனும்மே
வெப் புடைய அரண் கடந்து,
துப்புறுவர் புறம்பெற் றிசினே:
புறம் பொற்ற வய வேந்தன்
10
மறம் பாடிய பாடினி யும்மே,
ஏர் உடைய விழுக் கழஞ்சின்,
சீர் உடைய இழை பெற்றிசினே!
இழை பெற்ற பாடி னிக்குக்
குரல் புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே.
15
என ஆங்கு,
ஒள்அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.
|
புறநானூறு - 11. பெற்றனர்! பெற்றிலேன்!
|
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடலால் புகழ் பெற்ற வஞ்சி நகர வேந்தன். இந்த வஞ்சி தண்பொருநை ஆறு பாயும் நகரம். வானளாவிய புகழும் வெற்றியும் உடைய நகரம். இந்தப் பொருநை ஆற்று மணலில் பாவை செய்து பூப் பறித்துவந்து சூட்டி மகளிர் விளையாடுவர். இவர்கள் மென்மையான மயிர் கொண்ட தம் திரண்ட கைகளையும், வெண்ணிற இழையணியும் கொண்டவர்கள். பாவைக்குப் பூச்சூட்டிய பின்னர் பொருநை ஆற்றுப் புனல்நீரில் பாய்ந்து விளையாடுவர். இவன் விரும்பிய கோட்டைகளையெல்லாம் வென்றவன். வலிமை மிக்க பெரியவர்களைப் புறங்கண்டவன். இவ்வாறு இவன் புறங்கண்ட வீரச் செருக்கைப் பாடினாள் ஒரு பாடினி. அதற்காக இவன் கழஞ்சு நிறைக்கு மிகுதியாக ஏரழகும், சீர்சிறப்பும் உடைய அணிகலன்களைப் பாடினிக்குப் பரிசாக வழங்கினான். பாடிய பாடினிக்கு உடன் - குரல் கொளைப்பண் தந்த பாணனுக்கு வெள்ளி - நாரால் தொடுத்த தங்கத் தாமரைப் பூவைப் பரிசாக வழங்கினான். முந்தைய பாடல்
|
|
12
|
நெட்டிமையார்.
|
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
|
பாடாண்.
|
இயன்மொழி.
|
பாணர் தாமரை மலையவும், புலவர்
பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்,
அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி!
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு,
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே?
5
|
புறநானூறு - 12. அறம் இதுதானோ?
|
முதுகுடுமிப் பெருவழுதியே! பாணர்க்குப் பொன்னால் செய்த தாமரை மாலை சூட்டியும், புலவர்க்கு அலங்கரிக்கப்பட்ட தேருடன் நெற்றியில் பொற்பட்டத்தால் அலங்கரிக்கப்பட்ட யானையையும் அளித்து, உன்னிடம் பரிசு பெறுவோர்க்கு நீ நல்லவை செய்து, மறுபுறம் உன் பகைவர்களுக்கு துன்பம் நேரும்படி அவர்களுடைய நாட்டை வெற்றி கொள்வது அறமான செயல்தானா? குறிப்பு: இது பழித்தது போல் புகழ்ந்தது. சொற்பொருள்: பாணர் - பாடல் இசைப்பவர்கள், தாமரை - பொற்றாமரை மலர்கள், மலையவும் - சூடவும், புலவர் - புலவர்கள், பூ - பொற்பட்டம் (யானைகளின் நெற்றியில் சூடும் அணிகலன்), நுதல் - நெற்றி, யானையோடு - யானையோடு, புனை - அலங்கரிக்கப்பட்ட, தேர் - தேர், பண்ணவும் - அமைக்கவும், அறனோ - அறம் தானோ, மற்று - அசைநிலை, இது - இவ்வாறு செய்தல், விறல் - வெற்றி, மாண் - மாட்சி, பெருமை, குடுமி - பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, இன்னா ஆக - துன்பம் ஆகுமாறு, பிறர் மண் கொண்டு - பிறர் நாட்டை வெற்றி கொண்டு, இனிய - இனியவற்றை, செய்தி - செய்வை (செய்தி - முன்னிலை வினைமுற்று), நின் - உன்னிடம், ஆர்வலர் - பரிசு பெறுவோர், முகத்தே - இடத்தில் (முகத்தே - ஏகாரம் அசைநிலை) முந்தைய பாடல்
|
|
13
|
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
|
சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி.
|
பாடாண்.
|
வாழ்த்தியல்
|
இவன் யார்? என்குவை ஆயின், இவனே,
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய,
எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்,
மறலி அன்ன களிற்றுமிசை யோனே;
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்,
5
பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்,
சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப,
மரீஇயோர் அறியாது, மைந்துபட் டன்றே;
நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம!
பழன மஞ்ஞை உகுத்த பீலி
10
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்,
கொழுமீன், விளைந்த கள்ளின்,
விழுநீர் வேலி நாடுகிழ வோனே.
|
புறநானூறு - 13. நோயின்றிச் செல்க!
|
இவன் யார் என்று கேட்பாயானால், சொல்கிறேன் கேள். அழகிய நெஞ்சில் புலிநிறம் பட்ட கவசம் அணிந்தவன். அந்த நிறம் பிறர் எய்த அம்புகளால் உருவானது. எமன் போன்ற களிற்றின்மேல் உள்ளான். அது கடலில் மிதக்கும் நாவாய்க் கப்பல் போல் வருகிறது. அதனைச் சூழ்ந்து சுறாமீன் கூட்டம் போல் வாள்வீரர்கள் மொய்த்துக்கொண்டு வருகின்றனர். அந்தக் களிற்றுக்கு மதம் பிடித்துவிட்டது என்பது அந்த வாள்வாரர்களுக்குத் தெரியவில்லை. அம்மம்ம! அவன் துன்பம் இல்லாமல் திரும்புவானாக! மயில் உகுத்த தோகையை உழவர் நெல் கட்டோடு சேர்த்துக் கட்டும் வயல்நாட்டை உடையவன் அவன். கொழுத்த மீனில் விளைந்த கள்ளைப் பருகும் மக்கள் பருகும் நாட்டை உடையவன் அவன். முந்தைய பாடல்
|
|
14
|
கபிலர்.
|
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.
|
பாடாண்.
|
இயன்மொழி
|
கடுங்கண்ண கொல் களிற்றால்
காப் புடைய எழு முருக்கிப்,
பொன் இயல் புனை தோட்டியான்
முன்பு துரந்து, சமந் தாங்கவும்;
பார்உடைத்த குண்டு அகழி
5
நீர் அழுவம் நிவப்புக் குறித்து,
நிமிர் பரிய மா தாங்கவும்;
ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்;
பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும்; குரிசில்!
10
வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை,
புலவு நாற்றத்த பைந்தடி
பூ நாற்றத்த புகை கொளீஇ, ஊன்துவை
கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது
பிறிதுதொழில் அறியா ஆகலின், நன்றும்
15
மெல்லிய பெரும! தாமே, நல்லவர்க்கு
ஆரணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு
இருநிலத்து அன்ன நோன்மை
செருமிகு சேஎய் ! நின் பாடுநர் கையே.
|
புறநானூறு - 14. மென்மையும்! வன்மையும்!
|
கோட்டைக்கதவுத் தடைமரத்தை முரிக்கக் கொல்களிற்றைப் பொன்பூண் போட்ட அங்குசத்தால் வலிமையுடன் குத்திப் போரிட்டுத் தாக்கவும், நிலத்தைப் பிளந்து உருவாக்கிய அகழி நீரை நிவந்து தாண்டும்படிப் போர்க்குதிரைகளை இழுத்துப் பிடிக்கவும், தேர்மீது இருந்துகொண்டு வில்லின் நாணை வலிமையாக இழுத்து எதிராளி வடுக் கொள அம்பு எய்யவும், பரிசிலர்களுக்கு அரிய அணிகலன்களை வழங்கவும். வலிமையாக உள்ளது. என் கை மென்மையாக உள்ளது. ஏனென்றால்… புலால் நாறும் கறித்துண்டைப் பூமணம் கமழும் தீயில் வாட்டி, உணவும், துவையலும், கறிச்சோறுமாக நீ வழங்கியதை உண்டு வருந்தும் தொழில் அல்லது வேறு தொழில் அறியாததால் மென்மையாக உள்ளது. முந்தைய பாடல்
|
|
15
|
கபிலர்.
|
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.
|
பாடாண்.
|
இயன்மொழி
|
கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,
வெள்வாய்க் கழுதைப் புல்லினப் பூட்டிப்,
பாழ்செய் தனை, அவர் நனந்தலை நல்லெயில்;
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்,
வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்
5
தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்துத்;
துளங்கு இயலாற், பணை எருத்தின்,
பா வடியாற்,செறல் நோக்கின்,
ஒளிறு மருப்பின் களிறு அவர
காப் புடைய கயம் படியினை;
10
அன்ன சீற்றத்து அனையை; ஆகலின்,
விளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகையொடு
நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்,
நசைதர வந்தோர் நசைபிறக்கு ஒழிய,
15
வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்? புரையில்
நற் பனுவல் நால் வேதத்து
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்கப், பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,
20
யூபம் நட்ட வியன்களம் பலகொல்?
யாபல கொல்லோ? பெரும! வார் உற்று
விசிபிணிக் கொண்ட மண்கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே.
25
|
புறநானூறு - 15. எதனிற் சிறந்தாய்?
|
நீ சினம் மிக்கவன். அதனால் பகைவர் நாட்டில் தேர் நடத்தினாய். அந்தத் தேர்க்கால் பள்ளத்தில் கழுதை - ஏர் பூட்டி உழுதாய். அவரது கோட்டைகளை அழித்தாய். பறவைகள் மேயும் விளைவயல்கள் உன் குதிரைக் குளம்புகளால் மிதிபடத் தேரோட்டினாய். நடை பயில்வதும், பருத்த முதுகுக் கொட்டேறியும், பரந்த காலடியும், அழிக்கும் பார்வையும், ஒளி வீசும் கொம்புகளையும் கொண்டதுமான உன் யானைகளை ஊர்மக்கள் குடிப்பதற்காகப் பாதுகாக்கப்பட்ட குளத்தில் குளித்துத் திளைக்கும்படி செய்தாய். இப்படிப்பட்ட சீற்றம் கொண்டவன் நீ. பொன் - கேடயமும் வேலும் ஏந்தி பகைவர் நடத்திய காலாள் படையை வெல்லும் ஆசையோடு போரிட்டும், ஏமாந்தும் மக்கள் வசை பாட வாழ்ந்தவர் பலரா? அல்லது, நால்வேதச் சிறப்புக் குழியில் நெய் ஊற்றி ஆவி பொங்க வேள்வி செய்து தூண் நட்டுச் சிறப்பெய்தியவர் பலரா? கனை - முழவினை முழக்கிக்கொண்டு உன்னைப் பாடும் பாடினியின் வஞ்சிப் பாடலை விரும்பும் வலிமை மிக்கவனே! முந்தைய பாடல்
|
|
16
|
பாண்டரங் கண்ணனார்.
|
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி.
|
வஞ்சி.
|
வினை மாட்சிய விரை புரவியொடு,
மழை யுருவின தோல் பரப்பி,
முனை முருங்கத் தலைச்சென்று, அவர்
விளை வயல் கவர்பு ஊட்டி
மனை மரம் விறகு ஆகக்
5
கடி துறைநீர்க் களிறு படீஇ
எல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்,
புலம்கெட இறுக்கும் வரம்பில் தானைத்,
துணை வேண்டாச் செரு வென்றிப்,
10
புலவு வாள் புலர் சாந்தின்
முருகன் சீற்றத்து, உருகெழு குருசில்!
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல்,
பனிப் பகன்றைக், சுனிப் பாகல்,
கரும்பு அல்லது காடு அறியாப்
15
பெருந் தண்பணை பாழ் ஆக,
ஏமநன் னாடு ஒள்எரி ஊட்டினை,
நாம நல்லமர் செய்ய,
ஒராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே.
|
புறநானூறு - 16. செவ்வானும் சுடுநெருப்பும்!
|
செயல்திறம் மிக்க குதிரைப்படை, மழைமேகம் போன்ற காலால் - படை ஆகியவை முரியும்படி போரிட்டான். அவர்களது விளைவயல்களில் தம் குதிரைகளை மேயவிட்டான். அவர்களது வீட்டு - மரங்களை எரிக்கும் விறகாக்கிக்கொண்டான். காவல் மிக்க அவர்களது நீர்த் துறைகளில் களிறுகளைக் குளிக்கும்படிச் செய்தான். பட்டப்பகலில் அவன் ஊரை எரிக்கும் தீ மாலையில் சூரியன் மறையும்போது தோன்றுவது போல வானத்தைச் செந்நிறம் கொள்ளச் செய்தது. நிலத்தில் துகள் பரக்கச்செய்யும் வரம்பில்லாத பெரும்படை கொண்டவன். யாரையும் துணைக்குச் சேர்த்துக் கொள்ளாமல் தானே வெற்றி கண்டவன். கையிலே புலால் நாறும் வாள். மார்பிலே சந்தனம். கடவுள் முருகன் போல் சீற்றமும் உருவமும் கொண்டவன். வள்ளை, ஆம்பல், பகன்றை, பாகல், கரும்பு ஆகியவற்றைக் கொண்ட வயல்நாடு பாழாகும்படி எரி ஊட்டினான். இதற்கு உதவியது இவனது யானை. முந்தைய பாடல்
|
||
17
|
சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
|
அரசவாகை; இயன்மொழியும் ஆம்.
|
தென் குமரி, வட பெருங்கல்,
குண குட கடலா வெல்லை,
குன்று, மலை, காடு, நாடு
ஒன்று பட்டு வழி மொழியக்,
கொடிது கடிந்து, கோல் திருத்திப்,
5
படுவது உண்டு, பகல் ஆற்றி,
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல!
குலை இறைஞ்சிய கோள் தாழை
அகல் வயல், மலை வேலி,
10
நிலவு மணல் வியன் கானல்,
தெண் கழிமிசைச் சுடர்ப் பூவின்,
தண் தொண்டியோர் அடு பொருந!
மாப் பயம்பின் பொறை போற்றாது,
நீடு குழி அகப் பட்ட
15
பீடு உடைய எறுழ் முன்பின்
கோடு முற்றிய கொல் களிறு,
நிலை கலங்கக் குழி கொன்று,
கிளை புகலத் தலைக்கூடி யாங்கு
நீ பட்ட அரு முன்பின்,
20
பெருந் தளர்ச்சி, பலர் உவப்பப்,
பிறிது சென்று, மலர் தாயத்துப்
பலர் நாப்பண் மீக் கூறலின்,
உண் டாகிய உயர் மண்ணும்,
சென்று பட்ட விழுக் கலனும்,
25
பெறல் கூடும், இவன்நெஞ்சு உறப்பெறின்எனவும்,
ஏந்து கொடி இறைப் புரிசை,
வீங்கு சிறை, வியல் அருப்பம்,
இழந்து வைகுதும்.இனிநாம்; இவன்
உடன்று நோக்கினன், பெரிது எனவும்,
30
வேற்று அரசு பணி தொடங்குநின்
ஆற்ற லொடு புகழ் ஏத்திக்,
காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய
மழையென மருளும் பல் தோல், மலையெனத்
தேன்இறை கொள்ளும் இரும்பல் யானை,
35
உடலுநர் உட்க வீங்கிக், கடலென
வான்நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது
கடுஒடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப,
இடியென முழங்கு முரசின்,
வரையா ஈகைக் குடவர் கோவே!
40
|
புறநானூறு - 17. யானையும் வேந்தனும்!
|
பொருளுரை: not found in the page
|
|||
18
|
பாண்டியன் நெடுஞ்செழியன். திணை: பொதுவியல்.
|
பொதுவியல்.
|
முதுமொழிக் காஞ்சி : பொருண்மொழிக் காஞ்சி எனவும் பாடம்.
|
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து, தம்புகழ் நிறீஇ:
ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்!
ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய
5
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே!
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்
பூக் கதூஉம் இன வாளை,
நுண் ஆரல், பரு வரால்,
குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி;
10
வான் உட்கும் வடிநீண் மதில்;
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,
ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
15
நல்இசை நிறுத்தல் வேண்டினும், மற்றதன்
தகுதி கேள், இனி, மிகுதியாள!
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
20
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்புற்று ஆயினும், நண்ணி ஆளும்
25
இறைவன் தாட்குஉத வாதே; அதனால்,
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண்தட் டோரே;
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே.
30
|
புறநானூறு - 18. நீரும் நிலனும்!
|
பொருளுரை: not found in the page
|
||
19
|
குடபுலவியனார்.
|
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
|
வாகை.
|
அரசவாகை.
|
இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து,
மன்உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும்.
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய!
இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய
5
பெருங்கல் அடாரும் போன்ம் என விரும்பி,
முயங்கினேன் அல்லனோ யானே! மயங்கிக்
குன்றத்து இறுத்த குரீஇஇனம் போல,
அம்புசென்று இறுத்த அறும்புண் யானைத்
தூம்புஉடைத் தடக்கை வாயொடு துமிந்து.
10
நாஞ்சில் ஒப்ப, நிலமிசைப் புரள,
எறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர்
எந்தையோடு கிடந்தோர் எம்புன் தலைப்புதல்வர்;
இன்ன விறலும் உளகொல், நமக்கு?என,
மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணிக்
15
கூற்றுக்கண் ஓடிய வெருவரு பறந்தலை,
எழுவர் நல்வலங் கடந்தோய்! நின்
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே?
|
புறநானூறு - 19. எழுவரை வென்ற ஒருவன்!
|
பொருளுரை: not found in the page
|
|
20
|
குறுங்கோழியூர்கிழார்.
|
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை;
|
வாகை.
|
அரச வாகை.
|
இரு முந்நீர்க் குட்டமும்,
வியன் ஞாலத்து அகலமும்,
வளி வழங்கு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்றாங்கு
அவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை;
5
அறிவும், ஈரமும், பெருங்க ணோட்டமும்;
சோறு படுக்கும் தீயோடு
செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது
பிறிது தெறல் அறியார் நின் நிழல்வாழ் வோரே;
திருவில் அல்லது கொலைவில் அறியார்;
10
நாஞ்சில் அல்லது படையும் அறியார்;
திறனறி வயவரொடு தெவ்வர் தேய, அப்
பிறர்மண் உண்ணும் செம்மல்; நின் நாட்டு
வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது,
பகைவர் உண்ணா அருமண் ணினையே;
15
அம்பு துஞ்சும்கடி அரணால்,
அறம் துஞ்சும் செங்கோலையே;
புதுப்புள் வரினும், பழம்புள் போகினும்,
விதுப்புற அறியா ஏமக் காப்பினை;
அனையை ஆகல் மாறே,
20
மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே.
|
புறநானூறு - 20. மண்ணும் உண்பர்!
|
கடலின் ஆழத்தையும், உலகின் பரப்பையும், காற்று வாழும் திசையையும், ஏதுமில்லாத ஆகாயத்தையும் என்று எல்லாவற்றையும் அளந்து அறிந்தாலும் உன்னை அளக்க முடியாது. உன் ஆட்சிக்குடை நிழலில் வாழ்பவர்கள் உன் அறிவு, இரக்கம், உதவும் எண்ணம் (கண்ணோட்டம்) ஆகியவற்றை அறிவர். அவர்களுக்குச் சோறாக்கும் தீ, வெயில் ஆகியவற்றின் சூடு அல்லது வேறு சூடு தெரியாது. (பகைவர் ஊரைக் கொளுத்துதல் இல்லை) வானவில் அல்லது (பகைவரின்) கொலைவில் தெரியாது. நிலத்தை உழும் கலப்பைப்படை அல்லது (பகைவர் தாக்கும்) கருவிப்படை தெரியாது. உன்னை எதிர்க்கும் படைத்திறம் அறிந்த வல்லாளரும், பகைவரும் தேயப் படைவர் மண்ணை நீ உண்டாய். ஆனால் உன் மண்ணைக் கருவுற்ற பெண்கள் உண்பதைத் தவிர வேறு யாரும் உண்டு அறியார். உன் கோட்டையில் அம்புகள் வேலை இல்லாமல் தூங்குகின்றன. நாட்டில் செங்கோல் அறம் தூங்குகிறது. உன் நாட்டுக்குள் புதிய பறவைகள் வந்தாலும், பழைய பறவைகள் போனாலும் மக்கள் விறுவிறுப்பு காட்டாமல் பாதுகாப்பாக வாழ்கின்றனர். முந்தைய பாடல்
|
|
21
|
ஐயூர் மூலங்கிழார்.
|
கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி.
|
வாகை.
|
அரசவாகை.
|
புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்!
நிலவரை இறந்த குண்டுகண் அகழி,
வான்தோய் வன்ன புரிசை, விசும்பின்
மீன்பூத் தன்ன உருவ ஞாயில்,
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை,
5
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்,
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன,
வேங்கை மார்பின் இரங்க வைகலும்
ஆடுகொளக் குழைந்த தும்பைப், புலவர்
10
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே!
இகழுநர் இசையொடு மாயப்,
புகழொடு விளங்கிப் பூக்க, நின் வேலே!
|
புறநானூறு - 21. புகழ்சால் தோன்றல்!
|
மண்ணின் ஆழம் வரையில் தோண்டிய அகழி, வான் அளாவும் மதில், மீன் பூத்தது போல் தோன்றும் ஞாயில் (மதில் - ஆள் - இருக்கைகள்), சூரிய ஒளி புகாவண்ணம் இருண்டிருக்கும் காவல் - காடுகள், கடத்தற்கு அரிய காவலர்களைக் கொண்ட கூடாரங்கள் (குறும்பு) - ஆகியவற்றைக் பொண்ட கானப்பேர் நகரக் கோட்டையை - காய்ச்சிய இரும்பு உண்டது போல மீட்டுக்கொள்ள முடியாதது என்று போற்றப்பட்ட கோட்டையை, அதன் அரசன் வேங்கை மார்பன் நாள்தோறும் வருந்தும்படி குழையச்செய்த வெற்றி வேந்தே! உன்னை இகழ்பவர் உன் புகழைப் பாடிச் சாகும்படி உன் வேல் பூக்கட்டும். முந்தைய பாடல்
|
|
22
|
குறுங்கோழியூர் கிழார்.
|
சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை.
|
வாகை.
|
அரசவாகை.
|
தூங்கு கையான் ஓங்கு நடைய,
உறழ் மணியான் உயர் மருப்பின,
பிறை நுதலான் செறல் நோக்கின,
பா வடியால் பணை எருத்தின,
தேன் சிதைந்த வரை போல,
5
மிஞிறு ஆர்க்கும் கமழ்கடா அத்து,
அயறு சோரூம் இருஞ் சென்னிய,
மைந்து மலிந்த மழ களிறு
கந்து சேர்பு நிலைஇ வழங்கப்:
பாஅல் நின்று கதிர் சோரும்
10
வான உறையும் மதி போலும்
மாலை வெண் குடை நீழலான்,
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க,
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
ஆய் கரும்பின் கொடிக் கூரை,
15
சாறு கொண்ட களம் போல,
வேறு வேறு பொலிவு தோன்றக்
குற் றானா உலக் கையால்;
கலிச் சும்மை வியல் ஆங்கண்
பொலம் தோட்டுப் பைந் தும்பை
20
மிசை அலங்கு உளைய பனைப்போழ் செரிஇச்,
சின மாந்தர் வெறிக் குரவை
ஓத நீரில் பெயர்பு பொங்க;
வாய் காவாது பரந்து பட்ட
வியன் பாசறைக் காப் பாள!
25
வேந்து தந்த பணி திறையாற்
சேர்ந் தவர் கடும்பு ஆர்த்தும்,
ஓங்கு கொல்லியோர், அடு பொருந!
வேழ நோக்கின் விறல்வெம் சேஎய்!
வாழிய, பெரும! நின் வரம்பில் படைப்பே!
30
நிற் பாடிய அலங்கு செந்நாப்
பிற்பிறர் இசை நுவ லாமை,
ஒம்பாது ஈயும் ஆற்றல் எங்கோ!
மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
புத்தேள் உலகத்து அற்று எனக் கேட்டு, வந்து
35
இனிது காண்டிசின்: பெரும! முனிவிலை,
வேறுபுலத்து இறுக்கும் தானையோடு
சோறுயட நடத்தி; நீ துஞ்சாய் மாறே!
|
புறநானூறு - 22. ஈகையும் நாவும்!
|
களிறு தொங்கும் கை, பெருமித நடை, ஒலிக்கும் மணி, மேலே வளைந்து உயர்ந்திருக்கும் கொம்பு, பிறை போன்ற நெற்றி, சினம் கொண்ட பார்வை, விரிந்த காலடி, பருத்த கழுத்து, தேன் சிந்தும் மலை போல வண்டு மொய்க்க ஒழுகும் மதநீர், இரும்பைப் போன்ற தலை, வலிமை - ஆகியவற்றைக் கொண்ட உன் வாலிபக் களிறு அதன் நிலைகளத்தில் கட்டிக் கிடக்கிறது. பால் ஒழுகும் நிலா போன்று மாலை தொங்கும் உன் வெண்கொற்றக் குடை காப்பு இல்லாமல் அதன் நிழலில் காப்போர் உறங்குகின்றனர். நெல்லோடு வேயப்பட்ட நெல்லந்தாள் கூரை வீடும், கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருகின்றன. உலக்கையால் குற்றும் பாடல் ஒலி கேட்கிறது. போர் இல்லாததால் சினம் கொண்ட மக்கள் தும்பைப் பூவையும் பனம்பூவையும் சூடிக்கொண்டு குரவை ஆடி மகிழும் ஒலி கடலொலி போல முழங்கிக்கொண்டே இருக்கிறது. நீயோ வாயில் காப்பு இல்லாத பாசறையில் இருக்கிறாய். அங்கு வேந்தர்கள் உனக்குத் தந்த திறைப் பொருள்களை உன் அரசுச் சுற்றத்தாருக்கு வழங்கி மகிழ்கிறாய். கொல்லிமலை நாட்டை வென்ற பின்னர் உனக்கு இந்த நிலை. வேழநோக்குபோர் இல்லாத இந்த அமைதிப் பார்வைதான் வேழநோக்கு. இது விறல் நோக்கு. (வெற்றிப் பெருமித நோக்கு) அதனால் நீ வேழ நோக்கின் விறல் வெஞ்சேய். (யானை நோக்குடைய வெற்றியும் விரும்பத்தக்க சாயலும் கொண்ட முருகன்) வாழிய, பெரும! உன் படைப்புகளும் வாழ்க. உன்னைப் பாடிய என் நாக்கு வேறு யாரையும் பாடாவண்ணம் எனக்குக் கொடை வழங்குபவன் நீ. நீ மாந்தரஞ்சேரல் இரும்பொறை. நீ பாதுகாக்கும் நாடு வானுலகம் போல மகிழ்ச்சியில் திளைக்கிறது எனச் சொல்லக் கேட்டு வந்து காண்கிறேன். சினம் இல்லாமல் மற்றவர் நிலத்தில் படை நடத்தி நீடு வாழ்வாயாக! முந்தைய பாடல்
|
|
23
|
கல்லாடனார்.
|
பாண்டியன் தலையாலங் கானத்து நெடுஞ்செழியன்.
|
வாகை.
|
அரச வாகை; நல்லிசை வஞ்சியும் ஆம்.
|
வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்,
களிறுபடிந்து உண்டெனக், கலங்கிய துறையும்!
கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்,
சூர்நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின்
கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர்
5
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில்
கொள்பதம் ஒழிய வீசிய புலனும்;
வடிநவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும்
கடிமரம் துளங்கிய காவும்; நெடுநகர்
வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்பக்,
10
கனைஎரி உரறிய மருங்கும்; நோக்கி,
நண்ணார் நாண, நாள்தொறும் தலைச்சென்று,
இன்னும் இன்னபல செய்குவன், யாவரும்
துன்னல் போகிய துணிவினோன், என,
ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை
15
ஆலங் கானத்து அமர்கடந்து அட்ட
கால முன்ப! நின் கண்டனென் வருவல்;
அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச்,
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை
20
வேளை வெண்பூக் கறிக்கும்
ஆளில் அத்தம் ஆகிய காடே.
|
புறநானூறு - 23. நண்ணார் நாணுவர்!
|
நெடுஞ்செழியன் தலையாலங்கானப் போரில் வென்று அழித்த பகைவர் நாட்டின் அழிவைப் பற்றிக் கல்லாடனார் கூறும் பாடல் இது. கொட்டகையில் (வெளிறு இல்லில்) கட்டப்பட்டிருப்பதை வெறுத்த யானை கலக்கிய நீர்த்துறை. நெடுஞ்செழியனின் படை கடம்பு சூடிப் போரிட்ட முருகனின் கூளியர் படை போல பகைநாட்டில் வேண்டிய அளவு உண்டது போக வீசி எறிந்திருக்கும் நிலம். படை கோடாரியால் வெட்டிச் சாய்த்த காட்டரண், படை எரி ஊட்டிய நகர்ப் பகுதி, இவற்றையெல்லாம் அந்த நாட்டு அரசர்கள் பார்த்து நாணி, நம்மால் நெருங்க முடியாத அந்தத் துணிவாளன் உலகம் நெளியக்கூடிய பெருபடையை நடத்தி இன்னும் வந்து இன்னது செய்வான் என நடுங்கும் நாட்டைக் கண்டு வந்தேன். ஆண்மான் புலிவாயில் பட்டதை எண்ணிப் பெண்மான் பூளாப் பூ நிறைந்த காட்டில் வேளைச் செடியின் வெள்ளைப் பூக்களைக் கறிக்கும் நாடாக இப்போது அவர்களின் நாடு உள்ளது. முந்தைய பாடல்
|
|
24
|
மாங்குடி கிழவர்:மாங்குடி
|
பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற
|
பொதுவியல்.
|
பொருண்மொழிக் காஞ்சி.
|
நெல் அரியும் இருந் தொழுவர்
செஞ் ஞாயிற்று வெயில் முனையின்,
தென் கடல்திரை மிசைப்பா யுந்து;
திண் திமில் வன் பரதவர்
வெப் புடைய மட் டுண்டு,
5
தண் குரவைச் சீர்தூங் குந்து;
தூவற் கலித்த தேம்பாய் புன்னை
மெல்லிணர்க் கன்ணி மிலைந்த மைந்தர்
எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து;
வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
10
முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்,
பூங் கரும்பின் தீஞ் சாறும்
ஓங்கு மணற் குலவுத் தாழைத்
தீ நீரோடு உடன் விராஅய்,
15
முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும்;
தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய
ஒம்பா ஈகை மாவேள் எவ்வி
புனலம் புதவின் மிழலையொடு_ கழனிக்
கயலார் நாரை போர்வில் சேக்கும்,
20
பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்,
குப்பை நெல்லின், முத்தூறு தந்த
கொற்ற நீள்குடைக், கொடித்தேர்ச் செழிய!
நின்று நிலைஇயர் நின் நாண்மீன்; நில்லாது
படாஅச் செலீஇயர், நின்பகைவர் மீனே;
25
நின்னொடு, தொன்றுமூத்த உயிரினும், உயிரொடு
நின்று மூத்த யாக்கை யன்ன, நின்
ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த
வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த,
இரவன் மாக்கள் ஈகை நுவல,
30
ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப, மகிழ்சிறந்து,
ஆங்குஇனிது ஒழுகுமதி, பெரும! ஆங்கது
வல்லுநர் வாழ்ந்தோர், என்ப, தொல்லிசை,
மலர்தலை உலகத்துத் தோன்றிப்
35
பலர்செலச் செல்லாது, நின்று விளிந் தோரே.
|
புறநானூறு - 24. வல்லுனர் வாழ்ந்தோர்!
|
நல்லூர் மிழலைக் கழனி (நன்செய் வயல்) வேளாளர் தொன்றுமுதிர் வேளிர். இவர்களின் நெல் அறுக்கும் தொழுவர் (தொழிலாளர்) வெயில் கடுமையாக இருந்தால் கடலலையில் பாய்ந்து தணித்துக்கொள்வர். திமிலில் சென்று கடலில் மீன் பிடித்துத் திரும்பிய பரதவர் சூடான மட்டுக் கள் உண்டு குரவை ஆடிக்கொண்டு பாடுவர். அவ்வூர் மைந்தர் (வாலிபர்) தூவலில் பூக்கும் புன்னை மலரைத் தலையில் அணிந்துகொண்டு வளையல் கை மகளிரொடு ‘தழூஉ’ (துணங்கை) ஆடுவர். அவ்வூர் வளையல்கை மகளிர் (பருவப் பெண்கள்) கானலில் பூக்கும் முண்டக மலர் மாலை அணிந்துகொண்டு மூன்று வகையான தீஞ்சுவை நீரைக் கலந்து உண்டு மகிழ்ந்து கடல்நீரில் பாய்ந்து விளையாடுவர். பனங்குரும்பை தரும் நீர், கருப்பஞ்சாறு, தாழையில் இறக்கிய நீர் ஆகியவற்றின் கலவையே அவர்கள் உண்ட முந்நீர். நல்ல விளைச்சல் தரும் நல்லூர்க் கழனியில் நாரை கயல்மீன்களை மேய்ந்தபின் வைக்கோல் போரில் உறங்கும். மிழலை நாடு புனல் பாயும் புதவங்களை (மடைகளை)க் கொண்டது. இதன் அரசன் தங்குதடை இன்றிப் பெருவேள்விக் கொடை வழங்கும் எவ்வி. இங்கு வாழும் ‘தொன்முதிர் வேளிர்’ பொன்னாலான அணிகலன்களைப் பூண்ட யானைகளில் செல்லும் பெருமிதம் கொண்டவர்கள். முத்தூறு நிலப்பகுதி இவர்கள் வாழ்விடம். நெடுஞ்செழியன் இந்த முத்தூரைத் தனதாக்கிக்கொண்டான். இந்த அரசன் கொடித்தேர்ச் செழியன் எனப் போற்றப்படுபவன். இவன் பிறந்த நாள்மீன் (நட்சத்திரம்) மீண்டும் மீண்டும் வந்து வளரவேண்டும். இவனது பகைவர்களின் நாள்மீன் மறுமுறை இவர்குக்கு வராமல் இருக்க வேண்டும். உன் உடலும் உயிரும் பொருந்தி இருப்பது போல உன் உயிரோடு உயிராகவும், உடலோடு உடலாகவும் இருந்து வாளேந்தி உன்னைக் காக்கும் மூத்த குடிமக்கள் உன்னை வாழ்த்திக் கொண்டிருக்கையில், இரவலர்களுக்கு நீ வழங்கிக்கொண்டே இருக்கையில், உன் மகளிர் உனக்கு ஊட்டும் தேறலை உண்டுகொண்டு நீ மகிழ்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு வாழும் வாழ்க்கையை புகழ் பெற்ற சிலரே பெறுவர். பிறர் ஏதோ செத்தவர் போகச் சாவாமல் இருப்பவர்களாக மதிக்கப்படுவர். முந்தைய பாடல்
|
|
25
|
கல்லாடனார்.
|
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
|
வாகை.
|
அரசவாகை.
|
மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது,
உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு,
நிலவுத்திகழ் மதியமொடு, நிலஞ்சேர்ந் தாஅங்கு,
உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை
5
அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப்,
பிணியுறு முரசம் கொண்ட காலை,
நிலைதிரிபு எறியத், திண்மடை கலங்கிச்
சிதைதல் உய்ந்தன்றோ, நின்வேல்; செழிய!
முலைபொலி அகம் உருப்ப நூறி,
10
மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,
அவிர் அறல் கடுக்கும் அம் மென்
குவை யிரும் கூந்தல் கொய்தல் கண்டே.
|
புறநானூறு - 25. கூந்தலும் வேலும்!
|
கல்லாடனார் நெருஞ்செழியனுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். (தலையாலங்கானப்) போர்க்களத்தில் திங்களும் ஞாயிறும் மறைவது போல (சோழன், சேரன் ஆகிய) இருபெரு முரசுகளைக் கைப்பற்றும்போது அவர்களது மனைவிமார் கைமைக் கோலத்தில் மார்பில் அடித்துக்கொள்ளா வண்ணமும், கூந்தல் களையா வண்ணமும் பார்த்துக்கொள்க. (அவர்களைக் கொல்ல வேண்டாம் என்பது கருத்து) முந்தைய பாடல்
|
|
26
|
மாங்குடி கிழவர்; மாங்குடி
|
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
|
வாகை.
|
அரச வாகை.
|
நளி கடல் இருங் குட்டத்து
வளி புடைத்த கலம் போலக்,
களிறு சென்று களன் அகற்றவும்,
களன் அகற்றிய வியல் ஆங்கண்
ஒளிறு இலைய எகு ஏந்தி,
5
அரைசு பட அமர் உழக்கி,
உரை செல முரசு வெளவி,
முடித் தலை அடுப் பாகப்,
புனல் குருதி உலைக் கொளீஇத்,
தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின்,
10
அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய!
ஆன்ற கேள்வி, அடங்கிய கொள்கை,
நான்மறை முதல்வர் சுற்ற மாக,
மன்னர் ஏவல் செய்ய, மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே!
15
நோற்றோர் மன்ற நின் பகைவர், நின்னொடு
மாற்றார் என்னும் பெயர் பெற்று,
ஆற்றார் ஆயினும், ஆண்டுவாழ் வோரே.
|
புறநானூறு - 26. நோற்றார் நின் பகைவர்!
|
புள்ளிருக்கு வேளூர் சிவனே! உன் கண்ணிலே தீ, கையிலே தீ, சிரிப்பிலே நீ, உடம்பெல்லாம் தீ. இப்படி இருக்கும் உன்னை இந்தப் பெண் உமையம்மை உன்னோடு எப்படி அம்மையப்பர் நிலையில் சேர்ந்திருக்கிறார். முந்தைய பாடல்
|
|
27
|
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
|
சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
|
பொதுவியல்.
|
முதுமொழிக் காஞ்சி.
|
சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ்,
நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன,
வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து,
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை,
உரையும் பாட்டும் உடையோர் சிலரே;
5
மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே:
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்ப, தம் செய்வினை முடித்து எனக்
கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி!
10
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்,
அறியா தோரையும், அறியக் காட்டித்,
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து,
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
15
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி,
அருள வல்லை ஆகுமதி; அருளிலர்
கொடா அமை வல்லர் ஆகுக;
கெடாஅத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே.
|
புறநானூறு - 27. புலவர் பாடும் புகழ்!
|
தாமரை சேற்றில் பிறக்கிறது. அது நூற்றுக்கணக்கான இதழ்களுடன் பொலிவாகத் தோன்றுகிறது. யார் பிறப்பிலும் வேற்றுமை இல்லை. சிலர் தாமரைப் பூப் போல விளங்குகின்றனர். பாராட்டும் புகழும் பெறுகின்றனர். சிலர் அதன் இலை போலக் கிடக்கின்றனர். செய்யும் செயலால் புலவர் பாடும் புகழுடையோர் வானத்தில் யாரும் ஓட்டாத வான ஊர்தியில் செல்வர் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். சேட்சென்னி நலங்கிள்ளி! தேய்தலும் வளர்தலும், இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்னும் உண்மை தெரியாதவர்களுக்குத் தெரியும்படி நிலாத்தெய்வம் தேய்ந்து வளர்ந்தும், மறைந்து தோன்றியும் காட்டிக்கொண்டிருக்கிறது. எனவே, வல்லவர் ஆயினும், வல்லவர் அல்லர் ஆயினும் வருந்தி வந்தோரின் நிலைமையைப் பார்த்து அருள் தருபவனாக விளங்குக! உன் பகைவர் கொடாத்தன்மை உடையவராகிக் கிடக்கட்டும். முந்தைய பாடல்
|
|
28
|
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
|
சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
|
பொதுவியல்.
|
முதுமொழிக் காஞ்சி.
|
எண்பேர் எச்சங்கள் பற்றிய விளக்கம். அறம் பொருள் இன்பம்
|
எனும் உறுதிப் பொருள்கள் பற்றிய குறிப்பு.
சிறப்பில் சிதடும், உறுப்பில் பிண்டமும்,
கூனும், குறளும், ஊமும், செவிடும்
மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு
எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்
5
பேதைமை அல்லது ஊதியம் இல், என
முன்னும் அறிந்தோர் கூறினர்; இன்னும்,
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது:-
வட்ட வரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
10
கானத் தோர், நின் தெவ்வர்; நீயே
புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து, அகத்தோர்
புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
பூம்போது சிதைய வீழ்ந்தெனக், கூத்தர்
ஆடுகளம் கடுக்கும் அகநாட் டையே;
15
அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும், பெரும! நின்செல்வம்;
ஆற்றாமை நின் போற்றா மையே.
|
புறநானூறு - 28. போற்றாமையும் ஆற்றாமையும்!
|
மனவளம் குன்றிய சிதடு, உறுப்புக் குறையுள்ள உடல், கூன் (முதுகு வளைவு), குள்ளம், ஊமை, செவிடு, விலங்குத் தன்மை, பித்து ஆகிய எட்டும் அச்சம் தரும் பிறவிகள். இவற்றுடன் வாழ்வது நலமில்லா வாழ்க்கை என்று அறிந்துணர்ந்த முன்னோர் கூறியுள்ளனர். அதனைப் பற்றி இன்னும் சொல்கிறேன் கேள். தினைப்புனம் காப்போர் (யானை வருவதை) அறியும் வகையில் பறவைச் சேவல் கூவிக் காட்டும் கானம் உடையவர் நின் பகைவர். கோட்டையை முற்றுகையிட்டிருப்பவர்களுக்கு அறம் உணர்த்தும் வகையில் கோட்டைக்குள் இருப்போர் கரும்பு அம்பு எய்து காட்டுவர். எனினும் அது அகழியில் உள்ள தாமரைப் பூவைச் சிதைக்கும். கூத்தரின் ஆடுகளம் போன்றது நீ பெற்றிருக்கும் நாடு. இந்தச் செல்வமானது அறம், பொருள், இன்பம் மூன்றும் விளைவிக்க வல்லது. உன் நாடாகிய செல்வம் உனக்கு அவற்றைத் தரவில்லையாயின் நீ உன் நாட்டைப் போற்றவில்லை என்பதே பொருள். முந்தைய பாடல்
|
29
|
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
|
சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
|
பொதுவியல்.
|
முதுமொழிக் காஞ்சி. சிறப்பு : சிறந்த அறநெறிகள்.
|
சிறந்த அறநெறிகள்.
|
அழல் புரிந்த அடர் தாமரை
ஐது அடர்ந்ற நூற் பெய்து,
புனை விளைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல்
பாறு மயிர் இருந்தலை பொலியச் சூடிப்,
பாண் முற்றுக, நின் நாள்மகிழ் இருக்கை!
5
பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர்
தோள் முற்றுக, நின் சாந்துபுலர் அகலம்! ஆங்க
முனிவில் முற்றத்து, இனிது முரசு இயம்பக்,
கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்குஅளித்தலும்,
ஒடியா முறையின் மடிவிலை யாகி
10
நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை என்போர்க்கு இனன் ஆகி லியர்!
நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்
ஒழி மடல் விறகின் கழுமீன் சுட்டு,
வெங்கள் தொலைச்சியும் அமையார், தெங்கின்
15
இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு
பெற்றனர் உவக்கும் நின் படைகொள் மாக்கள்
பற்றா மாக்களின் பரிவு முந்து உறுத்துக்,
கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்,
சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு
20
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
ஊழிற்று ஆக, நின் செய்கை! விழவின்
கோடியர் நீர்மை போல முறை முறை
ஆடுநர் கழியும்இவ் உலகத்துக், கூடிய
நகைப் புறனாக, நின் சுற்றம்!
25
இசைப்புற னாக, நீ ஓம்பிய பொருளே!
|
புறநானூறு - 29. நண்பின் பண்பினன் ஆகுக!
|
உன் நாளவை நீ அளித்த பொன்னாலான தாமரையை விரிந்த மயிர் கொண்ட தலையில் சூடிக்கொண்டுள்ள பாணர் முற்றுகையில் திளைக்கட்டும். அதன் பின் உன் சந்தனம் பூசிய மார்பு மகளிரின் தோள் முற்றுகையில் திளைக்கட்டும். இப்படி உன் சுற்றம் முரசு முழக்கத்துடன் விளங்கட்டும். எப்போதும் கொடியவர்களை அழிப்பதும் நல்லவர்களுக்கு உதவுவதுமாக இருப்பாயாக. நல்லது செய்தால் நன்மையும் தீயது செய்தால் தீமையும் விளையாது என்பவர் பக்கம் நீ சேராதே. உன் படையினர் நெல்வயலில் பறவைகளை ஓட்டிக்கொண்டும், தானே விழுந்த பனைமட்டையை எரித்து மீனைச் சுட்டுத் தின்றுகொண்டும், கள் பருகிக்கொண்டும், கள்ளை விரும்பாதபோது இளநீரைக் குடித்துக்கொண்டும் மகிழ்ந்திருக்கட்டும். பெற்றது போதும் என்று கூவைக்கொடி படர்ந்த சிறிய நாலு கால் பந்தல் மனையில் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வு செழிக்க நீ உதவ வேண்டும். வந்தவர்களுக்கெல்லாம் உதவும் பண்புடையதாக உன் வாழ்நாள் செய்கை அமையட்டும். விழாவில் இசை முழக்குவோர் வந்து போவது போல வாழ்க்கை நிலை இல்லாதது. நகைத்து மகிழும் பக்கம் உன் சுற்றம் சேரட்டும். (பகைத்து மகிழும் பக்கம் சேரவேண்டாம்.) உன் செல்வம் புகழின் பக்கம் இருக்கட்டும். முந்தைய பாடல்
|
30
|
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
|
சோழன் நலங்கிள்ளி.
|
பாடாண்.
|
இயன்மொழி.
|
தலைவனின் இயல்பு கூறுதல்.
|
செஞ்ஞா யிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,
பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்,
வளி திரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்றிவை
5
சென்றளந்து அறிந்தார் போல, என்றும்
இனைத்து என்போரும் உளரே அனைத்தும்
அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக்,
களிறுகவுள் அடுத்த எறிகல் போல
ஒளித்த துப்பினை ஆதலின், வெளிப்பட
10
யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு
மீப்பாய் களையாது, மிசைப் பரந் தோண்டாது,
புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே!
15
|
புறநானூறு - 30. எங்ஙனம் பாடுவர்?
|
ஞாயிறு செல்லும் பாதையையும், அந்த ஞாயிறு தாங்கிக் கொண்டிருக்கும் சுமைகளையும், அந்தச் சுமைக்குள் சூழ்ந்திருக்கும் உருண்டை மண்டலங்களையும், காற்று திரியும் திசையையும், ஒன்றுமில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் ஆகாயத்தையும் தாமே நேரில் சென்று அளந்து அறிந்தவர் போல இனைத்து என்று அளவு கூறுவாரும் உளர். அவர்களாலும் அளவிட்டுக் கூறமுடியாத அடக்கம் கொண்டவன் நீ. எறிகல் = விளாம்பழம் யானை வாயில் பட்ட விளாம்பழம் போலச் செரிக்கும் வலிமையை மறைத்துக்கொண்டிருப்பவன் நீ. இப்படிப்பட்ட உன்னைப் புலவர் எப்படிப் பாடமுடியும்? கூம்பின் பாய்மரத்தைத் தொய்ய விடாமல் புகார் நகரத்தில் புகுந்த பெருங்கலத்தை (பெருங்கப்பலை)த் தடுத்து நிறுத்தி அதிலுள்ள பண்டங்களை உள்நாட்டுப் பகுதிகளுக்குக் கொண்டுவந்து கொடுக்கும் கடல்பஃறாரம் (கடல்படு செல்வம்) நிறைந்த நாட்டுக்கு உரியவன் நீ. முந்தைய பாடல்
|
31
|
கோவூர்கிழார்.
|
சோழன் நலங்கிள்ளி.
|
வாகை.
|
அரசவாகை: மழபுல வஞ்சியும் ஆம்.
|
வடபுலத்து அரசர்கள் இச்சோழனது மறமாண்பைக் கேட்டு அஞ்சிய
|
துஞ்சாக் கண்ணர் ஆயினமை.
சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,
இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை
உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,
5
நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப்
பாசறை யல்லது நீயொல் லாயே;
நிதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்
கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே;
போர் எனில் புகலும் புனைகழல் மறவர்,
10
காடிடைக் கிடந்த நாடுநனி சேஎய;
செல்வேம் அல்லேம் என்னார்; கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்,
குண கடல் பின்ன தாகக், குட கடல்
வெண் தலைப் புணரி நின் மான்குளம்பு அலைப்ப,
15
வலமுறை வருதலும் உண்டு என்று அலமந்து
நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்,
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே.
|
புறநானூறு - 31. வடநாட்டார் தூங்கார்!
|
அறத்தைப் பின்தொடர்ந்து பொருளும் இன்பமும் வருவது போல, உன் குடையைப் பின்தொடர்ந்து சேரர், பாண்டியர் குடைகள் வருகின்றன. இதனால் தமிழகமே ஒன்றுபட்டுள்ளது. நீ புகழ் வேட்டைக்குப் புறப்பட்டுவிட்டாய். பாசறையில் உள்ளாய். கூர் மழுங்கிய கொம்புகளுடன் போருக்குத் துடிக்கும் உன் களிறு அடங்க மறுக்கிறது. போரை விரும்பும் உன் வீரக்கழல் மறவர் தொலைதூரம் செல்ல விரும்புகின்றனர். கீழைக்கடல் அரசனாகிய நீ தென்கடல் பாண்டியனையும் மேலைக்கடல் சேரனையும் அழைத்துக்கொண்டு வலம் வருவாயோ என்று வடபுலத்து அரசர்கள் நெஞ்சம் நடுங்கித் தூங்காமல் கிடக்கின்றனர். முந்தைய பாடல்
|
32
|
கோவூர்கிழார்.
|
சோழன் நலங்கிள்ளி.
|
பாடாண்.
|
இயன்மொழி.
|
சோழனது நினைத்தது முடிக்கும் உறுதிப்பாடு.
|
கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ?
வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்,
ஒண்ணுதல், விறலியர் பூவிலை பெறுக! என,
மாட மதுரையும் தருகுவன்; எல்லாம்
5
பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்!
தொன்னிலக் கிழமை சுட்டின், நன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமண் குரூஉத்திரள் போல, அவன்
கொண்ட குடுமித்தும், இத் தண்பணை நாடே.
10
|
புறநானூறு - 32. பூவிலையும் மாடமதுரையும்!
|
நலங்கிள்ளி தன் குடும்பத்தார் சமைப்பதற்காக வஞ்சி நகரத்தையே தருவான். அவனைப் பாடும் விறலியர் தலையில் பூ வைத்துக்கொள்ள விலைப் பொருளாக மதுரை நகரத்தையே தருவான். எல்லோரும் வாருங்கள். அவனைப் பாடிப் பெற்றுக்கொள்ளலாம். அவனைப் பாட நமக்கு உரிமை உண்டு. குயவர் சிறுவர் விளையாடுகையில் தந்தையைப் போலப் பானை செய்யும் சக்கரத்தில் வைத்த ஈரக் களிமண் போல அவன் மலை இருக்கும். (மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் மலை). அவன் நாடு அதனைச் சூழ்ந்திருக்கும் வயல்வெளிகளைக் கொண்டது. முந்தைய பாடல்
|
33
|
கோவூர்கிழார்.
|
சோழன் நலங்கிள்ளி.
|
வாகை.
|
அரசவாகை.
|
பகைவரது கோட்டைகளைக் கைப்பற்றியவுடன், அவற்றின் கதவுகளில்
|
கான் உறை வாழ்க்கைக் கதநாய், வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும், நிறைய,
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
5
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் புன்னாட்டுள்ளும்,
ஏழெயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு நின்;
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை;
பாடுநர் வஞ்சி பாடப், படையோர்
10
தாதுஎரு மறுகின் பாசறை பொலியப்,
புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற் றமலை பான்கடும்பு அருத்தும்
செம்மற்று அம்மநின் வெம்முனை இருக்கை;
15
வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற
அல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்
காம இருவர் அல்லது, யாமத்துத்
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்,
ஒதுக்குஇன் திணிமணல் புதுப்பூம் பள்ளி
20
வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப
நீஆங்குக் கொண்ட விழவினும் பலவே.
|
புறநானூறு - 33. புதுப்பூம் பள்ளி!
|
இவ்வூர் மக்கள் உழவர். இவர்களின் பெருங்குடி மகள் நெல்லைப் பண்டமாற்றாகத் தருவாளாம். வேட்டுவன் நாய்த்துணையுடன் வேட்டையாடிக் கொண்டுவந்த மான் தசையைக் கொடுத்துவிட்டு நெல்லைப் பெற்றுச் செல்வானாம். ஆயர் குடிமகள் மொந்தையில் கொண்டுவந்த தயிரைக் கொடுத்துவிட்டு நெல்லைப் பெற்றுச் செல்வாளாம். இந்த ஊரில் ஏழெயில் கதவம் என்னும் கோட்டை இருந்தது. இதனைக் கைப்பற்றிய சோழன் நலங்கிள்ளி அதன் கதவில் தன் புலிச்சின்னத்தைப் பொறித்தானாம். புலிச்சின்னம் பிளந்த வாயைக் கொண்டிருந்தது. பாசறைக் காட்சி பாடுபவர்கள் அரசன் பிற நாட்டைக் கைப்பற்றிய வஞ்சி வெற்றியைப் பாடிக்கொண்டிருந்தனர். படைவீரர்கள் பாசறைத் தெருவில் பொலிவுடன் இருந்தனர். பச்சிலை வைத்துக் கட்டிய மாலைப்பந்து போன்ற கறிச்சோற்றுக் கவளங்களை அரசன் பாணர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தான். இது போர்ப் பாசறையில் நிகழ்ந்தது. தலைநகர்க் காட்சி கைத்திறன் கொண்ட கலைஞன் தைத்து உருவாக்கிய அல்லிப்பாவை ஆடுவது போல காம உணர்வோடு இருவர் ஆடுவது அல்லாமல் நள்ளிரவில் தனிமகன் நடமாட்டம் இல்லாத மணல் ஒதுக்குப் பூம்பள்ளியில் காம இருவர் ஆடினர். இந்தப் பூம்பள்ளி மாடங்களின் வாயில்தோறும் ஆட்டுக்கறி உணவு படைக்கப்பட்டது. இப்படி அரசன் விழா நடைபெற்றது. முந்தைய பாடல்
|
34
|
ஆலத்தூர் கிழார்.
|
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
|
பாடாண்.
|
இயன்மொழி.
|
'செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என்னும் அறநெறி பற்றிய
|
ஆன்மலை அறுத்த அறனி லோர்க்கும்,
மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்,
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்,
வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என,
நிலம்புடை பெயர்வ தாயினும், ஒருவன்
5
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
அறம் பாடின்றே ஆயிழை கணவ!
காலை அந்தியும், மாலை அந்தியும்,
புறவுக் கருவன்ன புன்புல வரகின்
பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக்,
10
குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு,
இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக்,
கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி,
அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்,
15
எங்கோன்,வளவன் வாழ்க!என்று, நின்
பீடுகெழு நோன்தாள் பாடேன் ஆயின்,
படுபறி யலனே, பல்கதிர்ச் செல்வன்;
யானோ தஞ்சம்; பெரும! இவ் வுலகத்துச்
சான்றோர் செய்த நன்றுண் டாயின்,
20
இமையத்து ஈண்டி, இன்குரல் பயிற்றிக்,
கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய, பலவே!
|
புறநானூறு - 34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!
|
பசுவின் முலையை அறுத்தல் (உழவுக்குப் பயன்படுத்தல்) தாலி அணிந்த பெண்ணின் கருவைச் சிதைத்தல் பார்ப்பானை அடித்தல் இவை பாவச் செயல்கள். இந்தப் பாவங்களைக் கழுவாய் செய்து போக்கிக்கொள்ளலாம். ஆனால் உலகமே கைவிட்டுப் போவதாயினும் நன்றி மறந்தவனுக்கு அப் பாவத்திலிருந்து தப்புவதற்கு வேறு வழியே இல்லை என்று அறநூல் பாடுகிறது எந்நன்றி கொன்றாற்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு - அறம் எனப் புலவர் ஆலத்தூர் கிழார் சுட்டும் திருக்குறள் ஆயிழை கணவ! எம் அரசன் வாழ்க என்று உன்னைப் பாடாவிட்டால் எனக்குப் பொழுது போகாது. நீ செய்திருக்கும் உதவி அத்துணைப் பெரியது. அமலை வெண்சோறு பால் ஊற்றிப் பொங்கிய வரகரிசிப் பொங்கலைத் தேனில் தொட்டுக்கொண்டு முயல் கறியோடு இரத்தி (இற்றி) மர நிழலில் இருந்துகொண்டு காலை, மாலை ஆகிய இரு அந்திப் பொழுதிலும் குடும்பத்தாரோடு சேர்ந்து உண்ணுமாறு உன் செல்வம் அனைத்தையும் உனக்காக மறைத்து வைத்துக் கொள்ளாமல் இனிமையாக் பேசி ஏற்றுக்கொள்ளுமாறு பாணர்களுக்கு அமலை வெண்சோறு வழங்கியவன் நீ. நான் உனக்கு அடைக்கலம். இந்த உலகத்தில் சான்றோர் செய்த நன்று ஒன்று இருந்தால், (வங்கக் கடலிலிருந்து சென்று இமயமலையில் தங்கித் திரும்பி இடி முழக்கத்துடன் பொழியும் கீழைக்காற்று மழைத்துளியைக் காட்டிலும் பல்லாண்டு காலம் வாழ்வாயாக). முந்தைய பாடல்
|
35
|
வெள்ளைக்குடி நாகனார்.
|
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
|
பாடாண்.
|
செவியறிவுறூஉ
|
அரச நெறியின் செவ்வி பற்றிய செய்திகள்.
|
நளிஇரு முந்நீர் ஏணி யாக,
வளிஇடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்,
முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்,
அரசுஎனப் படுவது நினதே, பெரும!
5
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்,
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்,
அந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்டத்,
தோடு கொள் வேலின் தோற்றம் போல,
ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்
10
நாடுஎனப் படுவது நினதே அத்தை; ஆங்க
நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே!
நினவ கூறுவல்: எனவ கேண்மதி!
அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து
முறைவெண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு
15
உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோறே;
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்டுமூ
மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்,
கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
வெயில்மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய
20
குடிமறைப் பதுவே; கூர்வேல் வளவ!
வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்,
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை,
வருபடை தாங்கிப், பெயர்புறத் தார்த்துப்,
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
25
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே;
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்,
காவலர்ப் பழிக்கும், இக் கண்ணகன் ஞாலம்;
அதுநற்கு அறிந்தனை யாயின், நீயும்
30
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது,
பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்,
குடிபுறம் தருகுவை யாயின், நின்
அடிபுறம் தருகுவர், அடங்கா தேரே.
|
புறநானூறு - 35. உழுபடையும் பொருபடையும்!
|
உன்னிடம் முறை வேண்டும்போது எளிமையாகக் காட்சி தந்து சரியான தீர்ப்பைப் பெற்றால் மழை விரும்பும்போது மழையைப் பெற்றது போன்று மக்கள் மகிழ்வர். உன் குடை உனக்கு வெயிலை மறைக்க அன்று. குடிமக்களின் துயரைப் போக்கி அவர்களுக்கு நிழல் தருவதற்காகவே. உன் கொற்றம் உழவரின் உழவுப் படையால் விளைந்தது. மழை பொய்த்தாலும் வருவாய் குறைந்தாலும் இயற்கை அல்லாத செயற்கை தோன்றினாலும் உலகம் அதனைக் காக்கும் அரசனைத்தான் பழிக்கும். இதனைப் புரிந்துகொண்டு உனக்கு வேண்டியவர்களின் சொல்லைக் கேளாமல் காளை மாடுகளை போற்றி உழவு செய்யும் குடிகளின் சுமையை நீ குறைத்து அவர்களைப் பேணினால் அடங்காத உன் பகைவர் உன்னிடம் அடிபணிவர். முந்தைய பாடல்
|
36
|
ஆலத்தூர் கிழார்.
|
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
|
வஞ்சி.
|
துணை வஞ்சி.
|
அடுநை யாயினும், விடுநை யாயினும்,
நீ அளந் தறிதி நின் புரைமை; வார்தோல்,
செயறியரிச் சிலம்பின், குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்
தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்,
5
கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின், நிலையழிந்து,
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக், காவுதொறும்
கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்
நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப,
10
ஆங்குஇனி திருந்த வேந்தனொடு, ஈங்குநின்
சிலைத்தார் முரசும் கறங்க,
மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே.
|
புறநானூறு - 36. நீயே அறிந்து செய்க!
|
அரசன் கிள்ளிவளவன் கருவூரை முற்றுகை இட்டிருந்தான். கருவூர் அரசன் தன் கோட்டைக் கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருந்தான். எதிர்க்காதவன் ஊரை முற்றுகை இட்டுக்கொண்டே இருத்தல் நாணத்தக்க செயல் என்று கூறுகிறார் புலவர். போரிட்டு அழித்தாலும், போரைக் கைவிட்டுத் திரும்பினாலும் நீ உன் உயர்ந்த நிலையை எண்ணிப்பார். மகளிர் கழங்கைத் தெற்றி விளையாடும் ஆன்பொருநை ஆற்றுமணல் சிதைய, தன் காவல்மரக் காடுகள் கோடாரியால் வெட்டப்படும் ஓசையைக் கேட்டுக்கொண்டு கோட்டைக்குள் இருக்கும் அரசனை முரசு முழங்கும் படையுடன் எதிர்க்கிறாய் என்பது நாணத்தக்க செயலாகும். முந்தைய பாடல்
|
|
37
|
மாறோக்கத்து நப்பசலையார்.
|
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
|
வாகை; உழிஞை எனவும் பாடம்.
|
அரச வாகை குற்றுழிஞை எனவும், முதல் வஞ்சி எனவும் பாடம்.
|
நஞ்சுடை வால் எயிற்று, ஐந்தலை சுமந்த,
வேக வெந்திறல், நாகம் புக்கென,
விசும்புதீப் பிறப்பத் திருகிப், பசுங்கொடிப்
பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்,
புள்ளுறு புன்கண் தீர்த்த, வெள் வேல்
5
சினங்கெழு தானைச், செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டுகண் அகழி,
இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி,
யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்,
10
செம்புஉறழ் புரிசைச், செம்மல் மூதூர்,
வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்,
நல்ல என்னாது, சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை! செருவத் தானே!
|
புறநானூறு - 37. புறவும் போரும்!
|
பறவையின் துன்பம் தீர்த்த செம்பியனின் (சிபிச் சக்கரவர்த்தி) வழித்தோன்றலே! வேந்தன் தன் யானையொடு உள்ளே இருப்பதால் செம்பு போன்ற கோட்டையைச் சிதைத்தல் நல்லதன்று என உணர்ந்திருந்தும் போரிட்டுச் சிதைக்கும் வல்லமை பெற்றவன் நீ. நச்சுப் பற்களை உடைய ஐந்தலை நாகம் புகுந்தது போலவும். மின்னலுடன் கூடிய இடி மலையைப் பிளந்தது போலவும், தாக்கி அந்தக் கோட்டையைத் தகர்த்தாய். நள்ளிரவில் காவல் புரிவோர் விளக்கின் நிழல் நீரில் விழ அதனை அகழியிலுள்ள முதலை (இரை என்று எண்ணிக்) கவ்வும் அகழி கொண்டது அந்தக் கோட்டை. முந்தைய பாடல்
|
|
38
|
ஆவூர் மூலங் கிழார்.
|
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
|
பாடாண்.
|
இயன்மொழி,
|
வரை புரையும் மழகளிற்றின் மிசை,
வான் துடைக்கும் வகைய போல
விரவு உருவின கொடி நுடங்கும்
வியன் தானை விறல் வேந்தே!
நீ, உடன்று நோக்கும்வாய் எரிதவழ,
5
நீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச்,
செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்,
வெண் திங்களுள் வெயில் வேண்டினும்,
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்,
நின்நிழல் பிறந்து, நின்நிழல் வளர்ந்த,
10
எம் அளவு எவனோ மற்றே? இன்நிலைப்
பொலம்பூங் காவின் நன்னாட் டோரும்
செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை,
உடையோர் ஈதலும், இல்லோர் இரத்தலும்
கடவ தன்மையின், கையறவு உடைத்துஎன,
15
ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்,
நின்நாடு உள்ளுவர், பரிசிலர்:
ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத் தெனவே.
|
புறநானூறு - 38. வேண்டியது விளைக்கும் வேந்தன்!
|
மலை போன்ற வாலிபக் களிற்றின் மேல் வானத்தைத் துடைப்பது போன்ற கொடியுடன் கூடிய யானைப்படையை உடையவன் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். இப்படிப்பட்ட வெற்றி வேந்தனே! நீ மாறுபட்டு நோக்கும் இடம் தீப்பற்றி எரியும். விரும்பி நோக்கும் இடம் பொன் பூக்கும். அதனால் நீ ஞாயிற்றில் நிலவையும், நிலாவில் வெயிலையும் விளைவிக்கும் ஆற்றலை உடையவன். உன் நிழலிலே பிறந்து, உன் நிழலிலே வளர்திருக்கும் என் அளவு எத்துணை? பொன்னுலகம் என்னும் மேலுலக வாழ்வு இவ்வுலகில் செய்யும் நல்வினையால் இறந்தபின் கிடைக்குமாம். அங்கே உடையவர் ஈதலும், இல்லாதவர் இரத்தலும் இல்லை. இந்த இன்பத்துடன் உன் குடை நிழல் ஆண்டு சென்று நுகரும் பொன்னுலக இன்பத்தை ஈண்டே பெறவைப்பதால் புலவர்கள் உன் நாட்டையே நினைக்கின்றனர். நீ பெற்றுவிடுவாய் என்று எண்ணிப் பகைவர் நாட்டையும் உன்னிடையது என்றே உண்ணுகின்றனர். முந்தைய பாடல்
|
|
39
|
மாறோக்கத்து நப்பசலையார்.
|
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
|
பாடாண்.
|
இயன்மொழி,
|
வளவன் வஞ்சியை வெற்றி கொண்டது.
|
புறவின் அல்லல் சொல்லிய, கறையடி
யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக!
ஈதல்நின் புகழும் அன்றே; சார்தல்
ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்
5
தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்,
அடுதல்நின் புகழும் அன்றே; கெடுவின்று,
மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம்நின்று நிலையிற் றாகலின், அதனால்
முறைமைநின் புகழும் அன்றே; மறம்மிக்கு,
10
எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்,
கண்ணார் கண்ணிக், கலிமான், வளவ!
யாங்கனம் மொழிகோ யானே; ஓங்கிய
வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்டு
இமையம் சூட்டியஏம விற்பொறி,
15
மாண்வினை நெடுந்தேர், வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டும்நின்
பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே?
|
புறநானூறு - 39. புகழினும் சிறந்த சிறப்பு!
|
புறாவின் உயிரைக் காப்பாற்றத் தன்னையே தந்தக்கோல் தராசுக்கோல் தட்டில் நிறுத்துக் (கழுகுக்குக்) கொடுத்த உன் முன்னோன் சிபியின் வழிவந்தவன் நீ ஆகையால் ஈதல் உன் புகழ் அன்று. நீ தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் வழிவந்தவன் ஆதலால் பகைவரை அழித்தல் உன் புகழ் அன்று. உறையூர் அரசவையில் தொன்றுதொட்டு அறநெறி நிலைத்திருப்பதால் மக்களுக்கு முறை வழங்குதல் உன் புகழ் அன்று. வளவ! நீ ஏழு போர்களில் வெற்றி கண்டவன். கோட்டைக் கதவின் குறுக்குத் தாழ்ப்பாள் மரம் (எழு) போன்ற தோளை உடையவன். ஆத்தி மாலை சூடியவன். குதிரை வீரன். இமயத்தில் வில் பொறித்த வானவன் தொலைய வஞ்சி நகரத்தை வாடச்செய்த உன் பொருமையைப் பாடும்போது உன்னை எப்படிப் பாடுவேன்! முந்தைய பாடல்
|
40
|
ஆவூர் மூலங்கிழார்.
|
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
|
பாடாண்.
|
செவியறிவுறூஉ.
|
நீயே, பிறர் ஓம்புறு மறமன் னெயில்
ஓம்பாது கடந்தட்டு, அவர்
முடி புனைந்த பசும் பொன்னின்
அடி பொலியக் கழல் தைஇய
வல் லாளனை, வய வேந்தே!
5
யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்தடங்கப்,
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற,
இன்றுகண் டாங்குக் காண்குவம், என்றும்
இன்சொல் எண்பதத்தை ஆகுமதி; பெரும!
ஒருபிடி படியுஞ் சீறிடம்
10
எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே!
|
புறநானூறு - 40. ஒரு பிடியும் எழு களிரும்!
|
வெற்றி வேந்தே! நீயோ பிறர் கோட்டைகளை வென்று அதன் புனைந்திருக்கும் அரசுமுடியால் உன் காலுக்கு வீரக்கழல் செய்துகொண்டவன். நானோ உன்னை இகழ்வோர் கொற்றம்(கொட்டம்) அடங்கப் பாடுபவன். நீ இன்று போல் என்றும் காட்சிதர வேண்டும். என்றென்றும் எளிதில் காட்சி தந்து இன்சொல் வழங்கவேண்டும். ஒரு யானை படுக்கும் நிலப்பரப்பில் ஏழு யானைகளுக்கு உணவளிக்கும் வளம் மிக்க நாடு உன்னுடையது. முந்தைய பாடல்
|
|
41
|
கோவூர் கிழார்.
|
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
|
வஞ்சி.
|
கொற்ற வள்ளை.
|
காலனும் காலம் பார்க்கும்; பாராது
வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய,
வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே!
திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்,
பெருமரத்து, இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்,
5
வெங்கதிர்க் கனலி துற்றவும், பிறவும்,
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்,
எயிறுநிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,
களிறுமேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்,
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்,
10
கனவின் அரியன காணா, நனவின்
செருச்செய் முன்ப,! நின் வருதிறன் நோக்கி,
மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர்,
புதல்வர் பூங்கண் முத்தி, மனையோட்கு
எவ்வம் சுரக்கும் பைதல் மாக்களொடு
15
பெருங்கலக் குற்றன்றால் தானே; காற்றோடு
எரிநிகழ்ந் தன்ன செலவின்
செருமிகு வளவ! நிற் சினைஇயோர் நாடே.
|
புறநானூறு - 41. காலனுக்கு மேலோன்!
|
தீக் கனா எட்டுத் திசைகளிலும் எரிமீன் விழுதல் பச்சை மரம் பற்றி எறிதல் சூரியன் விழுங்கல் அச்சம் தரும் பறவைகள் ஒலித்தல் பல் நிலத்தில் விழுதல் தலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் யானை அடங்காமை மேலாடை கீழே விழுதல் அரியணை கவிழ்தல் இப்படியெல்லாம் கனவு காணும்படி நனவிலேயே போரிடும் வல்லமை உடையவன் நீ. இப்படி நீ வருவதைப் பார்த்த பகைவர் தன் மகனை முத்தமிட்டுக்கொண்டு மனைவி முன் தன் கண் கலங்குவதை மறைத்துக்கொண்டு நிற்பர். காற்றும் செருப்பும் வீசுவது போல பகை நாட்டின்மீது நீ செல்வாய். முந்தைய பாடல்
|
|
42
|
இடைக்காடனார்.
|
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
|
வாகை.
|
அரச வாகை.
|
சோழனின் மறமேம் பாடும், கொடை மேம்பாடும், வலிமைச்
|
ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின்
யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின்
தானையும் கடலென முழங்கும்; கூர்நுனை
வேலும் மின்னின் விளங்கும் ; உலகத்து
அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின்,
5
புரைதீர்ந் தன்று; அது புதுவதோ அன்றே;
தண்புனற் பூசல் அல்லது, நொந்து,
களைக, வாழி, வளவ! என்று, நின்
முனைதரு பூசல் கனவினும் அறியாது,
புலிபுறங் காக்கும் குருளை போல,
10
மெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப்,
பெருவிறல் யாணர்த் தாகி, அரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையும், உழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையும், அறைநர்
கரும்பிற் கொண்ட தேனும், பெருந்துறை
15
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்,
வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!
மலையின் இழிந்து, மாக்கடல் நோக்கி,
நிலவரை இழிதரும் பல்யாறு போலப்,
20
புலவ ரெல்லாம் நின்நோக் கினரே;
நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்றுவெகுண் டன்ன முன்பொடு,
மாற்றுஇரு வேந்தர் மண்நோக் கினையே.
|
புறநானூறு - 42. ஈகையும் வாகையும்!
|
உன் யானையோ மலை போல் உள்ளது. உன் படையோ கடல் போல் முழங்குகிறது. உன் வேலோ மின்னிக்கொண்டே இருக்கிறது. இதனால் உலகின் அரசர்களெல்லாம் நடுங்குகின்றனர். இது குற்றமற்ற செயல் அன்று. இது உனக்குப் புதியதும் அன்று. உன் நாட்டில் ஆற்றுநீர் மோதல் அன்றிப் பிற மோதல் இல்லாமல் களைந்தெறிவாயாக. போர்ப் பூசல் கனவிலும் இல்லாமல் புலி தன் குட்டியைப் பாதுகாப்பது போல நாட்டில் செங்கோலாட்சி புரிவாயாக. புன்செய் நில நாட்டின்மீது (பாண்டிய நாட்டின்மீது) போர் தொடுக்க வேண்டாம். உன் நாடு வளமான நாடு. இதன் மடைநீரில் அரித்துக்கொள்ளும் வாளை, உழும்போது புரளும் ஆமை, கரும்பில் தொடுத்திருக்கும் தேன், துறையில் மகளிர் பறித்த குவளை ஆகியவற்றைப் புன்செய் நில மக்களுக்கு விருந்தாகத் தருபவர்கள் உன் நாட்டு மக்கள். அந்த நாட்டின்மீது நீ போர் தொடுக்கிறாய். மலையிலிருந்து நிலத்தில் பாயும் ஆறு போலப் புலவர்கள் உன்னை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். நீயோ கூற்றுவன் போல இருபெரு வேந்தர்களின் மண்ணைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய். முந்தைய பாடல்
|
43
|
தாமப்பல் கண்ணனார்,
|
சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்.
|
வாகை.
|
அரசவாகை.
|
எறிந்தானைச் , 'சோழன் மகன்
அல்லை' என, நாணியுருந்தானை அவர் பாடியது.
நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்,
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்,
கால்உண வாகச், சுடரொடு கொட்கும்
5
அவிர்சடை முனிவரும் மருளக், கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித், தொரீஇத்,
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!
10
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி! வார் கோல்,
கொடுமர மறவர் பெரும! கடுமான்
கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:
ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்
15
பார்ப்பார் நோவன செய்யலர்: மற்றுஇது
நீர்த்தோ நினக்கு? என வெறுப்பக் கூறி,
நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்,
நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே;
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்!
20
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும் எனக்
காண்டகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின்,
யானே பிழைத்தனென் ! சிறக்கநின் ஆயுள்;
மிக்குவரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!
25
|
புறநானூறு - 43. பிறப்பும் சிறப்பும்!
|
அவிர்சடை முனிவர்கள் நிலமக்களின் துன்பம் நீங்கவேண்டும் என்பதற்காகத் தவம் செய்வார்கள். வெயிலிலும் காற்றை மட்டுமே உணவாக உண்டுகொண்டு தவம் செய்வார்கள். இந்த முனிவர்களும் மருளும்படி புள்ளினங்களும் வாழும்படி சிபி மன்னன் ஆட்சி புரிந்தான். கொடிய சிறகும், கூரிய நகங்களும் கொண்ட பருந்தின் பிடியிலிருந்து தப்பித் தன்னிடம் வந்த புறாவைக் காப்பாற்றுவதற்காக (அந்தப் புறாவின் எடைக்கு எடை தசை தரத் தன் தொடையிலிருந்து அறுத்துத் தந்தபோது எடை குறைந்தமையால் அதனை ஈடு செய்யும் பொருட்டுத்) தானே தன்னைத் துலாக்கோலில் நிறுத்த மன்னன் சிபி. அவன் வழியில் வந்தவர் சோழர். பகைவரின் முரண்பாட்டை நீக்கிய தேர்வண் கிள்ளி (தேர்க்கொடையாளி நலங்கிள்ளி) தம்பி நீ. வார்கோல் கொடுமர மறவர் (அம்பு வில் வீரர்) படையின் தலைவனே! குதிரை வீரனே! உன் பிறப்பில் ஐயம் ஊடையேன். ஆத்திமாலை அணிந்த உன் முன்னோர் பார்ப்பார் நோகும் செயல்களைச் செய்யமாட்டார்கள். இது என்னை வட்டுக் காயால் அடித்தது சரியா? - என்று வெறுக்குபடி கூறினேன். அதனைக் கேட்ட நீ உனக்கு நான் செய்த பிழையைப் பொருட்படுத்தாமல், நீ பிழை செய்தது போலப் பெரிதும் நாணினாய். தமக்குப் பிழை செய்தோரைப் பொறுத்துக்கொள்ளும் செம்மாப்பு இந்தச் சோழர் குடிக்கு எளிது என்பதைக் கண்ணாரக் காட்டிநுள்ளாய். அதனால் காவிரியாறு குவித்துள்ள மேட்டுமணலின் எண்ணிமகையைக் காட்டிலும் பல்லாண்டு வாழ்வாயாக. முந்தைய பாடல்
|
|
44
|
கோவூர் கிழார்.
|
சோழன் நெடுங்கிள்ளி.
|
வாகை.
|
அரச வாகை.
|
இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா,
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ,
திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி,
நிலமிசைப் புரளும் கைய, வெய்துயிர்த்து,
அலமரல் யானை உருமென முழங்கவும்,
5
பாலில் குழவி அலறவும், மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவும், நீரில்
வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும்,
இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்;
துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்!
10
அறவை யாயின்,நினது எனத் திறத்தல்!
மறவை யாயின், போரொடு திறத்தல்;
அறவையும் மறவையும் அல்லை யாகத்,
திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
15
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே.
20
|
புறநானூறு - 44. அறமும் மறமும்!
|
நெடுங்கிள்ளியின் யானை நீராடவில்லை. நெல்லஞ்சோறும் நெய்யும் கலந்து உண்ணும் அது உணவுக் கவளம் பெறவில்லை. அது கட்டப்படிருக்கும் வெளில் என்னும் கூடாரம் வருந்தும்படி மோதிக்கொண்டு நிலத்தில் விழுந்து பெருமூச்சு விட்டுக்கொண்டு புரண்டு வருந்துகிறது; முழங்குகிறது. குழந்தைகள் பால் இல்லாமல் அலறுகின்றன. மகளிர் பூ இல்லாமல் வெறுந்தலையை முடிந்துகொள்கின்றனர். குடிக்கத் தண்ணீர்கூட இல்லாமல் இல்லங்களில் மக்கள் அழும் ஒலி கேட்கிறது. இப்படி இருக்கும்போது கோட்டைக்குள் நீ பாதுகாப்பமாக இருத்தல் மிகமிகக் கொடுமை. நீ நெருங்க முடியாத அரிமா போன்று வலிமை மிக்கவன். நீ அறநெறியை விரும்பினால் கோட்டை உனடுடையது என்று திறந்து விட்டுவிடுக. மறநெறியை விரும்பினால் போரிடுவதற்காகத் திறந்துவிடுக. இரண்டும் இல்லாமல் மதிலுக்குள் ஒரு மூலையில் ஒடுங்கிக் கிடத்தல் நாணத்தக்க செயல். முந்தைய பாடல்
|
|
45
|
கோவூர் கிழார்.
|
வஞ்சி.
|
இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்!
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே;
5
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே!
|
புறநானூறு - 45. தோற்பது நும் குடியே!
|
பெரிய பனை மரத்தினது வெண்மை நிறம் கொண்ட குருத்து இலை மாலை அணிந்தவன் இல்லை (சேர மன்னனைப் போல்). கரிய கிளைகளையுடைய வேம்பின் மாலை அணிந்தவன் இல்லை (பாண்டிய மன்னனைப் போல்). உன்னுடைய மாலையும் ஆத்தி மலர்களால் நெருக்கமாகக் கட்டப்பட்டது. உன்னுடன் போரிடுபவன் மாலையும் ஆத்தி மலர்களால் நெருக்கமாகக் கட்டப்பட்டது. இப்பகையினால் உண்டாகும் போரில், ஒருவர் தோற்றாலும் உங்கள் சோழர் குலம் தோற்றதாக ஆகும். போரில், இருவரும் வெற்றி பெறுவது என்பது இயலாதது. உங்களது குலத்திற்குப் பொருந்தாதது உங்களுடைய இந்தச் செய்கை. அழகிய கொடியால் அலங்கரிக்கப்பட்ட தேர்களைக் கொண்ட உங்களைப் போன்ற பிற மன்னர்களுக்கு (சேர, பாண்டிய மன்னர்களுக்கு) உடல் பூரிக்கும்படி மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் உங்களது இந்தப் பகைமை. குறிப்பு: நின்ன (3) - ஒளவை துரைசாமி உரை - நின கண்ணியுமென்பது நின்ன கண்ணியுமென விகாரமாயிற்று. சொற்பொருள்: இரும் பனை - பெரிய பனை மரம், வெண்தோடு - வெள்ளை நிற இலை, மலைந்தோன் அல்லன் - அணிந்தவன் இல்லை, கருஞ்சினை - கரிய கிளைகளையுடைய, வேம்பின் - வேப்ப மரத்தின், தெரியலோன் அல்லன் - மாலை அணிந்தவன் இல்லை (தெரியல் - பூ மாலை), நின்ன கண்ணியும் - உன்னுடைய மாலையும், ஆர் மிடைந்தன்றே - ஆத்தி மலர்களால் நெருக்கமாகக் கட்டப்பட்டது (மிடைந்தன்றே - ஏகாரம் அசைநிலை), நின்னொடு பொருவோன் - உன்னுடன் போரிடுபவன், கண்ணியும் - மாலையும், ஆர் மிடைந்தன்றே - ஆத்தி மலர்களால் நெருக்கமாக கட்டப்பட்டது (மிடைந்தன்றே - ஏகாரம் அசைநிலை), ஒருவீர் தோற்பினும் - உங்களில் ஒருவர் தோற்றாலும், தோற்ப - தோற்பது, நும் குடியே - உங்கள் குலம் தான் (சோழர் குலம்), இருவீர் - இருவர், வேறல் - வெல்லுதல், இயற்கையும் அன்றே - இயற்கையும் இல்லை (ஏகாரம் அசைநிலை), அதனால் - அதனால், குடிப் பொருள் - குடிக்கு ஏற்றது, அன்று - இல்லை, நும் செய்தி - உங்கள் செய்கை, கொடித்தேர் - கொடியுடைய தேர்களைக் கொண்ட, நும்மோர் அன்ன - உங்களைப் போன்ற, வேந்தர்க்கு - பிற மன்னர்களுக்கு (சேரர், பாண்டியர்), மெய் - உடம்பு, மலி உவகை - மிகுந்த மகிழ்ச்சி, செய்யும் - செய்யும், இவ் - இந்த, இகலே - பகைமை (ஏகாரம் அசைநிலை) முந்தைய பாடல்
|
|||
46
|
கோவூர் கிழார்.
|
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
|
வஞ்சி.
|
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;
இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்,
தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்!
களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த
5
புன்றலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி,
விருந்திற் புன்கண்நோ வுடையர்;
கெட்டனை யாயின், நீ வேட்டது செய்ம்மே!
|
புறநானூறு - 46. அருளும் பகையும்!
|
நீ தான் புறாவின் துன்பம் மட்டுமல்லாமல் மற்ற துன்பங்கள் பலவற்றையும் நீக்கிய சோழ மரபின் வழித்தோன்றல். இச்சிறுவர்களின் மூதாதையர், கற்றவர்களது வறுமையைக் கண்டு அஞ்சி, தமது உணவைப் பங்கிட்டு உண்டு, அவர்களுக்குக் குளிர்ந்த நிழலாக விளங்கி வாழ்ந்தவர்கள். ஆனால் இங்கே, கொல்ல வரும் யானையைக் கண்டு அழுது, பின்பு அழுகையை மறந்து, பொலிவிழந்த தலையுடைய இச்சிறுவர்கள், மன்றத்தை மருண்டு நோக்கி வாழ்வில் முன்பு அறியாத புதிய துன்பத்தை அடைந்திருக்கின்றனர். நான் கூறிய அனைத்தையும் நீ கேட்டாய் என்றால், இனி நீ விரும்பியதைச் செய். சொற்பொருள்: நீயே - நீ தான், புறவின் அல்லல் - புறாவின் துன்பம், அன்றியும் - மட்டும் அல்லாது, பிறவும் - பிறவும், இடுக்கண் பலவும் - துன்பம் பலவற்றையும், விடுத்தோன் - நீக்கியவன், மருகனை - வழித்தோன்றல் நீ (சோழ மரபின் வழித்தோன்றல்), இவரே - இவர்கள் தான், புலன் உழுது உண்மார் - அறிவால் உழுது உண்பவர்கள், புன்கண் - வறுமை, அஞ்சி - அச்சம் கொண்டு, தமது - தங்களது, பகுத்து உண்ணும் - பங்கிட்டு உண்ணும், தண் நிழல் - குளிர்ந்த நிழல், வாழ்நர் - வாழ்ந்தவர்கள் (இச்சிறுவர்களின் மூதாதையர்), களிறு - யானை, கண்டு - கண்டு, அழூஉம் - அழும் (அழூஉம் - அளபெடை), அழாஅல் - அழல் மறந்த, அழுகை மறந்த (அழாஅல் - அளபெடை), புன்தலை - பொலிவிழந்த தலை, குறைவாக முடியுடைய தலை, சிறாஅர் - சிறுவர்கள் (சிறாஅர் - அளபெடை), மன்று - மன்றம், மருண்டு - அச்சம் கொண்டு, நோக்கி - நோக்கி, விருந்திற் புன்கண் - புதியதான துன்பம், நோவுடையர் - துன்பத்தை உடையவர்கள், கேட்டனையாயின் - இதைக் கேட்டாய் என்றால், நீ வேட்டது - நீ விரும்பியதை, செய்ம்மே - செய்வாயாக (செய்ம்மே - ஈற்று மிசை உகரம் கெட்ட செய்யுமென் முற்றன்று, ஏவற் பொருட்டு வந்தது) முந்தைய பாடல்
|
||
47
|
கோவூர் கிழார்.
|
காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி.
|
வஞ்சி.
|
வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி,
நெடிய என்னாது சுரம்பல கடந்து,
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்,
பெற்றது மகழ்ந்தும், சுற்றம் அருத்தி,
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி,
5
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந் தன்றோ? இன்றே; திறம்பட
நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி,
ஆங்குஇனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ்
மண்ணாள் செல்வம் எய்திய
10
நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே.
|
புறநானூறு - 47. புலவரைக் காத்த புலவர்!
|
வள்ளன்மையுடையவர்களை எண்ணி, பழமரத்தை நோக்கிச் செல்லும் பறவைகளைப் போலப் போய், வழி நீண்டது என்று எண்ணாது, அரிய வழிகள் பலவற்றைக் கடந்து, தங்களுடைய திருந்தாத நாவினால் தம் திறமையின்படி பாடி, பெற்ற பரிசால் மகிழ்ந்து, சுற்றத்தார்க்கு உண்ணக் கொடுத்து, தானும் இருப்பதைப் பாதுகாக்காது உண்டு, மகிழ்ச்சியுடன் பிறருக்கு வழங்கி, தம்மை ஆதரிப்பவர்கள் தமக்குச் செய்யும் சிறப்பிற்காக வருந்தும், இந்தப் பரிசிலரின் வாழ்க்கையானது, பிறர்க்குத் தீமைச் செய்யாதது. கல்வியினால் தம்மோடு மாறுபட்டவர்களைத் தம் புலமையால் நாணச் செய்து, தலைநிமிர்ந்து நடந்து, அங்கு இனிதாக ஒழுகுதல் மட்டுமல்லாமல், உயர்ந்த புகழுடைய நிலத்தை ஆளும் செல்வமுடைய உன்னைப் போன்றவர்களைப் போன்று, அவர்கள் தலைமையுடையவர்கள். சொற்பொருள்: வள்ளியோர்ப் படர்ந்து - வள்ளன்மையுடையவர்களை எண்ணி, புள்ளின் போகி - பழமரத்தை நோக்கிச் செல்லும் பறவைகளைப் போலப் போய் (புள்ளின் - இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), நெடிய என்னாது - நீண்டது என்று எண்ணாது, சுரம் பல கடந்து - அரிய வழிகள் பலவற்றைக் கடந்து, வடியா நாவின் வல்லாங்குப் பாடி - திருந்தாத நாவினால் தன் திறமையின்படி பாடி, பெற்றது மகிழ்ந்தும் - பெற்ற பரிசால் மகிழ்ந்தும், சுற்றம் அருத்தி - சுற்றத்தார்க்கு உண்ணக் கொடுத்து, ஓம்பாது உண்டு - தானும் பாதுகாக்காது உண்டு, கூம்பாது வீசி - மகிழ்ச்சியுடன் வழங்கி, வரிசைக்கு வருந்தும் - தம்மை ஆதரிப்பார் தமக்குச் செய்யும் சிறப்பிற்காக வருந்தும், இப்பரிசில் வாழ்க்கை - இந்த பரிசிலரின் வாழ்க்கை, பிறர்க்குத் தீது அறிந்தன்றோ இன்றே - பிறர்க்குத் தீமை செய்ய மாட்டார்கள், திறப்பட நண்ணார் நாண - கல்வியினால் தம்மோடு மாறுபட்டவர்களைத் தம் புலமையால் நாண, அண்ணாந்து ஏகி - தலைநிமிர்ந்து நடந்து, ஆங்கு இனிது ஒழுகின் அல்லது - அங்கு இனிதாக ஒழுகுதல் அன்றி, ஓங்கு புகழ் - உயர்ந்த புகழ், மண்ணாள் - நிலத்தை ஆளும், செல்வம் எய்திய நும்மோர் அன்ன - செல்வம் அடைந்த உன்னைப் போன்றவர்களைப் போன்று, செம்மலும் உடைத்தே - தலைமையுடையவர்கள் (உடைத்தே - ஏகாரம் அசைநிலை) முந்தைய பாடல்
|
||
48
|
பொய்கையார்.
|
சேரமான் கோக்கோதை மார்பன்.
|
பாடாண்.
|
புலவராற்றுப் படை.
|
கோதை மார்பிற் கோதை யானும்,
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்,
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்,
கள்நா றும்மே, கானல்அம் தொண்டி;
அதுஎம் ஊரே; அவன்எம் இறைவன்;
5
எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல!
அமர்மேம் படூஉங் காலை, நின்
புகழ்மேம் படுநனைக் கண்டனம் எனவே.
|
புறநானூறு - 48. 'கண்டனம்' என நினை!
|
கடற்கானலில் உள்ள தொண்டி நகரம் மணம் கமழும் நல்லூர். அரசன் தோதையின் மார்பில் இருக்கும் கோதைமாலையின் மணம், அவனைத் தழுவுவோர் அணிந்துள்ள மலர்மாலையின் மணம், கழியில் பூத்திருக்கும் நெய்தல் பூவின் மணம் ஆகியவற்றால் தொண்டி தேன் - மணம் கமழும் ஊர். அது என் ஊர். அந்தக் கோதை என் அரசன். முதுவாய் இரவல (புலவனே)! அவனிடம் நீ சென்று அவனைக் கண்டு மீண்டால் என்னையே நீ நினைக்கமாட்டாய். போரில் அவன் மேம்படும்போதெல்லாம் உன் மேம்பாட்டையே அவன் கருதுவான். முந்தைய பாடல்
|
|
49
|
பொய்கையார்.
|
சேரமான் கோக்கோதை மார்பன்.
|
பாடாண்.
|
புலவராற்றுப் படை.
|
நாடன் என்கோ? ஊரன் என்கோ?
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ?
யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?
புனவர் தட்டை புடைப்பின், அயலது
இறங்குகதிர் அலமரு கழனியும்,
5
பிறங்குநீர்ச் சேர்ப்பினும் , புள் ஒருங்கு எழுமே!
|
புறநானூறு - 49. எங்ஙனம் மொழிவேன்?
|
அவனை நாடன் என்று சொல்வேனா. ஊரன் என்று சொல்வேனா பனிக்கடல் ஒலித்துக்கொண்டே இருக்கும் சேர்ப்பன் என்று சொல்வேனா வாளேந்திய நிலையிலேயே தோற்றம் தரும் கோதையை எப்படிச் சொல்வேன்? தினைப்புனம் காப்பவர் தட்டையைப் புடைக்கும்போது பறவைகள் எழுந்து பறப்பது போல அவன் செல்லும் வயல் - பகுதியிலும், கடல்நிலப் - பகுதியிலும் பறவைகள் எழுந்து பறக்கின்றனவே. (அவன் செல்லுமிடங்களில் பறப்பவை போர்க்களத்தில் புலால் உண்ணும் பறவைகள்) முந்தைய பாடல்
|
|
50
|
மோசிகீரனார்.
|
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.
|
பாடாண்.
|
இயன் மொழி.
|
மாசற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்,
பொலங்குழை உழிஞையொடு, பொலியச் சூட்டிக்,
குருதி வேட்கை உருகெழு முரசம்
5
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,
இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நற் றமிழ்முழுது அறிதல்;
10
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சித், தண்ணென
வீசி யோயே; வியலிடம் கமழ,
இவன்இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
15
விளங்கக் கேட்ட மாறுகொல்:
வலம்படு குருசில்! நீ ஈங்குஇது செயலே?
|
புறநானூறு - 50. கவரி வீசிய காவலன்!
|
முகத்தின் தோல் சுருக்கம் இல்லாமல் தோல்வாரால் கட்டப்பட்டது. மருங்குல் என்னும் அதன் அடிப்பகுதியை மயில்தோகை அழகுபடுத்தியது. (போர்முரசு என்பதைக் காட்டும் அடையாளமாக) பொன்னாலான உழிஞைப்பூவும் அதனை அழகுபடுத்தியது. குருதியில் குளிப்பதற்காக அது வெளியே சென்றிருந்தது. முரசுக்கட்டில் முரசு திரும்புமுன் முரசுக்கட்டில் வெறுமனே இருந்தது. எண்ணெய் நுரை போல் அதில் மெத்தை இருந்தது. அது முரசுக்கட்டில் என அறியாமல் புலவர் அதன்மேல் உறங்கிவிட்டார். முரசுடன் திரும்பிய அரசன் புலவருக்குக் கவரி வீசினான். புலவர் சொல்கிறார் அறியாது கட்டிலேறிய என்னை இரு துண்டாக ஆக்குவதை விட்டதே நல்ல தமிழ்நெறி அறிந்த செயல். அதுவே போதுமானது. அதனோடு நிறைவடையாமல், பக்கத்திலே வந்து, வலிமை மிக்க உன் தோள்களால் அகன்ற இடமெல்லாம் குளிர்ந்த காற்று வரும்படி, கவரி வீசினாயே! இந்த உலகத்தில் புகழ் உடையோருக்குத்தான் மேலுலகத்தில் வாழும் பேறு கிடைக்கும் என்பார்கள். அதற்கு மாறாக, (குற்றம் செய்த எனக்ககே இந்த உலகத்தில்) மேலுலக வாழ்வு தந்த செயலை என்னென்பேன்? முந்தைய பாடல்
|
|
51
|
ஐயூர் முடவனார்! ஐயூர் கிழார்
|
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.
|
வாகை.
|
நீர்மிகின், சிறையும் இல்லை; தீமிகின்,
மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;
வளிமிகின், வலியும் இல்லை; ஒளிமிக்கு
அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,
தண் தமிழ் பொது எனப் பொறாஅன், போர் எதிர்ந்து,
5
கொண்டி வேண்டுவன் ஆயின், கொள்க எனக்
கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;
அளியரோ அளியர், அவன் அளிஇழந் தோரே;
நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த
செம்புற்று ஈயல் போல,
10
ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே!
|
புறநானூறு - 51. ஈசலும் எதிர்ந்தோரும் !
|
மிகுந்து வரும் வெள்ளத்துக்குத் தடுக்க இயலாது. மிகுந்து வரும் தீயைத் தடுக்கக் குடை பிடிக்க முடியாது. மிகுது வரும் காற்றை எதிர்த்து நிற்கும் வலிமை யாருக்கும் இல்லை. வெயிலின் பெருவெளிச்சத்தையும் தடுக்க இயலாது. அதுபோல, வழுதியை எதிர்த்து நிற்க யாரும் இல்லை. தமிழ்நாடு எல்லா அரசர்களுக்கும் பொது என்பதை இவன் பொறுத்துக்கொள்ள மாட்டான். தமிழ்நாடு முழுவதும் தனக்கே உரியது எனப் போரிடுவான். கொண்டி (திறை) தரவேண்டும் என்பானாயின் கொடுத்த மன்னர் அச்சமின்றி அரசாளலாம். அவனது அரவணைப்பை இழந்தவர் இரக்கம் கொள்ளத் தக்கவர். புற்றிலிருந்து கிளம்பும் ஈயல் ஒருநாள் வாழ்க்கையில் அழிவது போல அவர்களின் வாழ்வு அழியும். முந்தைய பாடல்
|
||
52
|
மருதன் இளநாகனார்; மருதிள
|
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்
|
வாகை.
|
அணங்கு உடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ,
முணங்கு நிமிர் வயமான் முழுவலி ஒருத்தல்,
ஊன்நசை உள்ளம் துரப்ப, இசை குறித்துத்
தான் வேண்டு மருங்கின் வேட்டுஎழுந் தாங்கு,
வடபுல மன்னர் வாட, அடல் குறித்து,
5
இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி!
இதுநீ கண்ணியது ஆயின், இரு நிலத்து
யார்கொல் அளியர் தாமே? ஊர்தொறும்
மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங் கொடி
வயல்உழை மருதின் வாங்குசினை வலக்கும்,
10
பெருநல் யாணரின் ஒரீஇ, இனியே
கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்,
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
வல்லின் நல்லகம் நிறையப், பல்பொறிக்
15
கான வாரணம் ஈனும்
காடாகி விளியும் நாடுடை யோரே!
|
புறநானூறு - 52. ஊன் விரும்பிய புலி !
|
வழுதி! நீ தேரில் இருக்கிறாயே! சிங்கம் வருத்தும் தன் மலைக்குகையில் இருத்தலை வெறுத்து தசை இரை பெறும் ஊக்கத்தால் தான் விரும்பும் திசையில் செல்வது போல வடநாட்டு மன்னர் வாட அழிக்கக் கருதி நீபோரிட நீ புறப்படக் கருதினால் எதிர் நின்று வருந்தப்போகும் மன்னர் யாரோ தெரியவில்லையே! வயலின் ஓரமாக மருதமரத்தில் ஏறியுள்ள கொடி உண்போர் வயலில் மேயும் மீனைச் சுடுவதால் வாடும் நிலை போய் நீ சுடுவதால் வாடும் நிலையினைப் பெறும். ஊர் மன்றத்தில் உள்ள கடவுள் சிலை ஊரைப் பாதுகாப்பதை விட்டுவிட்டுப் போய், அங்கு நரைத்தலை முதியவர் வல்லு விளையாடும் குழியில் காட்டுக்கோழி முட்டையிடும் காடாக மாறிவிடும். முந்தைய பாடல்
|
||
53
|
பொருந்தில் இளங்கீரனார்.
|
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
|
வாகை.
|
அரசவாகை.
|
முதிர்வார் இப்பி முத்த வார் மணல்,
கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து,
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற
களங்கொள் யானைக், கடுமான், பொறைய!
5
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற் றலநின் புகழே, என்றும்;
ஒளியோர் பிறந்தஇம் மலர்தலை உலகத்து
வாழேம் என்றலும் அரிதே; தாழாது
10
செறுத்த செய்யுள் செய்செந் நாவின்,
வெறுத்த கேள்வி, விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுளன் ஆயின், நன்றுமன், என்ற நின்
ஆடு கொள் வரிசைக்கு ஒப்பப்
பாடுவன் மன்னால், பகைவரைக் கடப்பே.
15
|
புறநானூறு - 53. செந்நாவும் சேரன் புகழும்!
|
மகளிர் தெற்றி விளையாடும் மணிமாடங்களைக் கொண்ட ஊர் விளங்கில். அதன் சிறப்பினை சேர அரசன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தன் யானைப் படையுடன் சென்று போரிட்டு அழித்தான். இதனைப் பாடுவதற்குக் கபிலர் இல்லையே என்று கவலைப்பட்டான். புலவர் பொருந்தில் இளங்கீரனார் இதோ நான் இருக்கிறேன். உன் சிறப்புக்கு ஏற்ப நான் பாடுவேன். ஆனால் ஒன்று. உன் புகழை விரிவாக்க விரும்பினால் அது விரிந்துகொண்டே செல்கிறது. சுருக்கத் தொடங்கினால் மீதம் பட்டு நின்றுவிடுகிறது. எம் போன்ற அறியாமை மிக்க புலவர்களின் கைவரிசைக்கு அடங்கவில்லை. அதற்காகப் புகழ் மிக்கவர் பிறந்த உலகத்தில் நான் பாடாமல் வாழவும் முடியாது. எனவே பாடுகிறேன் என்கிறார் புலவர். புலவர் கபிலரை இந்தப் புலவர் இவ்வாறு பாராட்டுகிறார். கபிலன் செய்யுளைச் செறிவாகப் பாட வல்ல செம்மையான நாக்கை உடையவன். வெறுக்கும்படி பிறர் பாடும் பாடல்களையும் கேட்டு அவற்றில் பயன் காணும் பண்பு மிக்கவன். அதனால் புகழ் மிக்கவன். முந்தைய பாடல்
|
|
54
|
கோனாட்டு எறிச்சலூர் மாடலன்
|
சேரமான் குட்டுவன் கோதை.
|
வாகை.
|
அரசவாகை.
|
எங்கோன் இருந்த கம்பலை முதூர்,
உடையோர் போல இடையின்று குறுகிச்,
செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல்
எம்அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே;
இரவலர்க்கு எண்மை யல்லது; புரவு எதிர்ந்து
5
வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவிகை வண்மைக்
கடுமான் கோதை துப்பெதிர்ந்து எழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்,
பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி,
10
மாசுண் உடுக்கை, மடிவாய், இடையன்
சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப்
புலிதுஞ்சு வியன்புலத்து அற்றே
வலிதுஞ்சு தடக்கை அவனுடை நாடே.
|
புறநானூறு - 54. எளிதும் கடிதும்!
|
வெண்ணெய் திருடி உண்ட கண்ணன் மேல் களவு ஏது? கண்ணன் பாம்பின் மீது ஏறிப் பாற்கடல் அலையில் துயின்றான். அரன் வேணியான். பெண்ணைத் தலையில் சுமந்தான். முந்தைய பாடல்
|
|
55
|
மதுரை மருதன் இளநாகனார்.
|
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
|
பாடாண்.
|
செவியறிவுறூஉ.
|
ஓங்கு மலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ,
ஒரு கணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெரு விறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல,
5
வேந்து மேம்பட்ட பூந்தார் மாற!
கடுஞ் சினத்த கொல் களிறும்;
கதழ் பரிய கலி மாவும்,
நெடுங் கொடிய நிமிர் தேரும்,
நெஞ் சுடைய புகல் மறவரும், என
10
நான்குடன் மாண்ட தாயினும், மாண்ட
அறநெறி முதற்றே, அரசின் கொற்றம்;
அதனால், நமரெனக் கோல்கோ டாது,
பிறர் எனக் குணங் கொல்லாது,,
ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்,
15
திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்,
வானத்து அன்ன வண்மையும், மூன்றும்,
உடையை ஆகி, இல்லோர் கையற,
நீநீடு வாழிய நெடுந்தகை! தாழ்நீர்!
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்
20
நெடுவேள் நிலைஇய காமர் வியந்துறைக்
கடுவளி தொகுப்ப ஈண்டிய
வடுஆழ் எக்கர் மணலினும் பலவே!
|
புறநானூறு - 55. மூன்று அறங்கள்!
|
சிவபொருமானின் முக்கண்ணில் நெற்றிக்கண் போல ஏனைய இருபெரு வேந்தரின் மேம்பட்டு விளங்கும் மாறனே! யானை, குதிரை, தேர், மறவர் என நாற்படையுடன் சிறந்து விளங்கினாலும் அரசின் வெற்றி அறநெறியில் உள்ளது. எனவே நம்முடையவர் என்று அவரது குணத்தை ஏற்றுக்கொள்ளாமலும், பிறர் என்று அவரது குணத்தைக் கொன்று போடாமலும் ஞாயிறு போல் ஆண்மைத்திறமும், திங்கள் போல் குளுமைப் பண்பும், மழை போல் கொடைத்திறமும் கொண்டு இல்லோர் வறுமையைப் போக்கி நீடு வாழ்க. முருகன் குடிகொண்டுள்ள செந்தில் கடலோர மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் பல்லாண்டுகாலம் வாழ்க. முந்தைய பாடல்
|
|
56
|
மதுரைக் கணக்காயனார் மகனார்
|
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
|
பாடாண்.
|
பூவை நிலை.
|
ஏற்று வலன் உயரிய எரிமருள் அவிர்சடை,
மாற்றருங் கணிச்சி, மணி மிடற் றோனும்,
கடல் வளர் புரிவளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக்கொடி யோனும்;
மண் ணுறு திருமணி புரையும் மேனி,
5
விண்ணுயர் புல்கொடி, விறல்வெய் யொனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றிப்,
பிணிமுக ஊர்தி, ஒண்செய் யோனும்_என
ஞாலம் காக்கும் கால முன்பின்,
தோலா நல்இசை, நால்வர் உள்ளும்,
10
கூற்றுஒத் தீயே, மாற்றருஞ் சீற்றம்;
வலிஒத் தீயே, வாலி யோனைப்;
புகழ்ஒத் தீயே, இகழுநர் அடுநனை;
முருகுஒத் தீயே, முன்னியது முடித்தலின்;
ஆங்குஆங்கு அவரவர் ஒத்தலின், யாங்கும்
15
அரியவும் உளவோ, நினக்கே? அதனால்,
இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா,
யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனை கலத்து ஏந்தி, நாளும்
ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ்சிறந்து,
20
ஆங்கினிது ஒழுகுமதி! ஓங்குவாள் மாற!
அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவும், குடதிசைத்
தண்கதிர் மதியம் போல்வும்,
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே!
25
|
புறநானூறு - 56. கடவுளரும் காவலனும்!
|
காளை மாட்டினை வெற்றியாக உயர்த்திய அழல் போல் ஒளியுடைய சடையினையும் விலக்குதற்கு அரிய மழுவை உடைய நீலமணிபோலும் கழுத்தை உடைய சிவனும், கடலில் வளரும் புரியுடைய சங்கினை ஒத்த மேனியையுடைய கொலையை விரும்பும் கலப்பையையும் பனைக் கொடியையுமுடைய பலராமனும், கழுவிய அழகிய நீலமணிபோலும் மேனியையும் வான் அளவிற்கு ஓங்கிய கருடக்கொடியையுடைய வெற்றியை விரும்புவோனும் ஆகிய மாயோனும், நீலமணிபோலும் நிறத்தையுடைய மயிற்கொடியை உயர்த்திய, மாறாத வெற்றியையுடைய பிணிமுகம் என்ற ஊர்தியைக் கொண்ட முருகனும், என உலகத்தைக் காக்கும் முடிவுகாலத்தைச் செய்யும் வலிமையினையும் தோல்வியில்லாத நற்புகழினையுமுடைய இந்த நால்வர் உள்ளும், விலக்க முடியாத சினத்தால் கூற்றுவனை ஒத்தவை, வலிமையில் பலராமனை ஒத்தவை, புகழில் பகைவரைக் கொல்லும் மாயோனை ஒத்தவை, எண்ணியதை முடிப்பதில் முருகனை ஒத்தவை. அப்படி அப்படி அவரவரை ஒத்ததால் எங்கும் அரியவை உளதோ நுமக்கு? அதனால் பரிசில் வேண்டி வருவோர்க்கு பெரிதும் வழங்கி, யவனர் நல்ல குப்பியில் கொண்டு வந்த குளிர்ந்த நறுமணமான தேறலை பொன்னால் செய்த கலத்தில் ஏந்தி, நாள்தோறும் ஒளியுடைய வளையல்கள் அணிந்த பெண்கள் அதை உனக்கு ஊட்ட, மகிழ்ச்சி மிகுந்து இனிதாக இருப்பாயாக, உயர்ந்த வாளை உடைய மாறனே! அங்கே வானின் மிக்க இருளை அகற்றும் வெம்மையான கதிர்களையுடைய கதிரவன் போலவும், மேற்கில் தோன்றும் குளிர்ந்த கதிர்களையுடைய நிலவுபோலும், இவ்வுலகுடன் நீ நின்று நிலைபெறுவாயாக. குறிப்பு: பிணிமுக ஊர்தி (8) - ஒளவை துரைசாமி உரை - பிணிமுகம் யானை என்றும் சொல்லுப. மதி - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26). ஈயா - ஈந்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. யவனர் - அயோனியா என்ற கிரேக்க நாட்டின் பகுதியிலிருந்து வருபவர்களை இச்சொல் குறித்தாலும் இது பின்னால் வந்த ரோமானியர், துருக்கர், எகிப்தியர் ஆகியோரையும் குறித்திருக்கலாம் எனச் சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். சொற்பொருள்: ஏற்று வலன் உயரிய - காளை மாட்டினை வெற்றியாக உயர்த்திய, எரி மருள் அவிர் சடை - அழல் போல் ஒளியுடைய சடை (மருள் - உவம உருபு), மாற்று அரும் கணிச்சி மணி மிடற்றோனும் - விலக்குதற்கு அரிய மழுவை உடைய நீலமணியை ஒத்த கழுத்தை உடையவனும் (சிவனும்), கடல் வளர் புரி வளை புரையும் மேனி - கடலில் வளரும் புரியுடைய சங்கினை ஒத்த மேனியையுடைய, அடல் வெந்நாஞ்சில் பனைக்கொடியோனும் - கொலையை விரும்பும் கலப்பையையும் பனைக் கொடியையுமுடைய பலராமனும், மண்ணுறு திருமணி புரையும் மேனி - கழுவிய அழகிய நீலமணிபோலும் மேனியையும், விண் உயர் புள் கொடி விறல் வெய்யோனும் - வான் அளவிற்கு ஓங்கிய கருடக்கொடியையுடைய வெற்றியை விரும்புவோனும், மணி மயில் உயரிய - நீலமணிபோலும் நிறத்தையுடைய மயிற்கொடியை உயர்த்திய, மாறா வென்றி பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் - மாறாத வெற்றியையுடைய பிணிமுகம் என்ற ஊர்தியைக் கொண்ட முருகனும் (பிணிமுகம் - மயில், யானை), என - என, ஞாலம் காக்கும் கால முன்பின் - உலகத்தைக் காக்கும் முடிவுகாலத்தைச் செய்யும் வலிமையினையும், தோலா நல் இசை நால்வர் உள்ளும் - தோல்வியில்லாத நற்புகழினையுமுடைய நால்வர் உள்ளும், கூற்று ஒத்தீயே மாற்று அரும் சீற்றம் - விலக்க முடியாத சினத்தால் கூற்றுவனை ஒத்தவை (ஒத்தீயே - ஏகாரம் அசைநிலை), வலி ஒத்தீயே வாலியோனை - வலிமையில் பலராமனை ஒத்தவை (ஒத்தீயே - ஏகாரம் அசைநிலை), புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை - புகழில் பகைவரைக் கொல்லும் மாயோனை ஒத்தவை (ஒத்தீயே - ஏகாரம் அசைநிலை), முருகு ஒத்தீயே முன்னியது முடித்தலின் - எண்ணியதை முடிப்பதில் முருகனை ஒத்தவை (ஒத்தீயே - ஏகாரம் அசைநிலை), ஆங்கு ஆங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும் அரியவும் உளவோ நினக்கே - அப்படி அப்படி அவரவரை ஒத்ததால் எங்கும் அரியவை உளதோ நுமக்கு, அதனால் இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா - பரிசில் வேண்டி வருவோர்க்கு பெரிதும் வழங்கி, யவனர் நன்கலம் தந்த தண் கமழ் தேறல் பொன் செய் புனை கலத்து ஏந்தி - யவனர் நல்ல குப்பியில் கொண்டு வந்த குளிர்ந்த நறுமணமான தேறலை பொன்னால் செய்த கலத்தில் ஏந்தி, நாளும் ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து ஆங்கு இனிது ஒழுகுமதி - நாள்தோறும் ஒளியுடைய வளையல்கள் அணிந்த பெண்கள் ஊட்ட மகிழ்ச்சி மிகுந்து இனிதாக இருப்பாயாக (மதி - முன்னிலையசை), ஓங்கு வாள் மாற - உயர்ந்த வாளை உடைய பாண்டியனே, அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும் வெங்கதிர்ச் செல்வன் போலவும் - அங்கே வானின் மிக்க இருளை அகற்றும் வெம்மையான கதிர்களையுடைய கதிரவன் போலவும், குடதிசைத் தண் கதிர் மதியம் போலவும் - மேற்கில் தோன்றும் குளிர்ந்த கதிர்களையுடைய நிலவுபோலும், நின்று நிலைஇயர் உலகமோடு உடனே - இவ்வுலகுடன் நீ நின்று நிலைபெறுவாயாக (நிலைஇயர் - அளபெடை, உடனே - ஏகாரம் அசைநிலை) முந்தைய பாடல்
|
|
57
|
காவிரிப்பூம் பட்டினத்துக்
|
வஞ்சி.
|
துணை வஞ்சி.
|
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன,
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!
நின்னொன்று கூறுவது உடையோன்; என்னெனின்,
நீயே, பிறர்நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு
5
இறங்கு கதிர் கழனிநின் இளையரும் கவர்க:
நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க;
மின்னு நிமிர்ந் தன்ன நின்ஒளிறு இலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்
கடிமரம் தடிதல் ஓம்பு! நின்
10
நெடுதல் யானைக்குக் கந்தாற் றாவே
|
புறநானூறு - 57. காவன்மரமும் கட்டுத்தறியும்!
|
வல்லவரோ, அல்லாதவரோ யாராய் இருந்தாலும் புகழ்ந்தவருக்கெல்லாம் மாயவன் வேண்டியனவற்றையெல்லாம் வழங்குவான். அவனைப் போல வழங்கும் மாறனே! உனக்கு ஒன்று கூறுவேன், நீ பிறரது நாட்டைக் கைப்பற்றும் காலத்தில் அந்நாட்டு விளைச்சல் நிலங்களை உன் போர்மறவர்கள் கைப்பற்றினாலும் கைப்பற்றட்டும். ஊரைத் தீயிட்டுக் கொளுத்தினாலும் கொளுத்தட்டும். வேல்மறவர்களைக் குத்திக் கொன்றாலும் கொல்லட்டும். எது செய்தாலும் பகைவர் நாட்டுக் காவல் மரங்களை வெட்டுதலை மட்டும் கைவிட்டுவிடுக. அவை உன் யானைகளைக் கட்டிவைப்பதற்கு உதவும். (எல்லாவற்றையும் கைவிடுக என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது) முந்தைய பாடல்
|
||
58
|
காவிரிப்பூம் பட்டினத்துக்
|
பாடாண்.
|
உடனிலை.
|
நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே,
முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்
கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்,
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது.
நல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ,
5
இளையது ஆயினும் கிளைஅரா எறியும்,
அருநரை உருமின், பெருநரைப் பொறாஅச்
செருமாண் பஞ்சவர் ஏறே; நீயே,
அறந்துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென,
10
வரைய சாந்தமும், திரைய முத்தமும்,
இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்,
தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே;
பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்,
நீல்நிற உருவின், நேமியோனும், என்று
15
இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு,
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,
இந்நீர் ஆகலின், இனியவும் உளவோ?
இன்னும் கேண்மின் நும் இசைவா ழியவே;
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்
20
உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப்
பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே;
அதனால், நல்ல போலவும், நயவ போலவும்,
தொல்லோர் சென்ற நெறியர் போலவும்,
25
காதல் நெஞ்சின்நும் புணர்ச்சி; வென்று வென்று
அடுகளத்து உயர்க நும் வேலே; கொடுவரிக்
கோள்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே.
30
|
புறநானூறு - 58. புலியும் கயலும்!
|
இவன், பஞ்சவர் எனப்படும் பாண்டிய அரசர்களில் ஏறு போன்றவன். அடி இற்றுப்போன ஆலமரத்தை அதன் விழுதுகள் தாங்குவது போல முன்னோர் மாய்ந்த பின் பாண்டிய நாட்டுக் குடிமக்களின் அச்சம் போக்கி, அறநெறி பிறழாமல் ஆட்சி நடத்துபவன். உருவில் சிறியதாயினும் நல்ல பாம்பைக் கண்டு மக்கள் ஒதுங்குவது போலப் பகைவர் ஒதுங்கும்படியும், இடியைக் கேட்டு நடுங்குவது போலப் பகைவர் நடுங்கும்படியும் நாடாள்பவன். நீ, உறையூரைக் கைப்பற்றி நாடாள்பவன். இவன், நெல்லும் நீரும் எல்லாருக்கும் பொது என்று என்று எண்ணிக்கொண்டு பொதியமலைச் சந்தனம், கடல்முத்து, மும்முரசு ஆகிய மூன்றையும் தனதாக்கிக்கொண்டு ஆளும் கூடல் நகர ஆரசன். நீங்கள் இருவரும் இருபெருந் தெய்வங்களாகிய பலராமனும், திருமாலும் போல ஒன்றிப் பகைவர்கள் அஞ்சுமாறு தோன்றுகிறீர்கள். இப்படியே நீங்கள் இருந்தால் இதைக் காட்டிலும் இனிமையான நிகழ்வு வேறு என்ன இருக்கிறது? இன்னும் கேளுங்கள். உங்களின் புகழ் நிலைக்கட்டும். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்ளுங்கள். இருவரும் சேர்ந்தே இருந்தால் உலகமே உங்கள் கைக்குள் வரும். உம் பகைவர்கள் இடையிலே புகுந்து நல்லத் போலவும், நலம் பயப்பது போலவும், முன்னோர் பின்பற்றிய நெறி போலவும் ஏதாவது சொன்னால் ஏற்றுக்கொள்ளாமல் இன்று போலவே என்றும் சேர்ந்தே இருங்கள். உங்களுடைய நாட்டுக் குன்றுகளில் புலி(கோண்மா), மீன்(கெண்டை) இரண்டையும் சேர்த்துப் பொறித்துக் கொள்ளுங்கள். முந்தைய பாடல்
|
||
59
|
மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்
|
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்.
|
பாடாண்.
|
பூவைநிலை.
|
ஆரம் தாழ்ந்த அணிகிளிர் மார்பின்,
தாள்தோய் தடக்கைத், தகைமாண் வழுதி!
வல்லை மன்ற, நீநயந் தளித்தல்!
தேற்றாய், பெரும! பொய்யே; என்றும்
காய்சினம் தவிராது கடல்ஊர்பு எழுதரும்
5
ஞாயிறு அனையை, நின் பகைவர்க்குத்;
திங்கள் அனையை, எம்ம னோர்க்கே.
|
புறநானூறு - 59. பாவலரும் பகைவரும்!
|
நன்மாறன் சித்திரமாடம் என்னுமிடத்தில் துஞ்சியவன், புலவர் அவனை வாழ்த்துகிறார், மார்பில் முத்தாரம் அணிந்தவன், அவன் கை அவனது முழந்தாள் வரை நீண்டிருக்கும், தகைமைப் பண்பு மிக்கவன், விருப்பத்துடன் கொடை வழங்குபவன், தெளிவில்லாமல் யாராயிருந்தாலும் வழங்குபவன், யாருக்கும் வழங்காமல் இருந்ததில்லை (பொய் தேற்றாதவன்), அவனது பகைவர்க்குச் சுட்டெரிக்கும் சினத்துடன் கடலில் தோன்றும் ஞாயிறு போன்றவன், மற்றவர்களுக்கு குளுமையான ஒளி தரும் நிலா போன்றவன். முந்தைய பாடல்
|
|
60
|
உறையூர் மருத்துவன்
|
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன்.
|
பாடாண்.
|
குடை மங்கலம்.
|
முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்,
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவுமதி கண்டு,
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த,
சில் வளை விறலியும், யானும், வல்விரைந்து,
5
தொழுதனம் அல்லமோ, பலவே! கானல்
கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன்,
வலன் இரங்கு முரசின் வாய்வாள் வளவன்,
10
வெயில்மறைக் கொண்ட உருகெழு சிறப்பின்
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே?
|
புறநானூறு - 60. மதியும் குடையும்!
|
இரவில் கடலில் செல்லும் திமில் விளக்குகள் போல் வானத்தில் மீன்கள் தோன்றும். (புலவர் பாணர்) வர் மனைவி விறலி காட்டுமயில் போன்றவள். கடல் உப்பு ஏற்றிய வண்டியைக் காட்டுமலையில் இழுத்துச் செல்லும் வலிமை மிக்க காளைமாடு போன்றவன் வளவன். முந்தைய பாடல்
|
|
61
|
கோனாட்டு எறிச்சிலுர் மாடலன்
|
சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய
|
கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்
சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்,
மலங்கு மிளிர், செறுவின் தளம்புதடிந் திட்ட
பழன வாளைப் பரூஉக்கண் துணியல்
புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக,
5
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி,
நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும்
வன்கை வினைஞர் புன்தலைச் சிறாஅர்
தெங்குபடு வியன்பழம் முனையின், தந்தையர்
குறைக்கண் நெடுபோர் ஏறி, விசைத் தெழுந்து,
10
செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும்,
வைகல் யாணர், நன்னாட்டுப் பொருநன்,
எகுவிளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி,
சிலைத்தார் அகலம் மலைக்குநர் உளர்எனின்,
தாமறி குவர்தமக்கு உறுதி; யாம் அவன்
15
எழுஉறழ் திணிதோள் வழுவின்றி மலைந்தோர்
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது,
திருந்து அடி பொருந்த வல்லோர்
வருந்தக் காண்டல், அதனினும் இலமே!
|
புறநானூறு - 61. மலைந்தோரும் பணிந்தோரும்!
|
கொண்டையில் கூழைச்சிண்டு போட்டு தழைபோடு கூடிய பூவைச் செருகியிருக்கும் உழத்தியர் களை பறிக்கும்போது நெய்தல் பூவையும், ஆம்பல் பூவையும் களைந்து எறிவர். அந்த வயலில் மேயும் மலங்குமீனையும் வாளைமீனையும் பிடித்துத் துண்டுதுண்டுகளாக நறுக்கிச் சமைத்து, புதுநெல் அரிசிப் பொங்கலோடு சேர்த்து உண்ட வயல் தொழிலாளர்கள் நெல்லுக் கட்டுகளைத் தூக்கிக்கொண்டு தள்ளாடித் தள்ளாடி நடப்பர். அவர்களின் சிறுவர்கள் அங்குள்ள வைக்கோல் போரின்மீது ஏறி, தேங்காயைப் பறித்து உண்பர். அது நாக்குக்குத் தெவிட்டிவிட்டால் பனம்பழத்தைக் பறித்து உண்ண முயல்வார்கள். வேலேந்தி தேரில் செல்லும் சென்னி அரசனே! இப்படிப்பட்ட வளமான நாட்டைப் போரிட்டு வென்று தனதாக்கிக்கொண்டவன் நீ. உன் மார்பைத் தாக்க வருபவர் உளராயின், அவர்கள் இறுதி ஆதல் உறுதி. கணையமரம் போன்ற உன் தோளோடு போராடியவர் வாழக் கண்டதும், உன் காலடியில் கிடப்பவர்கள் வருந்தக் கண்டதும் இல்லை. முந்தைய பாடல்
|
|||
62
|
கழாத் தலையார்.
|
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்; சோழன் வேற்பறடக்
|
தும்பை.
|
தொகை நிலை.
|
வருதார் தாங்கி, அமர்மிகல் யாவது?
பொருது ஆண்டொழிந்த மைந்தர் புண்தொட்டுக்,
குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி,
நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்
எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப்,
5
பருந்து அருந்துற்ற தானையொடு செருமுனிந்து,
அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாம்மாய்ந் தனரே; குடைதுளங் கினவே;
உரைசால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே;
பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்
10
இடம்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக்,
களங்கொளற்கு உரியோர் இன்றித், தெறுவர,
உடன்வீழ்ந் தன்றால், அமரே; பெண்டிரும்
பாசடகு மிசையார், பனிநீர் மூழ்கார்,
மார்பகம் பொருந்தி ஆங்கமைந் தன்றே;
15
வாடாப் பூவின், இமையா நாட்டத்து,
நாற்ற உணவினோரும் ஆற்ற
அரும்பெறல் உலகம் நிறைய
விருந்துபெற் றனரால்; பொலிக, நும் புகழே!
|
புறநானூறு - 62. போரும் சீரும்!
|
படைவீரர்கள் மாண்ட பின்னர் அரசன் சோழனும் சேரனும் மோதிக்கொண்டனர். இதற்கு அறப்போர் போர் என்று பெயர். இந்தப் போரில் இருவரும் போர்களத்திலேயே மாண்டனர். இரு பெரு வேந்தரின் குடைகளும் முரசுகளும் போர்களத்தில் சாய்ந்து கிடந்தன. பேய்மகளிர் குருதியை வாரித் தலையில் பூசிக்கொண்டனர். புண் பட்டுச் சாவோரைத் தூங்க வைப்பதற்காக அனந்தல் பறை (சாவு மேளம்) கொட்டப்பட்டது. போர் மறவர்களின் உடல்களைப் பருந்துகள் தின்றுகொண்டிருந்தன. இறந்தவர்களின் மனைவிமாரும் பச்சைக் கீரைகளைத் தின்றுகொண்டும், பனிநீரில் குளித்துக்கொண்டும் கைம்மைக் கோலம் கொள்ளாமல் கணவருடன் சேர்ந்து மாண்டுவிட்டனர். புகழ் பெற்றவர் அடையும் வானுலகத்துக்கு நல்ல விருந்து கிடைத்தது. மாண்டவர் நாடு என்ன ஆவது? மாண்டவர் புகழ் மலரட்டும் எனப் புலவர் வாழ்த்துகிறார். முந்தைய பாடல்
|
|
63
|
பரணர்.
|
சோழன் வேற்பறடக்கைப் பெருவிறற் கிள்ளி; சேரமான்
|
தும்பை.
|
தொகை நிலை.
|
எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி,
விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே;
விறற் புகழ் மாண்ட புரவி எல்லாம்
மறத் தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே;
தேர்தர வந்த சான்றோர் எல்லாம்,
5
தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே;
விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம்,
பொறுக்குநர் இன்மையின், இருந்துவிளிந் தனவே;
சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென,
வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே,
10
என்னா வதுகொல் தானே; கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
பாசவல் முக்கித், தண்புனல் பாயும்,
யாணர் அறாஅ வைப்பின்
காமர் கிடக்கை அவர் அகன்றலை நாடே?
15
|
புறநானூறு - 63. என்னாவது கொல்?
|
எத்தனை யானைகள்! அத்தனை யானைகள்மேலும் பாய்ந்திருக்கும் அம்புகள். அதனால் அவை போரிடாமல் கிடந்தன. குதிரைகளும் வீரர்களோடு மாண்டன. தேரில் வந்த மறவர்களும் அவர்கள் அணிந்திருந்த தோல் என்னும் மார்புக் கவசம் மூடிய நிலையில் மாண்டு கிடந்தனர். முரசுகள் முழக்குவார் அற்றுக் கிடந்தன. வேந்தர்களும் சந்தனமணிந்த மார்போடு களத்தில் மாண்டு கிடந்தனர். இனி அவர்களின் நாட்டு வளம் என்ன ஆவது? நன்செய்க் கழனிகளில் பூத்த ஆம்பல் மலர்களைச் சூடிக்கொண்டு பச்சிலைகள் படர்ந்திருக்கும் குளத்து நீரில் குளித்து விளையாடும் மகளிர் மகிழ்வு என்ன ஆவது? முந்தைய பாடல்
|
|
64
|
நெடும்பல்லியத்தனார்.
|
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
|
பாடாண்.
|
விறலியாற்றுப்படை.
|
அருமிளை இருக்கை யதுவே-மனைவியும்,
வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது,
படைமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை,
யாணர் நல்லவை பாணரொடு, ஓராங்கு
5
வருவிருந்து அயரும் விருப்பினள் ; கிழவனும்
அருஞ்சமம் ததையத் தாக்கிப், பெருஞ்சமத்து
அண்ணல் யானை அணிந்த
பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே.
நல்யாழ்,ஆகுளி, பதலையொடு சுருக்கிச்,
10
செல்லா மோதில் சில்வளை விறலி!
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை,
விசும்புஆடு எருவை புசுந்தடி தடுப்பப்,
பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமாற் கண்டு,
15
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே?
|
புறநானூறு - 64. புற்கை நீத்து வரலாம்!
|
விறலி! புல் - உணவு உண்டு வாழும் நம் வறுமையைப் போக்கிக்கொள்ள அரசன் குடுமிக் கோமானைக் கண்டுவர நாம் செல்லலாமா? யாழ், ஆகுளி, பதலை ஆகிய இசைக் கருவிகளைச் சுருக்குப் பையில் போட்டுக்கொண்டு செல்லலாமா? தன் யானைப் படையால் பருந்துகளுக்கு விருந்தளித்துக் கொண்டு அவன் போர்க்களத்தில் இருக்கும்போதும் செல்லலாம். முந்தைய பாடல்
|
|
65
|
கழாஅத் தலையார்.
|
சேரமான் பெருஞ்சேரலாதன்; இவன் கரிகாற்
|
பொதுவியல்.
|
கையறுநிலை.
|
புறப்புண்பட்டோர் நாணி வடக்கிருந்து உயிர்விடும் மரபு.
|
மண்முழா மறப்பப், பண் யாழ் மறப்ப
இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்பச்,
சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப,
உழவர் ஓதை மறப்ப, விழவும்
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப,
5
உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து,
இருசுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்,
தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப்புண் நாணி, மறத்தகை மன்னன்
10
வாள் வடக்கு இருந்தனன்; ஈங்கு,
நாள்போல் கழியல, ஞாயிற்றுப் பகலே!
|
புறநானூறு - 65. நாணமும் பாசமும்!
|
எங்கும் துயரம், எதிலும் துயரம், முழவு முழக்கம் மறந்தது, யாழ் பண் மறந்தது, சமைக்கும் உண்கலம் நெய் மறந்து கவிழ்ந்து கிடந்தது, சுற்றத்தார் வண்டு மொய்க்கும் தேறல் உண்பதை மறந்தனர், உழவர் பாட மறந்தனர், ஊர்த் தெரு விழாக் கொண்டாட்டம் மறந்தது. நிறைமதி நாளில் ஒரு சுடர் (ஞாயிறு) மறைய ஒரு சுடர் (திங்கள்) தோன்றுவது போல, சேரன், சோழன் ஆகிய இருவரில் ஒருவன் வெளிப்பட மற்றொருவன் மறைந்தான். தன்னை ஒத்த அரசன் (கரிகாலன்) தன் வலிமையால் தாக்கிய வேல் தன் முதுகிலும் காயப்படுத்தியதை எண்ணி நாணம் கொண்ட அரசன் (பெருஞ்சேரலாதன்) போர்க்களத்திலேயே உயிர் துறக்கும் உண்ணா நோன்புடன் தன் வாளைத் தன்முன் நிறுத்தி வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறான். இனி, பகல் காலம் பண்டு போல் மகிழ்வாகச் செல்லாது. முந்தைய பாடல்
|
66
|
வெண்ணிக் குயத்தியார்:
|
சோழன் கரிகாற் பெருவளத்தான்.
|
வாகை.
|
அரச வாகை.
|
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
5
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்திப்,
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே!
|
புறநானூறு - 66. நல்லவனோ அவன்!
|
களிப்புநடை போடும் யானைமேல் தோன்றும் கரிகால் வளவ! கடலில் நாவாய்க் கப்பல் ஓட்டிக் காற்றையே ஆண்ட வலிமையாளரின் வழிவந்தவன் நீ. நீ போரில் வென்றாய். அதனால் நீ நல்லன். எனினும் வெண்ணிப் பறந்தலைப் (போர்க்களத்தில்) போரில் உன் வலிமை மிக்க தாக்குதலால் புறப்புண் பட்டு அதற்காக நாணி அப் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்த மன்னன் (பெருஞ்சேரலாதன்) உன்னைக் காட்டிலும் நல்லவன் அல்லனோ? முந்தைய பாடல்
|
|
67
|
பிசிராந்தையார்.
|
கோப்பெருஞ் சோழன்,
|
பாடாண்.
|
இயன்மொழி.
|
அன்னச் சேவல் ! அன்னச் சேவல் !
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்,
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலை யாம் கையறுபு இனையக்,
5
குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி,
வடமலைப் பெயர்குவை ஆயின், இடையது
சோழ நன்னாட்டுப் படினே, கோழி
உயர் நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ,
வாயில் விடாது கோயில் புக்கு, எம்
10
பெருங் கோக் கிள்ளி கேட்க, இரும்பிசிர்
ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின்
இன்புறு பேடை அணியத், தன்
அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே.
|
புறநானூறு - 67. அன்னச் சேவலே!
|
புலவர் மன்னன் தோழனிடம் அன்னச்சேவலைத் தூது விடுகிறர். அன்னச் சேவலே! போரில் வெற்றி கொண்ட அரசன் தன் நாட்டைக் காப்பது போல உலகுக்கு ஒளி தர முழுநிலா தோன்றும் மாலை நேரத்தில் நான் துணை இல்லாமல் வருந்துகிறேன். நீ குமரித்துறை அயிரை மீனை அருந்திய பின்னர் வடமலையை (திருப்பதி) நோக்கிச் செல்வாய் ஆயின் இடையில் கோழி (உறையூர்) நகர் மாடத்தில் தங்கி இளைப்பாறுக. அங்கே அரண்மனைக்குள் சென்று, அங்குள்ள பெருங்கோக்கிள்ளி கேட்கும்படி “இரும்(பெருமை மிக்க) பிசிராந்தையாரின் வளர்ப்பு அன்னம்” என்று சொல்வாயாயின் உன் பெண் - அன்னம் அணிந்து மகிழத்தக்க அணிகலன்களை அவன் தருவான். (பெற்று இன்புறலாம்) முந்தைய பாடல்
|
|
68
|
கோவூர் கிழார். பாடப்பட்டோன்;
|
பாடாண்.
|
பாணாற்றுப்படை.
|
உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்
கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது,
சில்செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து,
ஈங்குஎவன் செய்தியோ? பாண ! பூண்சுமந்து,
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து
5
மென்மையின் மகளிர்க்கு வணங்கி,வன்மையின்
ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை,
புனிறு தீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச்
சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர்
மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்,
10
உட்பகை ஒருதிறம் பட்டெனப், புட்பகைக்கு
ஏவான் ஆகலின், சாவோம் யாம் என,
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்,
தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக்
கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகத்த
15
நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை
நெடுனகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும்
உறந்தை யோனே குருசில்;
பிறன்கடை மறப்ப நல்குவன், செலினே!
|
புறநானூறு - 68. மறவரும் மறக்களிரும்!
|
பாணன் தோற்றம் - தோல் உரித்த உடும்பு கிடப்பது போல எலும்பு தோன்றும் உடலுடன் பசியுடன் காணப்பட்டான். கேள்வி என்பது யாழ். அதனை அவன் மீட்டியபோது சிலர் மட்டுமே கேட்டனர். அரசன் இருப்பு - செம்புள்ளிகள் இட்டு, அணிகலன் பூண்ட அழகிய மார்பினைக் கொண்டவன். மகளிரின் மென்மைக்கு வணங்குவான். ஆண்களை அடக்கும் பெருமை கொண்டவன் அந்த நெடுந்தகை. பிறந்த குழந்தைக்குச் சுரக்கும் தாயின் முலை போல மரம் சாய்க்கும் வெள்ளம் வரும் காவிரி ஊட்டும் நாட்டை உடையவன். போர் மறவர் - நாட்டிலே உட்பூசல் எனக் காரணம் காட்டி அரசன் போருக்கு அனுப்பாததால் செத்தாவது ஒழிவோம் என்று திணவெடுக்கும் தோளைத் தட்டிக் காட்டுபவர்கள். உறையூர் - போர்ப்பறை முழக்கம் இல்லாமல் தேர் செல்லும் வழியில் கை கவித்துத் கள் பருகுவோர் உகுத்த கள்ளின்மீது யானை நடந்து சேறாகிக் கிடக்கும் தெருக்களைக் கொண்டது. அங்கு மகிழ்ச்சிப் பெருக்கில் முழங்கும் முழவின் ஓசையைக் கேட்டுக்கொண்டு அரசன் இருப்பான். முந்தைய பாடல்
|
||
69
|
ஆலந்தூர் கிழார்.
|
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
|
பாடாண்.
|
பாணாற்றுப்படை.
|
கையது, கடன் நிறை யாழே; மெய்யது,
புரவலர் இன்மையின் பசியே; அரையது
வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவற் பாண!
பூட்கை இல்லோன் யாக்கை போலப்
5
பெரும்புல் என்ற இரும் பேர் ஒக்கலை;
வையகம் முழுவதுடன் வளைப், பையென
என்னை வினவுதி ஆயின், மன்னர்
அடுகளிறு உயவும் கொடிகொள் பாசறைக்,
குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப்.
10
புலாக் களம் செய்த கலாஅத் தானையன்
பிறங்கு நிலை மாடத்து உறந்தை யோனே!
பொருநர்க்கு ஓங்கிய வேலன், ஒரு நிலைப்
பகைப் புலம் படர்தலும் உரியன் ; தகைத் தார்
ஒள்ளெரி புரையும் உருகெழு புசும்பூண்
15
கிள்ளி வளவற் படர்குவை ஆயின்,
நெடுங் கடை நிற்றலும் இலையே; கடும் பகல்
தேர்வீசு இருக்கை ஆர நோக்கி,
நீ அவற் கண்ட பின்றைப், பூவின்
ஆடுவண்டு இமிராத் தாமரை
20
சூடாய் ஆதல் அதனினும் இலையே.
|
புறநானூறு - 69. காலமும் வேண்டாம்!
|
பாணன் - கையில் கடப்பாடுடைய யாழ், பாதுகாப்போர் இல்லாமையால் உடலில் பசி, இடுப்பில் கிழிசலைத் தைத்த ஆடை, இவற்றை மறைக்கக் கூச்சத்தோடு நடக்கும் நடை, குறிக்கோள் இல்லாதவன் உடம்பு போல் ஏங்கித் தவிக்கும் உறவினர் - ஆகியவற்றை உடையவன். உலகமெல்லாம் சுற்றி அலைந்த பின் என்னை வினவினால், சொல்கிறேன் கேள். மன்னர் பாசறையில் இருந்தபோது யானைகளைக் கொன்ற அவன் இப்போது உறையூர் மாடத்தில் இருக்கிறான். கிள்ளிவளவன் - ஓங்கிய வேலையுடைய அவன் பகைநாட்டுக்குச் செல்லப்போகிறான். தீ எரிவது போன்ற அணிகலன் பூண்டுள்ளான். அவனிடம் நீ சென்றால் வாயிலில் காத்திருக்காமல் பொன்னால் செய்த தாமரையை உனக்கு அணிவிப்பான். (வறுமையைப் போக்கிக்கொள்ளலாம்) முந்தைய பாடல்
|
|
70
|
கோவூர் கிழார்: (கோவூர்
|
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
|
பாடாண்.
|
பாணாற்றுப்படை.
|
தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண!
கயத்து வாழ் யாமை காழ்கோத் தன்ன
நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை
இனிய காண்க; இவண் தணிக எனக் கூறி;
வினவல் ஆனா முதுவாய் இரவல!
5
தைத் திங்கள் தண்கயம் போலக்,
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்,
அடுதீ அல்லது சுடுதீ அறியாது;
இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்,
கிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி,
10
நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை
சிறுவெள் ளாம்பல் ஞாங்கர்,ஊதும்
கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி, ஒண்ணுதல்,
இன்னகை விறலியொடு மென்மெல இயலிச்
15
செல்வை ஆயின், செல்வை ஆகுவை;
விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்,
தலைப்பாடு அன்று, அவன் ஈகை;
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!
|
புறநானூறு - 70. குளிர்நீரும் குறையாத சோறும்
|
பாணன் - தேன் போல் இசை ஒழுகும்படி சீறியாழ் மீட்டுபவன். குளத்து ஆமையைக் கயிற்றில் கோத்துக் கட்டியது போன்ற கிணையில் இசை முழக்குபவன். “இனிய காண்க! இவண் தணிக” (இனிமை பொங்கட்டும்! அமைதி நிலவட்டும்) என்று பாடிக்கொண்டு முழக்குபவன். கிள்ளிவளவன் நாடு - குளத்து நீர் தை மாதத்தில் மொள்ள மொள்ளக் குறையாதது போல் செல்வம் நிறைந்த நாடு. உணவு சமைக்கும் தீயைத் தவிர பகைமன்னன் சுடும் தீயை அறியாத நாடு. உடலை வளர்க்கும் உணவு - மருந்து, பிணிபோக்கும் மருந்து என்னும் இரு மருந்தினையும் விளைவிக்கும் நாடு. இந்த நல்ல நாட்டின் அரசன் கிள்ளிவளவன். வள்ளல் பண்ணன் வாழும் சிறுகுடியில் பூத்த வண்டு மொய்க்கும் ஆம்பல் பூவையும், பாதிரிப் பூவையும் சூடிக்கொண்டிருக்கும் மகிழ்ச்சியில் திளைக்கும் உன் விறலியோடு கிள்ளிவளவனிடம் சென்றால் விறகுவெட்டி பொன்முடிச்சு பெற்றதனின் மேலான செல்வம் பெறலாம். முந்தைய பாடல்
|
|
71
|
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
|
காஞ்சி
|
வஞ்சினக் காஞ்சி
|
மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து,
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து
என்னொடு பொருந்தும் என்ப ; அவரை
ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு
அவர்ப்புறம் காணேன் ஆயின் - சிறந்த
5
பேரமர் உண்கண் இவளினும் பிரிக:
அறன்நிலை திரிய அன்பின் அவையத்துத்,
திறன்இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ்
வையை சூழ்ந்த வலங்கெழு வைப்பின்
10
பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனும், மன்எயில் ஆந்தையும், உரைசால்
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,
வெஞ்சின இயக்கனும், உளப்படப் பிறரும்,
கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த
15
இன்களி மகிழ்நகை இழுக்கிய யான் ஒன்றோ,
மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென்புலம் காவலின் ஒரிஇப், பிறர்
வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே!
|
புறநானூறு - 71. இவளையும் பிரிவேன்!
|
அப்படிச் செய்யாவிட்டால், விரும்பிப் பார்க்கும் இவளை (என் மனைவியை)ப் பிரிவேன் ஆகுக. என் அவைக்களம் அறநிலை திரியாதது. அதில் திறமில்லாத ஒருவனை நடுவராக அமர்த்தி வலிமை இல்லாத ஆட்சி புரிபவன் ஆவேன் ஆகுக. மையல் அரசன் மாவன் - 1, கோட்டைக் காவலன் ஆந்தை - 2, உரையாற்றல் மிக்க புலவன் அந்துவன் சாத்தன் - 3, ஆதன் அழிசி - 4, வெஞ்சின வீரன் இயக்கன் - 5 ஆகிய ஐந்து நண்பர்களோடும் (ஐம்பெருங்குழு) பிறரோடும், கண் போன்ற நட்புறவாளர்களோடும் கூடி மகிழ்ந்து வையை சூழ்ந்த நாட்டை ஆளும் மகிழ்ச்சியை இழப்பேன் ஆகுக. இது ஒன்று மட்டும் அன்று. உலக உயிரினங்களையெல்லாம் (மன்பதை) காக்கும் தென்புலங் காவல் பாண்டியன் குடியில் பிறக்காமல் மேட்டுத்தரிசு நிலங்களைக் காக்கும் அற்பக் குடியில் பிறப்பேன் ஆகுக. முந்தைய பாடல்
|
||
72
|
பாண்டியன் தலையாலங்கானத்துச்
|
காஞ்சி
|
வஞ்சினக் காஞ்சி
|
நகுதத் கனரே, நாடு மீக் கூறுநர்;
இளையன் இவன் என உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும், தேரும், மாவும்,
படைஅமை மறவரும், உடையும் யாம் என்று
5
உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப் படேஎன் ஆயின்; பொருந்திய
என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது,
10
கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்,
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
15
புலவர் பாடாது வரைக, என் நிலவரை;
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.
|
புறநானூறு - 72. இனியோனின் வஞ்சினம்!
|
என் குடிமக்கள் நல்லாட்சி நிழல் காணாமல் ‘என் இறைவன் (அரசன்) கொடியன்’ எனப் பழி தூற்றும் நிலையினேன் ஆவேன் ஆகுக. மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட புலவர் - அவை என்னைப் பாடாமல் போகட்டும். பாதுகாப்போர் துன்புறும்போது என்னிடம் வந்து இரப்போருக்கு ஈயப் பொருள் இல்லாமல் நான் வறுமையில் வாடுவேன் ஆகுக. முந்தைய பாடல்
|
||
73
|
சோழன் நலங்கிள்ளி;
|
காஞ்சி
|
வஞ்சினக் காஞ்சி
|
மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி,
ஈயென இரக்குவர் ஆயின், சீருடை
முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்;
இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென், இந்நிலத்து
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என்
5
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல,
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்
கழைதின் யானைக் கால் அகப் பட்ட
வன்றிணி நீண்முளை போலச், சென்று அவண்
10
வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே!
|
புறநானூறு - 73. உயிரும் தருகுவன்!
|
சோழன் நலங்கிள்ளி சொல்கிறான். என் நாட்டை விரும்புபவர் மெதுவாக என்னிடம் வந்து, என் கால்களைப் பிடித்து, உன் நாட்டைக் கொடு என்று பிச்சையாகக் கேட்டால் முரசு முழங்கும் என் ஆட்சியையும், வேண்டுமானால் என் உயிரையும் அவருக்கு உரிமை ஆக்குவேன். இந்த நிலத்தில் என் ஆற்றலைப் போற்றாமல், என் உள்ள உரத்தை எள்ளி நகையாடிய மடவோன் தூங்கும் புலிமேல் கால் தடுக்கிய குருடன் போல தப்பிச் செல்லமாட்டான். மூங்கிலைத் தின்னும் வலிமை மிக்க யானையின் காலடியில் பட்ட மூங்கில் முளைக்குருத்து போல அவனைப் போரிட்டு நசுக்குவேன். அப்படி நசுக்காவிட்டால், என் மாலை நெஞ்சில் காதல் இல்லாமல் ஒப்புக்குத் தழுவும் கூந்தல் பகட்டுக்காரியின் தழுவுதலில் குழைவதாகுக. முந்தைய பாடல்
|
||
74
|
பொதுவியல்
|
குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,
5
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?
|
புறநானூறு - 74. வேந்தனின் உள்ளம்!
|
குழந்தை பிறந்து இறந்தாலும், உறுப்பில்லாத சதைப் பிண்டமாகப் பிறந்தாலும், அதையும் ஒரு ஆளாகக் கருதி, வாளால் வெட்டிக் காயம் செய்து புதைப்பார்கள். அந்தக் குடியில் பிறந்த நான் பகைவரின் வாள் பட்டு இறக்காமல், சங்கிலியால் கட்டப்பட்ட நாயைப் போல் துன்பத்தில் ஆழ்த்திய நட்பு இல்லாத பகைவரின் உதவியால் கிடைக்கும் தண்ணீரை, ஒதுக்கும் மன வலிமையின்றி, வயிற்றுப் பசியைத் தணிக்க, கையேந்தி இரந்து உண்ணும் நிலையில் இருக்கின்றேன். இப்படி வாழ்வதற்காகவா இவ்வுலகில் என்னை என் பெற்றோர் பெற்றனர்? குறிப்பு: ஒளவை துரைசாமி உரை - அரசர்க்கு மானத்தின்மிக்க அறனும் பொருளும் இன்பமுமில்லை என்று கூறினமையின் இது முதுமொழிக்காஞ்சி ஆயிற்று. புறநானூறு 93 - பீடு இல் மன்னர் நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக் காதல் மறந்து அவர் தீது மருங்கு அறுமார் அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க என வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர். சொற்பொருள்: குழவி இறப்பினும் - குழந்தை இறந்தாலும், ஊன் - தசை, தடி - தசை, பிறப்பினும் - பிறந்தாலும், ஆள் அன்று - ஒரு ஆள் இல்லை, என்று - என்று கருதி, வாளின் - வாளிலிருந்து, தப்பார் - தப்ப மாட்டார்கள், தொடர்ப்படு - சங்கிலியால் கட்டப்பட்டு, சங்கிலியால் பிணிக்கப்பட்டு, ஞமலியின் - நாயைப் போல (ஞமலியின் - இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), இடர் - துன்பம், படுத்து - செய்து, இரீஇய - இருத்திய (இரீஇய - அளபெடை), ஆழ்த்திய, கேள் அல் - நட்பு இல்லாத, கேளிர் - சுற்றி உள்ளவர்கள், வேளாண் - உதவியால் வரும், சிறு பதம் - சிறு உணவானத் தண்ணீர், மதுகை - வலிமை, இன்றி - இல்லாமல், வயிற்றுத் தீ - வயிற்றின் தீ எனும் பசி, தணிய - தணிய, தாம் - தான், இரந்து - கையேந்தி வேண்டி, உண்ணும் - உணவு உண்ணும், அளவை - அளவு உடையவரை, ஈன்மரோ - பெற்றார்களா, இவ் உலகத்தானே - இந்த உலகத்தில் (உலகத்தானே - ஏகாரம் அசைநிலை) முந்தைய பாடல்
|
||||
75
|
பொதுவியல்
|
பொருண்மொழிக் காஞ்சி
|
மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்,
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு என
குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே!
5
மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின், தாழ்நீர்
அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல, நன்றும்
நொய்தால் அம்ம தானே-மையற்று,
10
விசும்புஉற ஓங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே.
|
புறநானூறு - 75. அரச பாரம்!
|
தன் குடியில் உள்ள மூத்தவர்களைக் கூற்றுவன் கொண்டு சென்றதால் (அவர்கள் இறந்ததால்), விதி கொடுக்கத் தன்னிடம் முறைப்படி வந்த, பழைய வெற்றிகளால் உண்டான தன் குடியின் அரச உரிமையை அடைந்து ‘இப்பெரும் சிறப்பை நான் பெற்றேன்’ என்று எண்ணி குடிமக்களிடம் மிகுதியாக வரி கேட்கும் ஆண்மை மிகுதியாக இல்லாத சிறியோனாக ஒருவன் இருந்தால், அது சிறப்பானது இல்லை. அந்த அரச உரிமை அவனுக்குப் பாரமுடையதாக இருக்கும். போரில் துணிந்து போரிடும் மன எழுச்சியையும் வலுவான முயற்சியையும் உடைய ஓர் உயர்ந்தவன், அரச உரிமையைப் பெறுவான் ஆயின், ஆட்சி செய்வது, குறைந்த நீரையுடைய வற்றிய குளத்திடத்து மிதக்கும் சிறிய தண்டாகிய வெளிய (எடை இல்லாத) நெட்டியினது கோடைக்காலத்தில் உலர்ந்த சுள்ளியைப் போல் மெல்லிதாக, பாரம் இல்லாமல் இருக்கும். குற்றம் இல்லாத, வானைத் தொடும் அளவிற்கு உயர்ந்த வெண்குடையையும் முரசினையும் உடைய அரசரது ஆட்சியைப் பொருந்திய செல்வம் அதுவே. குறிப்பு: விழுமம் - விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57). சிறு கோல் வெண்கிடை என்றூழ் வாடு வறல் போல. சிறு கோல் வெண்கிடை என்றூழ் வாடு வறல் போல (8-9) - ஒளவை துரைசாமி உரை, உ. வே. சாமிநாதையர் உரை - சிறிய தண்டாகிய வெளிய கிடேச்சியினது கோடைக்கண் உலர்ந்த சுள்ளியைப் போல. மையற்று விசும்புற ஓங்கிய வெண்குடை (10-11) - ஒளவை துரைசாமி உரை, உ. வே. சாமிநாதையர் உரை - குற்றமற்று விண்ணின்கண் பொருந்த உயர்ந்த வெண்குடை. சொற்பொருள்: மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தென - தன்னுடைய குடியில் உள்ள மூத்தவர்களைக் கூற்றுவன் கொண்டு சென்றதால் (அவர்கள் சாவை அடைந்ததால்), பால் தர - விதி கொடுக்க, வந்த - தம்மிடம் வந்த, பழ விறல் - பழைய வெற்றி, தாயம் எய்தினம் ஆயின் - அரச உரிமையை அடைந்தோம் ஆயின், எய்தினம் சிறப்பு என - இத் தலைமையை நாம் பெற்றோம் என்று, குடி புரவு இரக்கும் - குடிமக்களிடம் வேண்டி கேட்கும், கூரில் ஆண்மைச் சிறியோன் பெறின் - மிகுதியில்லாத ஆண்மையுடைய சிறியோன் பெற்றால், அது சிறந்தன்று - அது சிறந்ததன்று (சிறந்ததன்று, தகரம் செய்யுள் விகாரத்தாற் கெட்டுச் சிறந்தன்று என நின்றது), மன்னே - மன் ஆக்கத்தின்கண் வந்த இடைச்சொல், ஏ அசைநிலை, மண்டு அமர்ப் பரிக்கும் - அடுத்து போரிடும் போரைப் பொறுக்கும், மதனுடை நோன் தாள் - மன எழுச்சியை உடைய வலுவான முயற்சி, விழுமியோன் பெறுகுவன் ஆயின் - உயர்ந்தவன் பெறுவான் ஆயின், தாழ் நீர் அறு கய மருங்கின் - குறைந்த நீரையுடைய வற்றிய குளத்திடத்து, சிறு கோல் வெண்கிடை - சிறிய தண்டாகிய நெட்டி, சிறிய தண்டாகிய சிறிய தண்டாகிய கிடேச்சி (மிதக்கும் தன்மையுடையது), என்றூழ் - கோடைக்காலம், கதிரவன், வெயில், வாடு வறல் போல - உலர்ந்த சுள்ளியைப் போல, நன்றும் நொய்தால் (நொய்து + ஆல், ஆல் அசைநிலை) - மிகவும் வெளிய, மிகவும் மெல்லியது, பாரம் இல்லாதது, அம்ம - அசைநிலை, தானே - தான், ஏ அசைநிலைகள், மையற்று - குற்றம் இல்லாத, விசும்பு உற ஓங்கிய - வானைத் தொடும் அளவிற்கு உயர்ந்த, வெண்குடை - வெண்குடை, முரசு கெழு வேந்தர் - முரசினையுடைய அரசர், அரசு கெழு திருவே - அரசாட்சி உடைய செல்வம் முந்தைய பாடல்
|
|||
76
|
இடைக்குன்றூர் கிழார்.
|
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
|
வாகை.
|
அரச வாகை.
|
ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும்,
புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை;
இன்றின் ஊங்கோ கேளலம்; திரளரை
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து,
5
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி,
ஒலியல் மாலையொடு, பொலியச் சூடிப்,
பாடின் தெண்கிணை கறங்கக், காண்தக,
நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடிப்,
10
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க,
ஒருதான் ஆகிப் பொருது, களத்து அடலே!
|
புறநானூறு - 76. அதுதான் புதுமை!
|
தலையாலங்கானப் போரில் பாண்டியன் நெடுஞ்செழியன் ஏழு அரசர்களை எதிர்த்துப் போரிட்டதைக் கண்ட புலவர் இவ்வாறு பாடுகிறார். ஒருவனை ஒருவன் தாக்கிப் போரிடுவதும், அப்போது ஒருவனோ அல்லது இருவருமோ மாண்டுபோவதும் இயல்புதான். ஆனால் ஒருவன் ஏழு பேரைத் தாக்கி அழித்தல் புதுமையானது. அதனை இன்று கண்டோம். இதற்கு முன்பு கண்டதில்லை. பசும்பூண் செழியனின் பெருமையையும் செம்மாப்பையும் அறியாமல் அவனை எதிர்த்துப் போரிடுவோம் என வந்த எழுவரின் கொட்டம் அடங்க வேப்பம்பூவும், உழிஞையும் சேர்த்துத் தலையில் சூடிக்கொண்டு, கிணைப்பறை முழக்கத்துடன் போரிட்டு அழித்தலை இன்றுதான் காண்கிறேன். முந்தைய பாடல்
|
|
77
|
இடைக்குன்றூர் கிழார்.
|
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்
|
வாகை.
|
அரசவாகை.
|
கிண்கிணி களைந்த கால் ஓண் கழல்தொட்டுக்,
குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து,
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி,
நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்
5
யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார்பூண்டு,
தாலி களைந்தன்றும் இலனே; பால்விட்டு
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
அழுந்தபற்றி, அகல்விசும்பு ஆர்ப்புஎழக்
மகிழ்ந்தன்றும்,இகழ்ந்தன்றும்,அதனினும் இலனே.
10
|
புறநானூறு - 77. யார்? அவன் வாழ்க!
|
இளமையில் காலில் அணியும் கிண்கிணியை நீக்கிவிட்டு வீரக்கழல் அணிந்திருக்கிறான். முடி நீக்கி மொட்டை அடித்த தலையில் குடிக்குரிய வேம்பையும், போருக்கு உரிய உழிஞையையும் அணிந்திருக்கிறான். கையில் குழந்தை அணியும் குறுவளையலை நீக்கிவிட்டு வில்லைப் பிடித்துள்ளான். தேரின் மேல் பொலிவுடன் நிற்கிறான். இவன் யார்? அவன் தலையில் புணைந்துள்ள தழைப்பூக்கள் வாழ்க. இளமையில் குழந்தைகள் அணியும் தாலி இவன் கழுத்திலிருந்து இன்னும் களையப்படவில்லை. பால் பருகுவதை விட்டுவிட்டு உணவு உண்டிருக்கிறான். அவ்வப்போது, ஆங்காங்கே வந்து தாக்கும் புதிய போராளிகளைக் கண்டு வியக்கவும் இல்லை. அவர்களை இழிவாகக் கருதவும் இல்லை. அவர்களை இறுக்கிப் பிடித்து வானில் ஒலி எழும்ப நிலத்தில் போட்டுத் தான் அழித்தது பற்றித் தனக்குள் மகிழ்ச்சி கொள்ளவும் இல்லை. பெருமையாகப் பேசிக்கொண்டதும் இல்லை. முந்தைய பாடல்
|
|
78
|
இடைக்குன்றூர் கிழார்.
|
வாகை.
|
அரசவாகை.
|
வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்,
அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து,
அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன
மலைப்பரும் அகலம் மதியார், சிலைத்தெழுந்து,
விழுமியம், பெரியம், யாமே; நம்மிற்
5
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது என,
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர்; புறத்திற் பெயர,
ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான்; ஆண்டுஅவர்
மாண்இழை மகளிர் நாணினர் கழியத்,
10
தந்தை தம்மூர் ஆங்கண்,
தெண்கிணை கறங்கச்சென்று, ஆண்டு அட்டனனே.
|
புறநானூறு - 78. அவர் ஊர் சென்று அழித்தவன்!
|
என் தலைவன் வலிமை தாளினை (காலடி) உடையவன். அந்த அடி மன்னர் வணங்கி அணிவித்த மாலைகளால் பொலிவு பெற்றது. பகைவர் நடுங்கும் பாங்கினைக் கொண்டது. குகையில் இருக்கும் புலி முணங்கு நிமிர்ந்து (சோம்பல் முரித்துக்கொண்டு) இரைக்குப் புறப்பட்டது போலப் போருக்குப் புறப்பட்டுள்ளான். பிறர் எதிர்த்துப் போரிட முடியாத அவனது நெஞ்சுரத்தை மதிக்காமல், வீர முழக்கம் செய்துகொண்டு எழுந்து ‘யாமே சிறந்தவர், பெரியவர், நம்மோடு இளையன் போரிட வந்துள்ளான், நமக்கு இன்று நல்ல கொண்டி(வேட்டை)' என்று சொல்லிக்கொண்டு புதிய போராளிகள் புறப்பட்டுள்ளனர். அவர்கள் அற்பக் கணக்கு போட்டுள்ளனர். அவர்களை இவன் புறமுதுகிட்டு ஓடச் செய்வான். இங்கு அவர்களை அழிப்பது மட்டுமல்லாது அவர்களின் நாட்டிற்கே துரத்திச் சென்று அங்குள்ள அவர்களது மகளிர் நாணுமாறு அழித்தான். தன் கிணைப்பறை முழக்கத்துடன் அவர்களை அழித்தான். முந்தைய பாடல்
|
||
79
|
இடைக்குன்றூர் கிழார்.
|
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
|
வாகை.
|
மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி,
மன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்து,
தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி,
வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே;
5
எஞ்சுவர் கொல்லோ, பகல்தவச் சிறிதே?
|
புறநானூறு - 79. பகலோ சிறிது!
|
மதுரை மூதூர் குளத்தில் நீராடிய பின்னர், (தன் குடிக்கு உரிய அடையாளப் பூவாகிய) வேப்பம்பூக் குழையைத் தலையில் சூடிக்கொண்டு, கிணைப்பறை பின்தொடர்து முழங்கிக்கொண்டு வர, செழியன் போர்க்களத்துக்கு வந்திருக்கிறான். வம்புக்கு எதிர்த்து நிற்கும் போர்மறவர்ளோ பலர். போரிடும் பகல் காலமோ சிறியது. இன்றைய போரில் சிலர் செழியனால் கொல்லப்படாமல் மிஞ்சிவிடுவார்களோ? முந்தைய பாடல்
|
||
80
|
சாத்தந்தையார்.
|
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
|
தும்பை.
|
எருமை மறம்.
|
இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்,
மைந்துடைமல்லன் மதவலி முருக்கி,
ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே;
நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப்
5
போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம-
பசித்துப் பணைமுயலும் யானை போல,
இருதலை ஒசிய எற்றிக்,
களம்புகும் மல்லன் கடந்துஅடு நிலையே.
|
புறநானூறு - 80. காணாய் இதனை!
|
மல்லன் உடல் மதமதப்பு (திமிர்) மிக்கவன். இவனும் போர்வைக் கோப்பெருநற்கிள்ளியும் மோதிக்கொண்டனர். மற்போர் நிகழ்ந்தது. போரிடும்போது கிள்ளியின் ஒருகால் மார்போடு மோதி மண்டியிட்டிருந்தது. மற்றொரு கால் பின்னிருந்து தாக்கும் படையை உதைத்து முறியடித்துக் கொண்டிருந்தது. பசியால் தென்னை மட்டை இரண்டு பக்கமும் வளையும்படி முறித்து இழுக்கும் யானை போலக் கிள்ளி போரிட்டுக்கொண்டிருந்தான். இதனைத் தித்தன் காண்பானாக என்கிறார் புலவர். (கிள்ளியின் வலிமையைத் தித்தன் உணராதிருந்தான் என்பது புலவர் கூற்றால் தெரியவருகிறது) முந்தைய பாடல்
|
|
81
|
சாத்தந்தையார்
|
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி
|
வாகை
|
அரசவாகை
|
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே
கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
யார்கொல் அளியர் தாமே ஆர்; நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
கவிகை மள்ளன் கைப்பட் டோரே?
5
|
புறநானூறு - 81. யார்கொல் அளியர்?
|
கிள்ளி ஆத்திப்பூ மாலை அணிந்திருக்கிறான். வில்லை வளைத்துக்கொண்டு கவிந்த கையுடன் காணப்படுகிறான். அவனது படை ஆர்த்து எழுவது கடலைக் கட்டிலும் பெரிதாக உள்ளது. அவன் களிற்றின் முழக்கம் இடியோசையைக் காட்டிலும் பெரிதாகித் தாங்க முடியவில்லை. இந்த நிலையில் அவன் கைக்குள் அகப்பட்டவர், இரக்கம் கொள்ளத்தக்கவர் யாராக இருக்கக்கூடும்? முந்தைய பாடல்
|
|
82
|
சாத்தந்தையார்.
|
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
|
வாகை.
|
அரசவாகை.
|
சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்றுற்றெனப்
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்,
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ;
ஊர்கொள வந்த பொருநனொடு,
5
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!
|
புறநானூறு - 82. ஊசி வேகமும் போர் வேகமும்!
|
ஊரைக் கைப்பற்ற வந்த போராளியோடு ஆத்திமாலை சூடிக்கொண்டு கிள்ளி போரிட்டான். அப்போது அவன் கை விரைந்து செயல்பட்டது. ஊரில் திருவிழா. மனைவி மகனைப் பெற்றுக்கொண்டிருக்கிறாள். மழை பொழிந்துகொண்டிருக்கிறது. பொழுது இறங்கி இருண்டுகொண்டிருக்கிறது. இந்தப் பரபரப்பான சூழலில் மனைவிக்காகக் கட்டில் பின்னுபவன் கை விரைந்து செயல்படுவது போல, கிள்ளியின் கை போரில் செயல்பட்டது. முந்தைய பாடல்
|
|
83
|
பெருங்கோழி நாய்கண் மகள்
|
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
|
கைக்கிளை.
|
பழிச்சுதல்.
|
அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன்
தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;
அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே;
என்போற் பெருவிதுப் புறுக; என்றும்
ஒருபால் படாஅது ஆகி
5
இருபாற் பட்ட இம் மையல் ஊரே!
|
புறநானூறு - 83. இருபாற்பட்ட ஊர்!
|
வீரக்கழல் அணிந்த கால்களையும் கருமை நிறத் தாடியையுமுடைய இளைஞன் மேல் நான் கொண்ட காதலால், என் வளையல்கள் என் கையிலிருந்து கழலுகின்றன. என்னுடைய காதல் என் தாய்க்குத் தெரிந்து விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். என் தலைவனின் வலிய தோள்களைத் தழுவ விரும்புகின்றேன். ஆனால் அவையில் பலரும் இருப்பதால் எனக்கு நாணமாக உள்ளது. என்னைப் போன்று பெரியதாக நடுங்கட்டும், ஒரு பக்கமும் சாராது, இரு பக்கமுமாக உள்ள இந்த மயங்கும் ஊர். குறிப்பு: அவை நாணுவலே (3) - ஒளவை துரைசாமி உரை - சான்றோர் கூடிய அவையினர் ஒருத்தியை ஒருவனுக்குத் திருமணத்தால் கூட்டி வைப்பர் ஆதலின், அவர் தாம் விரும்பியவாறு தாமே சென்று கூடற்கு அவ்வயையினர் இகழ்வர் என்பதுபற்றி ‘அவை நாணுவர்’ என்றார். இரு பாற்பட்ட இம் மையல் ஊரே (6) - ஒளவை துரைசாமி உரை - யாயும் அவையுமாகிய இரு கூற்றிற் பட்ட இம் மயக்கத்தையுடைய ஊர். சொற்பொருள்: அடி புனை தொடு கழல் - வீரக்கழல் அணிந்த கால்கள், மை அணல் காளைக்கு - கருநிறத் தாடியையுடைய இளைஞன் மேல் கொண்ட காதலால், என் தொடி கழித்திடுதல் - என்னுடைய வளையல்கள் என் கையிலிருந்து கழலுதலால் (நெகிழ்வதால்), யான் யாய் அஞ்சுவலே - என் தாய்க்கு அஞ்சுகிறேன் (அஞ்சுவல் - தன்மையொருமை வினைமுற்று, ஏகாரம் அசைநிலை), அடு தோள் முயங்கல் - அவனுடைய வலிய தோள்களைத் தழுவுதல், அவை நாணுவலே - ஆனால் அவையின் முன் அவனைத் தழுவதற்கு நாணுகின்றேன், என் போல் பெரு விதுப்புறுக - என்னைப் போன்று பெரியதாக நடுங்கட்டும், என்றும் ஒரு பால் படாஅது ஆகி - ஒரு பக்கமும் சாராது (படாஅது - அளபெடை), இரு பாற்பட்ட - இரு பக்கமாக உள்ள, இம் மையல் ஊரே - இந்த புரியாமல் மயங்கும் ஊர் (ஊரே - ஏகாரம் அசைநிலை) முந்தைய பாடல்
|
|
84
|
பெருங்கோழி நாய்கன் மகள்
|
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
|
கைக்கிளை.
|
பழிச்சுதல்.
|
என், புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே;
யாமே, புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே
போறெதிர்ந்து என் போர்க்களம் புகினே,
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்,
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
5
உமணர் வெரூஉம் துறையன் னன்னே!
|
புறநானூறு - 84. புற்கையும் பெருந்தோளும்!
|
என்னுடைய தலைவன் கஞ்சியை உண்டாலும், பெரிய தோளினையுடையவன். நானே, அவன் இருக்கும் இடத்தின் சுவரின் புறப்பகுதியில் இருந்தும், பொன்னைப்போன்ற பசலை உடையவளாக உள்ளேன். போரை ஏற்று, என் தலைவன் போர்க்களத்தில் புகுந்தால், பெரும் ஆரவாரத்தையுடைய விழாக்கள் கொண்ட ஊரிடத்தில், செருக்குற்ற (தங்கள் மறம் பேசி மகிழ்ந்த) வீரர்களுக்கு, அவன் உப்பு வணிகர்கள் அஞ்சும் ஏற்றத் தாழ்வு உடைய துறையைப் போன்றவன். குறிப்பு: என்னை, என் ஐ - அன்னை என்னை என்றலும் உளவே தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபின என்மனார் புலவர் (தொல்காப்பியம், பொருளியல் 50). சொற்பொருள்: என் ஐ புற்கை உண்டும் - என்னுடைய தலைவன் கஞ்சியை உண்டாலும், பெருந்தோளன்னே - பெரிய தோளினையுடையவன் (பெருந்தோளன்னே - ஏகாரம் அசைநிலை), யாமே - நானே, புறஞ்சிறை இருந்தும் - சுவரின் புறப்பகுதியில் இருந்தும், பொன் அன்னம்மே - பசலை உடையவளாக உள்ளேன் (அன்னம்மே - தன்மைப் பன்மை, செய்யுளோசை நோக்கி மகர ஒற்று விரிந்தது), போர் எதிர்ந்து என் ஐ போர்க்களம் புகினே - போரை ஏற்று என் தலைவன் போர்க்களத்தில் புகுந்தால் (புகினே - ஏகாரம் அசைநிலை), கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண் - பெரும் ஆரவாரத்தையுடைய விழாக்கள் கொண்ட ஊரிடத்தில் (கல்லென் - ஒலிக்குறிப்பு), ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு - செருக்குற்ற (தங்கள் மறம் பேசி மகிழ்ந்த) வீரர்களுக்கு, உமணர் வெரூஉம் துறை அன்னன்னே - உப்பு வணிகர்கள் அஞ்சும் ஏற்றத் தாழ்வு உடைய துறையைப் போன்றவன் (வெரூஉம் - அளபெடை, அன்னன்னே - ஏகாரம் அசைநிலை) முந்தைய பாடல்
|
|
85
|
பெருங்கோழி நாய்கன் மகள்
|
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
|
கைக்கிளை
|
பழிச்சுதல்.
|
என்னைக்கு ஊர் இது அன்மை யானும்,
என்னைக்கு நாடு இது அன்மை யானும்,
ஆடுஆடு என்ப, ஒருசா ரோரே;
ஆடன்று என்ப, ஒருசா ரோரே;
நல்ல,பல்லோர் இருநன் மொழியே;
5
அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம்இல்,
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று,
யான்கண் டனன் அவன் ஆடா குதலே.
|
புறநானூறு - 85. யான் கண்டனன்!
|
என்னுடைய தலைவனுக்கு இது ஊர் இல்லையாயினும், என் தலைவனுக்கு இது நாடு இல்லையாயினும், அவன் வெற்றியடைவான் எனக் கூறுவார்கள் ஒரு சிலர். அவன் வெற்றியடைய மாட்டான் என்பார்கள் ஒரு சிலர். பலர் கூறும் சொற்களும் நல்லவையே ஆகும். அழகிய சிலம்புகள் ஒலிக்க, நான் ஓடி, எங்கள் மனையின்கண் உள்ள, முழவைப்போன்ற அடியையுடைய பனை மரத்தில் பொருந்தி நின்று, அவன் வெற்றியடையதலைக் கண்டேன். குறிப்பு: நல்ல (5) - உ. வே. சாமிநாதையர் உரை - இகழ்ச்சிக்குறிப்பு. என்னை, என் ஐ - அன்னை என்னை என்றலும் உளவே தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபின என்மனார் புலவர் (தொல்காப்பியம், பொருளியல் 50). சொற்பொருள்: என் ஐக்கு ஊர் இஃது அன்மையானும் - என்னுடைய தலைவனுக்கு இது ஊர் இல்லையாயினும், என் ஐக்கு நாடு இஃது அன்மையானும் - என் தலைவனுக்கு இது நாடு இல்லையாயினும், ஆடு ஆடு என்ப ஒரு சாரோரே - அவன் வெற்றியடைவான் எனக் கூறுவார்கள் ஒரு சிலர், ஆடன்று என்ப ஒரு சாரோரே - அவன் வெற்றியடைய மாட்டான் என்பார்கள் ஒரு சிலர் (சாரோரே - ஏகாரம் அசைநிலை), நல்ல பல்லோர் இரு நன் மொழியே - பலர் கூறும் சொற்களும் நல்லவையே ஆகும் (மொழியே - ஏகாரம் அசைநிலை), அம் சிலம்பு ஒலிப்ப ஓடி - அழகிய சிலம்புகள் ஒலிக்க நான் ஓடி, எம் இல் முழா அரைப் போந்தை பொருந்தி நின்று - எங்கள் மனையின்கண் உள்ள, முழவைப்போன்ற அடியையுடைய பனை மரத்தில் பொருந்தி நின்று, யான் கண்டனன் - நான் கண்டேன், அவன் ஆடாகுதலே - அவன் வெற்றியடையதலை (ஆடாகுதலே - ஏகாரம் அசைநிலை) முந்தைய பாடல்
|
|
86
|
காவற் பெண்டு காதற்பெண்டு
|
வாகை
|
ஏறாண் முல்லை
|
சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல்அளை போல,
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!
5
|
புறநானூறு - 86. கல்லளை போல வயிறு!
|
என் சிறிய இல்லத்தில் உள்ள நல்ல தூணைப் பற்றிக் கொண்டு “உன் மகன் எங்கு உள்ளான்?” என்று நீ கேட்கிறாய். என் மகன் எங்கு இருக்கிறான் என்பது எனக்குத் தெரியாது. அவனைப் பெற்ற என் வயிறு புலி இருந்து விட்டுப் போன கல் குகையைப் போன்றது. அத்தகைய வீரம் பொருந்திய அவன் போர்க்களத்தில் தோன்றுவான். அங்கு அவனைக் காணலாம்! சொற்பொருள்: சிற்றில் - சிறிய இல்லம், நற்றூண் - நல்ல தூண், பற்றி - பற்றிக் கொண்டு, நின் மகன் - உன் மகன், யாண்டு உளனோ - எங்கு உள்ளான், என - என்று, வினவுதி - நீ வினவுகிறாய் (வினவுதி - முன்னிலை வினைமுற்று), என் மகன் - என் மகன், யாண்டு உளன் ஆயினும் - எங்கு உள்ளான் என்று, அறியேன் - நான் அறியவில்லை, ஓரும் - அசைச்சொல், புலி - புலி, சேர்ந்து - கிடந்து, போகிய - போன, கல் அளை - கல் குகை, போல - போல, ஈன்ற வயிறோ - பெற்ற வயிறு, இதுவே - இது தான், தோன்றுவன் - தோன்றுவான், மாதோ - அசைச்சொல், போர்க் களத்தானே - போர்க்களத்தில் (போர்க்களத்தானே - ஏகாரம் அசைநிலை) முந்தைய பாடல்
|
||
87
|
அவ்வையார்.
|
அதியமான் நெடுமானஞ்சி.
|
களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,
எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.
|
புறநானூறு - 87. எம்முளும் உளன்!
|
பகைவர்களே! போர்க்களத்தில் புகுவதைத் தவிருங்கள். எதிர்த்துப் போரிடும் வீரன் ஒருவன் எங்களிடத்தும் இருக்கின்றான். ஒரே நாளில் எட்டு வலிமையான தேர்களைச் செய்யும் திறனுடைய தச்சன் ஒருவன், ஒரு மாதம் கருத்துடன் உழைத்துச் செய்த தேர்ச்சக்கரம் போன்றவன் அவன். சொற்பொருள்: களம் - போர்க்களம், புகல் - புகுதல், ஓம்புமின் - பாதுகாத்துக் கொள்ளுங்கள் (மின் - முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), தெவ்விர் - பகைவர்களே, போர் - போர் செய்ய, எதிர்ந்து - எதிர்த்து, எம்முளும் - எங்கள் உள்ளும், உளன் - உள்ளான், ஒரு பொருநன் - ஒரு போர் வீரன், வைகல் - நாள், எண் தேர் - எட்டுத் தேர்கள், செய்யும் - செய்யும் திறன் கொண்ட, தச்சன் - மர வேலைப்பாடு செய்பவன், திங்கள் - மாதம், வலித்த - கருத்துடன் செய்த, கால் - தேர்ச் சக்கரம், அன்னோனே - போன்றவன் (ஏகாரம் அசைநிலை) முந்தைய பாடல்
|
|||
88
|
அவ்வையார்.
|
அதியமான் நெடுமானஞ்சி.
|
யாவிர் அயினும், கூழை தார்கொண்டு
யாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓன்ங்குதிறல்;
ஓளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்,
கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்
விழ்வுத்தோள் என்னையைக் காணா ஊங்கே.
5
|
புறநானூறு - 88. எவருஞ் சொல்லாதீர்!
|
நீவிர் யாராக இருந்தால் என்ன? உங்களைப் பின் தொடர்ந்து வரும் கூழைப்படையை வைத்துக்கொண்டு போரிட்டு வெல்வோம் என்று முனைவதை விட்டுவிடுங்கள். என் தலைவன், ஒளிரும் உயர்ந்த வேல்மழவர் (மறவர்) பின்னணி கொண்ட பெருமகன். முழவு போன்ற மார்பினைக் கொண்டவன். முழவு - விழாக்காலத்தில் நன்முழக்கத்துக்குப் பயன்படும் முழவு. மார்பு - ஒளி வீசும் அணிகலன் பூண்ட மார்பு. முந்தைய பாடல்
|
|||
89
|
அவ்வையார்.
|
அதியமான் நெடுமான் அஞ்சி.
|
தும்பை.
|
தானை மறம்.
|
இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்,
மடவரல், உண்கண், வாள்நதல், விறலி!
பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
5
சிறுவன் மள்ளரும் உளரே; அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண்கண் கேட்பின்,
அது போர்! என்னும் என்னையும் உளனே!
|
புறநானூறு - 89. என்னையும் உளனே!
|
அதியமான் நாட்டின் மீது படையெடுக்க எண்ணிய அரசன் வினாவுதலுக்குப் புலவர் ஔவையார் விடை தருகிறார். அணிகலன்களால் அழகு செய்யப்பட்டுப் பருமனாக விளங்கும் அல்குலை (பின் இடுப்பை) உடைய பெண்ணே! மை தீட்டப்பட்ட கண்ணையும், ஒளிரும் நுதல்முகத்தையும் உடைய விறலியே! ‘உன் நாட்டில் என்னை எதிர்த்துப் போரிடத் தக்க போராளிகளும் உள்ளனரோ?' என்று வேந்தே, நீ கேட்கிறாய். அடிக்கும் குச்சிக்கு அஞ்சாத பாம்பு போலச் சிறிய, பெரிய மறவர்களும் உள்ளனர். மன்றத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் போர்த்தண்ணுமையில் (போர்முரசு) காற்று மோதுவதால் உண்டாகும் சிறிய ஒலியைக் கேட்டால் அதனைப் போர் எனக் கருதி எழும் என் தலைவனும் இருக்கிறான். முந்தைய பாடல்
|
|
90
|
அவ்வையார்.
|
அதியமான் நெடுமான் அஞ்சி.
|
தும்பை.
|
தானை மறம்.
|
உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடைமல்கு குளவியொடு கமழும் சாரல்
மறப்புலி உடலின், மான்கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்?
5
அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கிய
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய,
விரிமணல் ஞெமரக், கல்பக, நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?
எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை
10
வழுவில் வன்கை, மழவர் பெரும!
இருநில மண் கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ, நீ களம் புகினே?
|
புறநானூறு - 90. புலியும் மானினமும்!
|
உடைந்த வளையல் போல மலர்ந்திருக்கும் காந்தள் மலரும், இலை மலிந்த குளவி மலரும் மணம் கமழும் மலைச்சாரலில், புலி சீறின் மான் கூட்டம் நிற்குமா? மயக்கம் தரும் வானத்துத் திசைகளில், ஞாயிறு காய்ந்தால் இருளும் உண்டோ? வரிமணல் கிழியும்படியும், தடுக்கும் கல் நொறுங்கும்படியும், அச்சு தாங்கும் அளவுக்குப் பண்டப் பாரம் ஏற்றிய வண்டியை இழுத்துச் செல்லும் பெருமிதக் காளைக்குக் கடக்கமுடியாத நிலப்பகுதியும் உண்டோ? கோட்டைக் கதவின் தாழ்ப்பாள் போன்றதும், முழந்தாள் வரை நீண்டிருப்பதுமான குறை இல்லாத, வலிமை மிக்க கைகளை உடைய மழவர் பெருமானே! நீ போர்க்களம் புகுந்தால் உன் பெருநில மண்ணைக் கைப்பற்றி முழங்கவல்ல போராளிகளும் உள்ளனரோ? இல்லை. முந்தைய பாடல்
|
|
91
|
அவ்வையார்.
|
அதியமான் நெடுமான் அஞ்சி.
|
தும்பை.
|
வாழ்த்தியல்.
|
வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை,
ஆர்கலி நறவின், அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
5
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச்,
10
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.
|
புறநானூறு - 91. எமக்கு ஈத்தனையே!
|
வெற்றி மிகுந்த குறி தவறாத வாளை எடுத்துப் பகைவர்களைப் போரில் தோற்கும்படி வென்ற, கழல விடப்பட்ட வீர வளையல்களை அணிந்த பெரிய கைகளையும், ஆரவாரத்தைச் செய்யும் கள்ளையுமுடைய அதியர் தலைவனே! போரில் பகைவரைக் கொல்லும் மறச் செல்வத்தை உடையவனும், பொன்னால் செய்யப்பட்ட மாலையையும் அணிந்தவனுமான நெடுமான் அஞ்சியே! பால் போன்ற பிறை நிலா நெற்றியில் பொலியும் தலையையும், நீலமணியைப் போன்ற கறையுள்ள கழுத்தையுடைய சிவனைப் போல நீ நிலைபெறுவாயாகப் பெருமானே! பழைய நிலைமையுடைய பெரிய மலையின் பிளவில் உள்ள, ஏறுவதற்கு அரிய உச்சியில் உள்ள, சிறிய இலையையுடைய நெல்லி மரத்தின் இனிய கனியைப் பெறுவதற்கு அரிது என்று கருதாது, அதனால் வரும் பயனை அறிந்தும் அதை என்னிடம் கூறாது உனக்குள்ளேயே வைத்து, சாதல் நீங்க எனக்கு அதை அளித்தாயே! சொற்பொருள்: வலம்படு வாய்வாள் ஏந்தி - வெற்றியுண்டான குறி தவறாத வாளை எடுத்து, ஒன்னார் களம் படக் கடந்த - பகைவர்கள் போரில் தோற்கும்படி வென்ற, கழல் தொடி தடக்கை - கழல விடப்பட்ட வீர வளை அணிந்த பெரிய கை, ஆர்கலி நறவின் அதியர் கோமான் - ஆரவாரத்தை செய்யும் கள்ளையுடைய அதியர் தலைவனே, போர் அடு திருவின் - போரில் கொல்லும் மறச் செல்வத்தையும், பொலந்தார் அஞ்சி - பொன்னால் செய்யப்பட்ட மாலையை அணிந்த அஞ்சியே, பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி - பால் போல் பிறை நெற்றியில் பொலியும் தலை (புரை - உவம உருபு), நீலமணி மிடற்று ஒருவன் போல - நீலமணி போன்ற கறையுள்ள கழுத்தையுடைய சிவன் போல, மன்னுக பெரும நீயே - நிலைபெறுவாயாக பெருமானே நீ, தொன் நிலைப் பெருமலை விடர் அகத்து - பழைய நிலைமையுடைய பெரிய மலைப் பிளவில் உள்ள, அரு மிசை கொண்ட - அரிய உச்சியில் உள்ள, சிறியிலை நெல்லித் தீங்கனி - சிறிய இலையையுடைய நெல்லியின் இனிய கனி (சிறியிலை - சிறிய இலை அல்லது சிற்றிலை என்பதன் திரிபு), குறியாது ஆதல் - பெறுவதற்கு அரிது என்று கருதாது, நின் அகத்து அடக்கி - உனக்குள்ளேயே அந்த உண்மையை வைத்து, சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே - சாதல் நீங்க எனக்கு அளித்தாயே (ஈத்தனையே - ஏகாரம் அசைநிலை) முந்தைய பாடல்
|
|
92
|
அவ்வையார்.
|
அதியமான் நெடுமான் அஞ்சி.
|
தும்பை.
|
இயன் மொழி.
|
யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள்வந் தனவால், புதல்வர்தம் மழலை;
என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார்
கடி மதில் அரண்பல கடந்து
5
நெடுமான் அஞ்சி! நீ அருளல் மாறே.
|
புறநானூறு - 92. மழலையும் பெருமையும்!
|
குழந்தைகளின் மழலைமொழி யாழ் இசையோடு பொருந்தாது. காலத்தோடும் பொருந்தாது. பொருளை அறிவதற்கும் இயலாது. அவ்வாறு இருப்பினும், தந்தையர்க்கு அம்மழலைச் சொற்கள் குழந்தைகள் மீது அன்பை வரவழைக்கின்றன. காவல் மிகுந்த மதில்களைக் கொண்ட கோட்டைகள் பலவற்றை வென்ற அதியமான் நெடுமான் அஞ்சியே! என் சொற்களும் குழந்தையின் மழலைச் சொற்களைப் போன்றவை, நீ அருள் மிகுந்து (ஒரு தந்தையைப் போல்) இருப்பதால். குறிப்பு: அருளல்மாறே - ஏகாரம் அசைநிலை. வந்தனவால் - வந்தன + ஆல், ஆல் ஓர் அசைச் சொல். சொற்பொருள்: யாழொடும் கொள்ளா - யாழிசையுடன் ஒத்து வராது, பொழுதொடும் புணரா - காலத்தோடும் பொருந்தாது, பொருள் அறிவாரா - பொருளை அறிய இயலாது, ஆயினும் - ஆனாலும், தந்தையர்க்கு - தந்தைகளுக்கு, அருள் வந்தனவால் - அருளை வரவழைக்கின்றன (வந்தன + ஆல், ஆல் ஓர் அசைச்சொல்), புதல்வர் தம் மழலை - தம் குழந்தைகளின் மழலை, என் வாய்ச் சொல்லும் - என் வாயிலிருந்து வரும் சொற்களும், அன்ன - போல, ஒன்னார் - பகைவர், கடி - காவல், மதில் - மதில் சுவர், அரண் - கோட்டை, பல - பலவற்றை, கடந்து - வென்று, நெடுமான் அஞ்சி - அதியமான் நெடுமான் அஞ்சியே, நீ அருளல்மாறே - நீ அருள்வதால் (அருளல்மாறே - ஏகாரம் அசைநிலை, மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்) தரும் இடைச்சொல்) முந்தைய பாடல்
|
|
93
|
அவ்வையார்.
|
அதியமான் நெடுமான் அஞ்சி.
|
வாகை.
|
அரச வாகை.
|
திண் பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்று அமர் கடத்தல் யாவது? வந்தோர்
தார்தாங் குதலும் ஆற்றார், வெடிபட்டு,
ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்,
5
காதல் மறந்து, அவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி,
மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க! என
10
வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ;
வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து
அண்ணல் யானை அடுகளத் தொழிய,
அருஞ்சமம் ததைய நூறி, நீ
பெருந் தகை! விழுப்புண் பட்ட மாறே.
15
|
புறநானூறு - 93. பெருந்தகை புண்பட்டாய்!
|
உன்னை எதிர்த்துப் போரிட்டு மாண்ட மன்னர், தப்பி ஓடிப்போனவர் பிழைத்திருந்து நோய்வாய்ப் பட்டு இறந்து ‘மறநெறி துணையாகப் போரில் மாண்டவர் சென்ற இடம் செல்க’ என்று அவரது உடலை வாளால் பிளந்து, நான்மறைப் பார்ப்பார் இட்ட பசும்புல்லில் வைத்து அடக்கம் செய்வதிலிருந்து தப்பித்துக்கொண்டனர். நீ பெருந்தகை. விழுப்புண் பட்டு மீண்டிருக்கிறாய். முந்தைய பாடல்
|
|
94
|
அவ்வையார்.
|
அதியமான் நெடுமான் அஞ்சி.
|
வாகை.
|
அரச வாகை.
|
ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை, பெரும ! எமக்கே ; மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய், பெரும ! நின் ஒன்னா தோர்க்கே.
5
|
புறநானூறு - 94. சிறுபிள்ளை பெருங்களிறு!
|
பெருமானே! தன்னுடைய வெண்மையான தந்தங்களை, ஊரில் உள்ள சிறுவர்கள் கழுவுவதால், நீர்த்துறையில் அமர்ந்திருக்கும் பெரிய யானை இனிமையாக இருப்பது போல நீ எங்களுக்கு இனிமையானவன். ஆனால் அதன் நெருங்க முடியாத மதம்பட்ட நிலைமை எவ்வாறு துன்பம் தருமோ, அது போல, பெருமானே, நீ உன் பகைவர்களுக்கு துன்பத்தை அளிப்பாய். குறிப்பு: கடாஅம் - ஆகுபெயராய்க் கடாம் உண்டாகிய நிலைமை குறித்து நின்றது. சொற்பொருள்: ஊர் - ஊரில் உள்ள, குறு மாக்கள் - சிறு பிள்ளைகளுக்கு, வெண்கோடு - வெண்மையான தந்தம், கழாஅலின் - கழுவுவதால் (கழாஅலின் - அளபெடை), நீர்த்துறை - நீர் நிலையின் கரையில், படியும் - படிந்து இருக்கும், அமர்ந்திருக்கும், பெருங்களிறு - பெரிய ஆண் யானை, போல - போல, நீ இனியை - நீ இனியவன், பெரும - பெருமகனே, எமக்கே - எங்களுக்கு, மற்று அதன் - ஆனால் அதனுடைய (மற்று - வினைமாற்றின்கண் வந்தது), துன் - நெருங்க, அருங் - அரிய, கடாஅம் - மதம் கொண்ட நிலை (கடாஅம் - அளபெடை), போல - போல, இன்னாய் - துன்பத்தை அளிப்பாய், பெரும - பெருமகனே, நின் - உனது, ஒன்னாதோர்க்கே - பகைவர்களுக்கு (ஒன்னாதோர் - பகைவர், ஒன்னாதோர்க்கே - ஏகாரம் அசைநிலை) முந்தைய பாடல்
|
|
95
|
அவ்வையார்.
|
அதியமான் நெடுமான் அஞ்சி.
|
பாடாண்.
|
வாண் மங்கலம்,
|
இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே,
பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து,
கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும்
5
உண் டாயின் பதம் கொடுத்து,
இல் லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே.
|
புறநானூறு - 95. புதியதும் உடைந்ததும்!
|
இங்கே இருக்கும் போர்க்கருவிகள் அனைத்தும் மயில் இறகு அணியப்பட்டு, பூமாலை சூடப்பட்டுத் திரண்ட வலிமையான காம்புகள் அழகுற செய்யப்பட்டு, நெய் பூசப்பட்டுக் காவலுடைய பெரிய அரண்மனையில் உள்ளன. அங்கே அதியமான் அரண்மனையில் இருப்பவையோ, பகைவரைக் குத்தியதால் வேலின் பக்கமும் நுனியும் சிதைந்து, எப்பொழுதும் கொல்லனின் பணியிடமாகிய சிறிய பட்டறையில் கொட்டிக் கிடக்கின்றன. செல்வமும், உணவும் நிறைந்திருக்கும் பொழுது எல்லோருக்கும் உணவளித்த பின் உணவு உண்ணுகின்றவனும், இல்லாத பொழுது உணவை அனைவருக்கும் பங்கிட்டு உடன் சேர்ந்து உண்ணுகின்றவனுமான வறியவர்களின் சுற்றத்திற்குத் தலைவன் எங்கள் மன்னன். குறிப்பு: வேலே - ஏகாரம் அசைநிலை. சொற்பொருள்: இவ்வே - இவை, வேல்கள், போர்க்கருவிகள், பீலி அணிந்து - மயில் இறகு அணியப்பட்டு, மாலை - பூமாலை, சூட்டி - சூடப்பட்டு, கண் திரள் - உடல் பகுதி திரண்ட, நோன்காழ் - வலிமையான காம்பு, திருத்தி - அழகு செய்து, நெய் அணிந்து - நெய் பூசப்பட்டு, கடி உடை - காவல் உடைய, வியன் நகர் - பெரிய வீடு, அரண்மனை, அவ்வே அவ்வே - அவையே அவையே, பகைவர் குத்தி - பகைவரைக் குத்தி, கோடு - வேலின் பக்கம், நுதி சிதைந்து - நுனி சிதைந்து, கொல் துறை - கொல்லனின் பட்டறை, குற்றில - சிறிய இடம், மாதோ - மாது, ஓ அசைநிலைகள், என்றும் - எப்பொழுதும், உண்டாயின் - உண்டு என்றால், பதம் கொடுத்து - உணவு கொடுத்து, இல்லாயின் - இல்லை என்றால், உடன் உண்ணும் - உடன் சேர்ந்து உண்ணும், இல்லோர் - இல்லாதவர்களின், ஒக்கல் - சுற்றம், தலைவன் - தலைவன், அண்ணல் - தலைமையுடையவன், எம் கோமான் - எங்கள் மன்னன், வைந்நுதி - கூர்மையான நுனி, வேலே - வேற்படை, வேல்கள். முந்தைய பாடல்
|
|
96
|
அவ்வையார்.
|
அதியமான் மகன் பொகுட்டெழினி.
|
பாடாண்.
|
இயன் மொழி.
|
அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்,
திரண்டுநீடு தடக்கை, என்னை இளையோற்கு
இரண்டு எழுந் தனவால், பகையே; ஒன்றே,
பூப்போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி,
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே,
5
விழவு இன்று ஆயினும், படு பதம் பிழை யாது,
மைஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க்
கைமான் கொள்ளு மோ? என
உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே.
|
புறநானூறு - 96. அவன் செல்லும் ஊர்!
|
என் தலைவனின் (அதியமான் நெடுமான் அஞ்சியின்) இளையோன் (மகன்) (மண் கொள்ளும் போருக்கு அடையானமான) தும்பைப் பூவைச் சூடியவுடன் இரண்டு வகையான பகை உண்டாகிவிட்டது. ஒன்று, அவனைப் பார்த்த பெண்களின் கண்கள் பசப்போடு தாக்குவது. மற்றொன்று, விழா இல்லை என்றாலும் அவன் தன் உறவுக்கூட்டத்துடன் வந்து தம் ஊர்த்துறையில் தங்கி ஆட்டுக்கறி உணவு உண்டு மகிழும்போது அவனது களிறுகள் தமது ஊர்த்துறை நீரைக் கலக்கிவிடுமோ என்று அவன் செல்லும் ஊர்மக்கள் அவன் வருவை வெறுப்பது. முந்தைய பாடல்
|
|
97
|
அவ்வையார்.
|
அதியமான் நெடுமான் அஞ்சி.
|
பாடாண்.
|
இயன் மொழி.
|
போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்,
உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்,
ஊனுற மூழ்கி, உருவிழந் தனவே;
வேலே, குறும்படைந்த அரண் கடந்தவர்
நறுங் கள்ளின் நாடு நைத்தலின்,
5
சுரை தழீஇய இருங் காழொடு
மடை கலங்கி நிலைதிரிந் தனவே;
களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர்
குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின்,
பரூஉப் பிணிய தொடிகழிந் தனவே;
10
மாவே, பரந்தொருங்கு மலைந்த மறவர்
பொலம் பைந்தார் கெடப் பரிதலின்,
களன் உழந்து அசைஇய மறுக்குளம் பினவே;
அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப்
பொலந் தும்பைக் கழல் பாண்டில்
15
கணை பொருத துளைத்தோ லன்னே;
ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? தடந்தாள்,
பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர்
நுமக்குஉரித்து ஆகல் வேண்டின், சென்றவற்கு
இறுக்கல் வேண்டும் திறையே; மறிப்பின்,
20
ஒல்வான் அல்லன், வெல்போ ரான் எனச்
சொல்லவும் தேறீர் ஆயின், மெல்லியல்,
கழற் கனி வகுத்த துணைச் சில் ஓதிக்
குறுந்தொடி மகளிர் தோள்விடல்
இறும்பூது அன்று; அது அறிந்துஆ டுமினே.
25
|
புறநானூறு - 97. மூதூர்க்கு உரிமை!
|
வாள் - போருக்காகத் தீட்டப்பட்ட வாள் மதிலைக் காத்த மறவர்களை அழித்ததால் கறிக்கறை படிந்து உரு அழகினை இழந்துவிட்டன. வேல் - சிற்றூர் அரண்களைக் கடந்து செல்கையில் அவ்வூர் மக்களை நைத்ததால் அதன் கூரான வயிர முனை மழுங்கி நிலைதிரிந்து போயின. களிறு - பகைவர் கோட்டைக் கதவின் தாழ்ப்பாள்மரமான எழுமரம் உடையும்படியும், பகைவர் களிறுகளின் குறும்பு ஆடங்கவும் தாக்கியதால் தந்தங்களில் போடப்பட்டிருந்த பூண் - வளையத்தை இழந்தன. மா - போரிடும் மறவர்களின் மீது தாவி நடந்து கறை படிந்த குளம்புகளை உடையவாயின. அரசன் - பொன்னாலான தும்பைப் பூவால் தொடுக்கப்பட்ட மாலை அணிந்த மார்பில் உள்ள கவசத் தோல் துளைபட்டுத் தோன்றுகிறான். இந்த நிலையில் இவனை எழிர்ப்பவர்களே! கேளுங்கள். “நெல் விளையும் உம் நிலம் உமக்கே உரியதாக வைத்துக்கொள்ள விரும்பினால் இவனுக்குத் திறை கொடுத்துவிடுங்கள். மறுத்தால் போரில் வெற்றி கண்ட இவன் பொறுக்கமாட்டான் என்று நான் கூறுவதை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால் உங்களைத் தழுவிய உங்கள் மனைவியரின் தோள் உங்களை இழக்கப்போவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இதனையாவது உணர்ந்துகொண்டு போரில் விளையாடுங்கள். முந்தைய பாடல்
|
|
98
|
அவ்வையார்.
|
அதியமான் நெடுமான் அஞ்சி.
|
வாகை.
|
அரச வாகை. திணை: வஞ்சியும், துறை;
|
முனைத் தெவ்வர் முரண் அவியப்
பொர்க் குறுகிய நுதி மருப்பின் நின்
இனக் களிறு செலக் கண்டவர்
மதிற் கதவம் எழுச் செல்லவும்,
பிணன் அழுங்கக் களன் உழக்கிச்
5
செலவு அசைஇய மறுக் குளம்பின் நின்
இன நன்மாச் செயக் கண்டவர்
கவை முள்ளின் புழை யடைப்பவும்,
மார்புறச் சேர்ந்து ஒல்காத்
தோல் செறிப்பில் நின்வேல் கண்டவர்
10
தோள் கழியொடு பிடி செறிப்பவும்,
வாள் வாய்த்த வடுப் பரந்த நின்
மற மைந்தர் மைந்து கண்டவர்
புண்படு குருதி அம்பு ஒடுக்கவும்
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென,
15
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும்
சுற்றத்து அனையை; ஆகலின்,போற்றார்
இரங்க விளிவது கொல்லோ; வரம்பு அணைந்து
இறங்குகதிர் அலம்வரு கழனிப்,
பெரும்புனல் படப்பை, அவர் அகன்றலை நாடே;
20
|
புறநானூறு - 98. வளநாடு கெடுவதோ!
|
உன் போர்யானை செல்வதைப் பார்த்தவர்கள் தம் மதில் கதவை ‘எழு’ என்னும் தாழ்ப்பாள் போட்டுவிட்டு உள்ளே ஒடுங்கிக்கொண்டனர். உன் குதிரை போர்க்களத்தில் பிணத்தின்மேல் குளம்பைப் பாய்ச்சிச் செல்லக் கண்டவர் கவைமுள் வேலி போட்டு வீட்டு வாயிலை அடைத்துக்கொண்டனர். தோல்கவசம் இடாத உன் வேலைக் கண்டவர் தம் உடலில் தோல்கவசம் அணிந்துகொண்டனர். உன் படைமறவர் மார்பில் விழுப்புண் வடுக்களைப் பார்த்தவர் தம் அம்புகளை எடுக்காமல் புட்டிலில் வைத்துக்கொண்டனர். நீயோ வெண்சிறு கடுகைப் புகைத்துப் போரிட விரும்பாமையைத் உன் பகைவர் தெரியப்படுத்தியும் எமன் போல் தாக்குகிறாய். இதனால், விளைந்திருக்கும் உன் பகைவர் நிலம் சாய்ந்துவிடும் நிலையில் இருக்கிறதே. முந்தைய பாடல்
|
|
99
|
அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்,
நீர்அக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல,
ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்,
பூவார் காவின், புனிற்றுப் புலால் நெடுவேல்,
5
எழுபொறி நாட்டத்து எழாஅத் தாயம்
வழுவின்று எய்தியும் அமையாய், செருவேட்டு,
இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச்
சென்று, அமர் கடந்து, நின் ஆற்றல் தோற்றிய
அன்றும், பாடுநர்க்கு அரியை; இன்றும்
10
பரணன் பாடினன் மற்கொல், மற்று நீ
முரண் மிகு கோவலூர் நூறி, நின்
அரண் அடு திகிரி ஏந்திய தோளே!
வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு,
15
|
புறநானூறு - 99.அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்,
|
உன் முன்னோர் அமரர் தேவர்களை வழிபட்டனர். அவர்களுக்கு வேள்வியில் உணவு அளித்தனர். கரும்புப் பயிரை இந்த நிலத்துக்குக் கொண்டுவந்தனர். நீர் சூழ்ந்த நில உலகில் ஆட்சிச் சக்கரத்தை உருட்டினர். நீ அவர்களைப் போல அரசுத் தாயத்தைப் பெற்றிருக்கிறாய். உன் காலிலுள்ள வீரக் கழலைக் கொடைக் கழலாக மாற்றிக்கொண்டிருக்கிறாய். உன் வேலில் பனம்பூ சூடிக்கொண்டிருக்கிறாய். ஏழு அரசர்களை வென்றிருக்கிறாய். அதன் அடையாளமாக ‘எழுபொறி நாட்டம்’ (ஏழு முடிமன்னர் தலை பொறித்த காட்சி ஆரம்) அணிந்துகொண்டிருக்கிறாய். இத்தகைய ஆற்றலை வெளிப்படுத்திய அன்று உன் வெற்றிகள் பாடமுடியாத சிறப்பினைக் கொண்டிருந்தன. இன்று நீ கோவலூரை வென்ற வேலின் பெருமையைப் ‘பரணர்’ பாடியுள்ளார். முந்தைய பாடல்
|
|||||
100
|
அவ்வையார். பாடப்பட்டோன்:
|
அதியமான் நெடுமான் அஞ்சி.
|
வாகை.
|
அரச வாகை.
|
கையது வேலே; காலன புழல்;
மெய்யது வியரே; மிடற்றது பசும்புண்;னக
வெட்சி மாமலர், வேங்கையொடு விரைஇச்,
சுரி இரும் பித்தை பொலியச் சூடி,
வரி வயம் பொருத வயக்களிறு போல,
5
இன்னும் மாறாது சினனே; அன்னோ!
உய்ந்தனர் அல்லர், இவண் உடற்றி யோரே;
செறுவர் நோக்கிய கண், தன்
சிறுவனை நோக்கியுஞ், சிவப்பு ஆனாவே.
|
புறநானூறு - 100. சினமும் சேயும்!
|
பிறந்திருக்கும் மகனைப் போர்க்கோலத்துடன் வந்து பார்க்கிறான் அரசன் அஞ்சி. கையிலே வேல். காலிலே வீரக்கழல். உடலிலே வியர்வை. கழுத்திலே பகைவர் வெட்டிய புண். பித்தை என்னும் உச்சிச்சிண்டு போட்ட தலையிலே ஊசியால் கோத்து வளைத்துக் கட்டிய பனம்பூக் கண்ணி. இந்தப் பூவோடு வெட்சிப் பூவும், வேங்கைப் பூவும் சேர்த்துத் தொடுக்கப்பட்டிருந்தது. வரிப்புலி தாக்கிய வலிமை மிக்க களிறு (ஆண்யானை) போல மாறாத சினத்துடன் காணப்படுகிறான். பகைவரைச் சினந்து பார்த்த அவன் கண்ணின் சிவப்பு இன்னும் மாறவில்லை. இவனைத் தாக்கியவர் பிழைத்தவராக மாறப்போவது இல்லை. முந்தைய பாடல்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.