id
int64 1
400
| பாடியவர்
stringlengths 0
32
| பாடப்பட்டோன்
stringlengths 0
52
| திணை
stringclasses 28
values | துறை
stringlengths 0
59
| சிறப்பு
stringclasses 36
values | poem
stringlengths 0
1.3k
| title
stringlengths 15
51
| explanation
stringlengths 31
4.28k
|
|---|---|---|---|---|---|---|---|---|
1
|
பெருந்தேவனார்.
|
இறைவன்
|
கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
5
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
10
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.
|
புறநானூறு - 1. இறைவனின் திருவுள்ளம்!
|
தலையில் கொன்றைப் பூ சூடியவன். மார்பில் கொன்றை - மாலை அணிந்தவன். ஊர்தி வெண்ணிறக் காளைமாடு. கொடியும் காளைமாடு என்று கூறுகின்றனர். தொண்டையில் நஞ்சுக் கறை. அந்தக் கறை அந்தணர் மறையில் போற்றப்படுகிறது. ஒருபாதி (இடப்புறம்) பெண் - உருவம். அதனைத் தனக்குள் மறைத்துக்கொள்வதும் உண்டு. நெற்றியில் பிறை. அந்தப் பிறையை 18 வகையான தேவ கணங்களாலும் போற்றி வணங்கப்படும். அவன் எல்லா உயிரிங்களுக்கும் பாதுகாவலாக விளங்குபவன். நீர் வற்றாத கரகத்தைக் கையில் வைத்திருப்பவன். தாழ்ந்த சடைமுடியிலும் நீர் வற்றுவதில்லை. இந்தக் கோலத்தில் அவன் தவம் செய்துகொண்டிருக்கிறான்.
|
|||
2
|
முரஞ்சியூர் முடிநாகராயர்.
|
சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்.
|
பாடாண்.
|
செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
|
மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
5
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அணியும், உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
10
யாணர் வைப்பின், நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ, பெரும!
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ,
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது, களத்து ஒழியப்
15
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்,
20
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற், றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!
|
புறநானூறு - 2. போரும் சோறும்!
|
நிலம் போல் பொறுமை, வானம் போல் சூழ்திறன், காற்றைப் போல் வலிமை, தீயைப் போல் எரிக்கும் - திறன், நீரைப் போல் அளிக்கும் கொடைத்திறன் ஆகியவற்றை உடையவன் நீ. உன் கடலிலே தோன்றிய ஞாயிறு உன் கடலிலேயே மறையும் நிலப்பரப்பை உடையவன் நீ. இப்படிப்பட்ட வானவரம்பன் நீதானா? தும்பைப் பூ சூடி ஐவரை எதிர்த்த நூற்றுவர் மாண்ட போர்க்களத்தில் இருபாலாருக்கும் பெருஞ்சோறு கொடுத்தவன் நீ. பால் புளித்தாலும், பகல் இருளானாலும், நான்கு வேதங்களின் நெறிமுறை மாறினாலும் திரிபில்லாச் சுற்றத்தாருடன் வாழ்வாயாக. இமயம் பொதியம் ஆகிய மலை அடுக்கத்தில் அந்தணர் வளர்க்கும் முத்தீ விளக்கொளியில் நவ்வி - மான்கள் உறங்குவது போல அச்சமின்றி உன் மக்கள் - சுற்றம் நிலைகொள்வதாகுக. முந்தைய பாடல்
|
|
3
|
இரும்பிடர்த் தலையார்.
|
பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.
|
பாடாண்.
|
செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
|
இரும்பிடத் தலையாரைப் பற்றிய செய்தி.
|
உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,
ஏம முரசம் இழுமென முழங்க,
நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்,
தவிரா ஈகைக், கவுரியர் மருக!
5
செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ!
பொன் னோடைப் புகர் அணிநுதல்
துன்னருந் திறல் கமழ்கடா அத்து
எயிரு படையாக, எயிற்கதவு இடாஅக்
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கில்.
10
பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி!
நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்;
பொலங் கழற்காற்,புலர் சாந்தின்
15
விலங் ககன்ற வியன் மார்ப!
ஊர் இல்ல, உயவு அரிய,
நீர் இல்ல, நீள் இடைய,
பார்வல் இருக்கைக், கவிகண் நோக்கிற்,
செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
20
அம்புவிட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை,
நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்! அது
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்
25
இன்மை தீர்த்தல் வன்மை யானே.
|
புறநானூறு - 3.வன்மையும் வண்மையும்!
|
நீ கவுரியர் மரபில் வந்தவன். அவர்கள் முழுமதி போல் உருவம் கொண்ட வெண்கொற்றக் குடையால் ஆளும் மண்ணிலுள்ள அனைத்துக்கும் நிழல் தந்தவர்கள். முரசு முழக்கத்துடன் ஆட்சிச் சக்கரத்தை உருட்டியவர்கள். நெஞ்சில் நேயம் கொண்டு இல்லை என்று சொல்லாமல் கொடை வழங்கியவர்கள். நீ கற்புக்கரசியின் கணவன். உன்னைக் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி என்பார்கள். (ஏனென்றால்) மருந்தில் கூற்றம் என்னும் நிலப்பகுதியை வென்றாய். யானைத் தலையில் இருந்துகொண்டு போரிட்டு வென்றாய். அந்த யானை பொன்னாலான ஓடைக் கவசத்தை நெற்றியில் கொண்டது. வலிமை மிக்கது. மதம் பொழிவது. கயிற்றில் கட்டிய மணி கொண்டது. அதனை உதைத்துக் கொண்டுதான் நீ அதன் தலையில் அமர்ந்திருந்தாய். உன்னை ஒன்று வேண்டுகிறேன். நிலமே மாறினாலும் நீ சொன்ன சொல் தவறாமல் வாழவேண்டும். நீ பொன்னாலான வீரக்கழலைக் காலில் அணிந்தவன். ஈரச்சந்தனம் புலர்ந்த மார்பை உடையவன். உன்னை நயந்து இரவலர் வருவர். ஊர் இல்லாத, வாழ முடியாத, நீர் இல்லாத நீண்ட வழியைக் கடந்து வருவர். வன்கண் ஆடவர் பதுங்கியிருந்து அம்பு விட வீழ்ந்தவர்களை உண்ணும் பருந்து உன்னமரத்தில் காத்திருக்கும் வழியில் வருவர். அவர்களின் நிலைமையை எண்ணிப்பார்த்து அவர்களின் வறுமையைப் போக்குவதுதான் உன் வலிமை. முந்தைய பாடல்
|
4
|
பரணர்.
|
சோழன் உருவப் பறேர் இளஞ்சேட் சென்னி.
|
வஞ்சி.
|
கொற்ற வள்ளை.
|
சோழரது படைப் பெருக்கமும், இச் சோழனது வெற்றி மேம்பாடும்.
|
வாள்,வலந்தர, மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன!
தாள், களங்கொளக், கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;
தோல்; துவைத்து அம்பின் துனைதோன்றுவ,
5
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
மாவே, எறிபதத்தான் இடங் காட்டக்,
கறுழ் பொருத செவ் வாயான்,
எருத்து வவ்விய புலி போன்றன;
களிறே, கதவு எறியாச், சிவந்து, உராஅய்,
10
நுதி மழுங்கிய வெண் கோட்டான்,
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி,
மாக் கடல் நிவந் தெழுதரும்
15
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!
அனையை ஆகன் மாறே,
தாயில் தூவாக் குழவி போல,
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.
|
புறநானூறு - 4. தாயற்ற குழந்தை!
|
வெற்றிகண்ட உன்வாள் செவ்வானம் போலக் கறைபட்டுக்கிடக்கிறது. களம்கொண்ட உன் தாளிலுள்ள வீரக்கழல் கொல்லும் களிற்றின் தந்தம் போன்றன. மார்புக் கவசமாகிய தோல் அம்பால் துளைக்கப்பட்டு நிலையில்லாமல் மின்னும் விண்மீன் கொண்ட வானம் போன்றது. குதிரையின் வாய் கடிவாளம் சுண்டியதால் காளைமாட்டைக் கடித்த புலியின் வாயைப் போன்றன. யானையின் கொம்பு பகைவர் கோட்டைக் கதவைக் குத்தி நுனி மழுங்கி உயிர் உண்ணும் எமனைப் போன்று ஆயிற்று. நீ குதிரைகள் பூட்டிய தேரில் கடலில் தோன்றும் கதிரவனைப் போலக் காட்சி தருகிறாய். இப்படியே என்றும் திகழ்வாயாக. உன்னைச் சீண்டியவர் நாடு தாய்ப்பால் குடிக்காத குழந்தை போல ஓயாமல் கூவிக்கொண்டே இருக்கட்டும். முந்தைய பாடல்
|
5
|
நரிவெரூஉத் தலையார்.
|
சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல்.
|
பாடாண்.
|
வெவியறிவுறூஉ: பொருண் மொழிக் காஞ்சியும் ஆம்.
|
பார்வையானே நோய் போக்கும் கண்ணின் சக்தி பற்றிய செய்தி.
|
எருமை அன்ன கருங்கல் இடை தோறு,
ஆனிற் பரக்கும் யானைய, முன்பின்,
கானக நாடனை!நீயோ, பெரும!
நீயோர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்;
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
5
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,
குழவி கொள் பவரின், ஓம்புமதி!
அளிதோ தானே; அது பெறல்அருங் குரைத்தே.
|
புறநானூறு - 5. அருளும் அருமையும்!
|
எருமைகள் போல் தோற்றமளிக்கும் கரிய நிறமுடைய கற்கள் நிறைந்த இடமெல்லாம் மாடுகளைப் போலப் பரவியிருக்கும் யானைகள் நிறைந்த வலிமையான காடுகளைக் கொண்ட நாட்டை ஆளும் தலைவனே! நீ இவ்வாறு வளமும், சிறப்பும் பெற்றவனாக இருப்பதால் உனக்கு ஒன்று சொல்கிறேன். கேட்பாயாக! அருளும், அன்பும் இல்லாமல், தீமைகள் செய்து, நரகத்தைத் தனது இடமாகக் கொண்டு வாழும் தீயவரோடு சேராமல், உனது நாட்டை, ஒரு குழந்தையை வளர்ப்பவர்கள் அக்குழந்தையைப் பாதுகாப்பது போல் பாதுகாப்பாயாக. அளிக்கத் தக்கது அக்காவல். அத்தகைய காக்கும் வாய்ப்பைப் பெறுவது அரியதாகும். குறிப்பு: ஒளவை துரைசாமி உரை - அருளும் அன்பும் நீக்கி, நீங்கா நிரயங் கொள்பவரொடு ஒன்றாது என்றமையால் பொருண்மொழிக் காஞ்சி ஆயிற்று. மதி - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26). அளிதோ தானே (8) - ஒளவை துரைசாமி உரை - அளிக்கத்தக்கது ஒன்று அதன் காவல், உ. வே. சாமிநாதையர் உரை - அளிக்கத்தக்கது ஒன்று அதன் காவல். அளிதோ தானே என்ற சொற்கள் வரும் பாடல்கள் (புறநானூறு 109-1, 111-1, 243-11) பிறவற்றில் இவ்விரு அறிஞர்களும் ‘இரங்கத்தக்கது அது’ என பொருள் கூறியுள்ளனர். குரை - ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப (தொல்காப்பியம், இடையியல் 24). சொற்பொருள்: எருமை - எருமை மாடுகள், அன்ன - போல, கருங்கல் - கரிய கற்கள், இடைதோறும் - இடங்கள் எல்லாம், ஆனின் - மாடுகளைப் போல், பரக்கும் - பரவியிருக்கும், யானைய - யானைகள் உடைய, முன்பின் - வலிமையான, கானக - காடுகளை அகத்தே கொண்ட, நாடனை - நாட்டினை உடையனாய் (நாடனை - ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது), நீயோ - நீ தான் (ஓகாரம் அசைநிலை), பெரும - பெருமகனே, நீயோர் ஆகலின் - நீ இவ்வாறு இருப்பதால், நின் - உனக்கு, ஒன்று - ஒன்று மொழிவல் - சொல்கிறேன், அருளும் - நெஞ்சில் ஈரமும், அன்பும் - அன்பும், நீக்கி - விலக்கி, நீங்கா - நீங்காத, நிரயம் - நரகம், கொள்பவரொடு - இடமாகக் கொள்பவரோடு, ஒன்றாது - சேராமல், காவல் - காக்கும் நாட்டை, காவல் - ஆகுபெயர் காக்கப்படும் நாட்டிற்கு, குழவி - குழந்தை, கொள்பவரின் - வளர்ப்பவர்களைப் போல் (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஓம்புமதி - பாதுகாப்பாயாக (மதி முன்னிலையசை), அளிதோ தானே - அளிக்கத் தக்கது அக்காவல் (அளிதோ - ஓகாரம் அசைநிலை, தானே - தான், ஏ அசைநிலைகள்), அது பெறல் - அத்தகைய காக்கும் வாய்ப்புப் பெறுவது, அருங்குரைத்தே - அரியது ஆகும் (அருங்குரைத்தே - குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று, ஏகாரம் அசைநிலை) முந்தைய பாடல்
|
6
|
காரிகிழார்.
|
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
|
பாடாண்.
|
செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
|
பாண்டியனின் மறமாண்பு.
|
வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,
குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்,
கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்
5
நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது
ஆனிலை உலகத் தானும், ஆனாது,
உருவும் புகழும் ஆகி, விரிசீர்த்
தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம்
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க!
10
செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்,
கடற்படை குளிப்ப மண்டி, அடர்ப் புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்,
பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து,
அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம்
15
பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்,
பணியியர் அத்தை நின் குடையே; முனிவர்
முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே!
இறைஞ்சுக, பெரும! நின் சென்னி; சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே!
20
வாடுக, இறைவ நின் கண்ணி! ஒன்னார்
நாடுசுடு கமழ்புகை எறித்த லானே!
செலிஇயர் அத்தை, நின் வெகுளி; வால்இழை
மங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே!
ஆங்க, வென்றி எல்லாம் வென்றுஅகத்துஅடக்கிய
25
தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!
தண்கதிர் மதியம் போலவும், தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்,
மன்னிய, பெரும! நீ நிலமிசை யானே!
|
புறநானூறு - 6. தண்ணிலவும் வெங்கதிரும்!
|
உன் உருவமும், புகழும் பரவ வேண்டும். வடக்கில் இமயமலைக்கு அப்பாலும், தெற்கில் குமரிமுனைக்குத் தென்பாலும், கிழக்கில் தோண்டப்பட்ட கடலுக்கு அப்பாலும், மேற்கில் பழமையான கடலுக்கு அப்பாலும், மூன்றாக அடுக்கப்பட்டுள்ள உலகங்களில் கீழே உள்ள உலகம், மேலே உள்ள உலகம் ஆகியவற்றிற்கு அப்பாலும் பரவ வேண்டும். உன் செங்கோல் ஒருபுறமும் சாயாமல் நடுவுநிலைமை கொண்டிருக்க வேண்டும். இப்படி உன் திறமை வெளிப்பட வேண்டும். உன் செயல்பாட்டுக்கு மாறுபட்ட பகைவர் நாட்டில்மீது உன் கடற்படையையும் யானைப்படையையும் ஏவி, அவர்களது பாசி பிடித்த அகழியையும், மதிலையும் கடந்து, அவர்களின் நாட்டில் பெற்ற அணிகலன்களை உன்னிடம் பரிசில் நாடி வரும் மக்களுக்கு அவர்களின் தரம் அறிந்து வழங்க வேண்டும். சிவபெருமான் ஊர்வலம் வரும்போது உன் குடை வணங்க வேண்டும். நான்மறை முதல்வர் உன்னிடம் கையேந்தும்போது நீ தலைவணங்க வேண்டும். நீ தலையில் சூடியுள்ள பூ நீ பகைவர் நாட்டை எரிக்கும் புகையால் மட்டுமே வாடவேண்டும். உன் சினம் உன் மனைவியர் ஊடும் முகத்தின்முன் காணாமல் போக வேண்டும். இப்படிப்பட்ட வெற்றியோடு தடையின்றி வழங்கும் தகைமை மிக்க ‘குடுமி’ என்னும் பெயர் கொண்ட அரசே! நீ குளுமையான நிலவு போலவும் ஒள மிக்க ஞாயிறு போலவும் இந்த நிலவுலகில் நிலைபெற்று வாழ்வாயாக! முந்தைய பாடல்
|
7
|
கருங்குழல் ஆதனார்.
|
சோழன் கரிகாற் பெருவளத்தான்.
|
வஞ்சி.
|
கொற்ற
|
களிறு கடைஇய தாள்,
கழல் உரீஇய திருந்துஅடிக்,
கணை பொருது கவிவண் கையால்,
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து
மா மறுத்த மலர் மார்பின்,
5
தோல் பெயரிய எறுழ் முன்பின்,
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல
இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ!
10
தண்புனல் பரந்த பூசல் மண் மறுத்து
மீனின் செறுக்கும் யாணர்ப்
பயன்திகழ் வைப்பின், பிறர் அகன்றலை நாடே.
|
புறநானூறு - 7. வளநாடும் வற்றிவிடும்!
|
களிற்றுப்படை, காலாள்படை ஆகியவற்றின் காலால் மிதித்தும், கை வளத்தால் அம்பு தொடுத்தும் பகைநாட்டை அழித்தாய். விரும்பி வந்த திருமகளை ஏற்க மறுத்த மலர்ந்த மார்பில் தோல் என்னும் கவசத்தை அணிந்திருக்கும் வலிமை மிக்க மார்பினை உடையவன் நீ. இரவு பகல் என்று பார்க்காமல் பகைநாட்டைச் சுட்டு அது எரியும் விளக்கில் அவர் நாட்டு மக்கள் அழுகுரலைக் கேட்பவன் நீ. இயல்தேர் வளவ! இது நல்லது அன்று. புனல் பாயும் வளநாட்டைக் காப்பதை மறுத்து மீன் பாயும் நாட்டில் இப்படிச் செய்யலாமா? முந்தைய பாடல்
|
|
8
|
கபிலர்.
|
சேரமான் கடுங்கோ வாழியாதன் : சேரமான் செல்வக்
|
பாடாண்.
|
இயன்மொழி; பூவை நிலையும் ஆம்.
|
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்,
போகம் வேண்டிப், பொதுச்சொல் பொறாஅது ,
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப,
ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகைக்,
கடந்து அடு தானைச் சேரலாதனை
5
யாங்கனம் ஒத்தியோ? வீங்குசெலல் மண்டிலம்!
பொழுதுஎன வரைதி; புறக்கொடுத்து இறத்தி;
மாறி வருதி; மலைமறைந்து ஒளித்தி;
அகல்இரு விசும்பி னானும்
பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே.
10
|
புறநானூறு - 8. கதிர்நிகர் ஆகாக் காவலன்!
|
விரைந்து செல்லும் கதிரவனே! உலகத்தைக் காக்கும் மன்னர்கள் தனக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்ற இன்பத்தை விரும்பி, இவ்வுலகம் யாவர்க்கும் பொது என்ற சொல் பொறுக்காமல், தன்னுடைய நாடு சிறியது என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு, ஊக்கமுடைய உள்ளத்துடன் குறையாத ஈகையுடனும் பகைவரை வெல்லும் படையையுடைய சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு நீ எவ்வாறு ஒப்பு ஆகுவாய்? நீ பகற்பொழுதை உனக்கென்று கூறுபடுத்துகின்றாய். பின் புறமுதுகிட்டு போகின்றாய். மாறி மாறி வருகின்றாய். மலையின் பின் மறைந்து ஒளிகின்றாய். அகன்ற பெரிய ஆகாயத்தில் பகல் பொழுதில் பல கதிர்களை விரித்து ஒளியுடன் விளங்குகின்றாய். குறிப்பு: பொழுது என வரைதி (7) - ஒளவை துரைசாமி உரை - என்பதற்கு காலத்தை பல பொழுதுகளாக (சிறுபொழுது பெரும்பொழுதுகளாக) வகுத்தற்கு ஏதுவாகுவை என்று உரைப்பினும் அமையும் உரை கிடந்தவாறே கொள்ளுமிடத்து. பகற்பொழுது நினக்கென கூறுபடுக்கும் நீ அப்பகல் போதில்தான் பல் கதிர்களையும் பரப்பி விளங்குவை என்றதாகக் கொள்க. சொற்பொருள்: வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக - உலகத்தைக் காக்கும் மன்னர்கள் தனக்குப் பணிந்து நடக்க, போகம் வேண்டி - இன்பத்தை விரும்பி, பொதுச் சொல் பொறாஅது - இவ்வுலகம் யாவர்க்கும் பொது என்ற சொல் பொறுக்காமல் (பொறாஅது - அளபெடை), இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப - தன்னுடைய நாடு சின்னது என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு, ஒடுங்கா உள்ளத்து - ஊக்கமுடைய உள்ளத்துடன், ஓம்பா ஈகைக் கடந்து அடு தானைச் சேரலாதனை யாங்கனம் ஒத்தியோ - குறையாத ஈகையுடனும் பகைவரை வெல்லும் படையையுடைய சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு நீ எவ்வாறு ஒப்பு ஆகுவாய் (ஒத்தியோ - ஒத்தி - முன்னிலை வினைமுற்று, ஓகாரம் வினா), வீங்கு செலல் மண்டிலம் - விரைந்து செல்லும் கதிரவனே, பொழுது என வரைதி - பகற்பொழுதை உனக்கென்று கூறுபடுத்துகின்றாய் (வரைதி - முன்னிலை வினைமுற்று), புறக்கொடுத்து இறத்தி - புறமுதுகிட்டு போகின்றாய் (இறத்தி - முன்னிலை வினைமுற்று), மாறி வருதி - மாறி மாறி வருகின்றாய் (வருதி - முன்னிலை வினைமுற்று), மலை மறைந்து ஒளித்தி - மலையின் பின் மறைந்து ஒளிகின்றாய் (ஒளித்தி - முன்னிலை வினைமுற்று), அகல் இரு விசும்பினானும் பகல் விளங்குதியால் பல் கதிர் விரித்தே - அகன்ற பெரிய ஆகாயத்தில் பகல் பொழுதில் பல கதிர்களை விரித்து ஒளியுடன் விளங்குகின்றாய் (விளங்குதியால் - ஆல் அசைநிலை, விரித்தே - ஏகாரம் அசைநிலை) முந்தைய பாடல்
|
|
9
|
நெட்டிமையார்.
|
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
|
பாடாண்.
|
இயன்மொழி. குறிப்பு : இதனுடன் காரிகிழாரின்
|
ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின் என
5
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
10
நன்னீர்ப் பறுளி மணலினும் பலவே!
|
புறநானூறு - 9. ஆற்றுமணலும் வாழ்நாளும்!
|
போர் அறம் - பசு, பசுப் போன்ற இயல்புடைய பார்ப்பனர், பெண்டிர், மரபுநோய் உள்ளவர், இறந்த முன்னோருக்குக் கடன் செலுத்தும் குழந்தைப்பேறு இல்லாதவர் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள். இங்கே என் அம்பு பாயும் போர் நிகழவிருக்கிறது - என்று அறவழி கூறியபின் போரிடும் பாங்குடையவன் இந்த அரசன். கொல்களிற்றின் மேல் கொடி தோன்ற இருந்துகொண்டு போரிடுபவன். இவன் என் அரசன். பெயர் குடுமித் தங்கோ (குடுமியான் மலை அரசன்). இவன் பஃறுளி ஆற்று மணலின் எண்ணுக்கையைக் காட்டிலும் பல்லாண்டுகள் வாழ்வானாக! பஃறுளி ஆறு நெடியோன் நாட்டில் ஓடிய ஆறு. இந்த நெடியோன் முந்நீர் விழா நடத்தியவன். அதில் யாழ் மீட்டும் பாணர்களுக்கு தூய பொன் அணிகளை வழங்கியவன். முந்தைய பாடல்
|
|
10
|
சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி.
|
பாடாண்.
|
இயன்மொழி.
|
வழிபடு வோரை வல்லறி தீயே!
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;
நீமெய் கண்ட தீமை காணின்,
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
5
தண்டமும் தணிதி, நீ பண்டையிற் பெரிதே;
அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப!
10
செய்து இரங்காவினைச், சேண்விளங் கும்புகழ்,
நெய்தருங் கானல் நெடியோய்!
எய்த வந்தனம்யாம்; ஏத்துகம் பலவே!
|
புறநானூறு - 10. குற்றமும் தண்டனையும்!
|
நெய்தலங்கானல் நெடியோய்! உன்னை வாழ்த்தி வேண்டுகிறேன். வழிபடுவோர் உன்னை எதற்காக வழிபடுகின்றனர் என்பதை உடனே தெரிந்துகொள். பிறன்மீது பழி கூறுபவர்களின் சொல்லை நம்பாதே. நீ ஒருவனிடம் உண்மையாகவே தீமையைக் கண்டால் ஒத்திட்டு ஆராய்ந்து தக்க தண்டனை வழங்கு. அவர் தன் தவற்றை உணர்ந்து உன் காலடியில் வணங்கி நின்றால் பண்டைய தண்டனையைக் குறை. மகளிர் அமிழ்தம் போலச் சமைத்து வந்தவர்க்கெல்லாம் வழங்கும் குற்றமற்ற வாழ்க்கையை உடையவர்கள் மகளிர். அவர்கள் தழுவுதல் அன்றி போரிடும் மள்ளர் தழுவ முடியாத கல்மலை போன்ற மார்பினை உடையவன் நீ. செய்துவிட்டு வருந்தாத நற்செயல்களைப் புரிபவன் நீ. அதனால் உன் புகழ் விளங்குகிறது. நெய்தலங்கானல் நிலத்தெய்வம் (நெடியான்) நீ. உன்னை நாடி வந்திருக்கிறேன். பலவாகப் பாராட்டிப் புகழ்கிறேன். முந்தைய பாடல்
|
||
11
|
பேய்மகள் இளவெயினியார்.
|
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
|
பாடாண்.
|
பரிசில் கடாநிலை.
|
அரி மயிர்த் திரள் முன்கை
வால் இழை, மட மங்கையர்
வரி மணற் புனை பாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து
தண் பொருநைப் புனல் பாயும்
5
விண் பொருபுகழ், விறல்வஞ்சிப்
பாடல் சான்ற விறல்வேந் தனும்மே
வெப் புடைய அரண் கடந்து,
துப்புறுவர் புறம்பெற் றிசினே:
புறம் பொற்ற வய வேந்தன்
10
மறம் பாடிய பாடினி யும்மே,
ஏர் உடைய விழுக் கழஞ்சின்,
சீர் உடைய இழை பெற்றிசினே!
இழை பெற்ற பாடி னிக்குக்
குரல் புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே.
15
என ஆங்கு,
ஒள்அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.
|
புறநானூறு - 11. பெற்றனர்! பெற்றிலேன்!
|
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடலால் புகழ் பெற்ற வஞ்சி நகர வேந்தன். இந்த வஞ்சி தண்பொருநை ஆறு பாயும் நகரம். வானளாவிய புகழும் வெற்றியும் உடைய நகரம். இந்தப் பொருநை ஆற்று மணலில் பாவை செய்து பூப் பறித்துவந்து சூட்டி மகளிர் விளையாடுவர். இவர்கள் மென்மையான மயிர் கொண்ட தம் திரண்ட கைகளையும், வெண்ணிற இழையணியும் கொண்டவர்கள். பாவைக்குப் பூச்சூட்டிய பின்னர் பொருநை ஆற்றுப் புனல்நீரில் பாய்ந்து விளையாடுவர். இவன் விரும்பிய கோட்டைகளையெல்லாம் வென்றவன். வலிமை மிக்க பெரியவர்களைப் புறங்கண்டவன். இவ்வாறு இவன் புறங்கண்ட வீரச் செருக்கைப் பாடினாள் ஒரு பாடினி. அதற்காக இவன் கழஞ்சு நிறைக்கு மிகுதியாக ஏரழகும், சீர்சிறப்பும் உடைய அணிகலன்களைப் பாடினிக்குப் பரிசாக வழங்கினான். பாடிய பாடினிக்கு உடன் - குரல் கொளைப்பண் தந்த பாணனுக்கு வெள்ளி - நாரால் தொடுத்த தங்கத் தாமரைப் பூவைப் பரிசாக வழங்கினான். முந்தைய பாடல்
|
|
12
|
நெட்டிமையார்.
|
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
|
பாடாண்.
|
இயன்மொழி.
|
பாணர் தாமரை மலையவும், புலவர்
பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்,
அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி!
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு,
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே?
5
|
புறநானூறு - 12. அறம் இதுதானோ?
|
முதுகுடுமிப் பெருவழுதியே! பாணர்க்குப் பொன்னால் செய்த தாமரை மாலை சூட்டியும், புலவர்க்கு அலங்கரிக்கப்பட்ட தேருடன் நெற்றியில் பொற்பட்டத்தால் அலங்கரிக்கப்பட்ட யானையையும் அளித்து, உன்னிடம் பரிசு பெறுவோர்க்கு நீ நல்லவை செய்து, மறுபுறம் உன் பகைவர்களுக்கு துன்பம் நேரும்படி அவர்களுடைய நாட்டை வெற்றி கொள்வது அறமான செயல்தானா? குறிப்பு: இது பழித்தது போல் புகழ்ந்தது. சொற்பொருள்: பாணர் - பாடல் இசைப்பவர்கள், தாமரை - பொற்றாமரை மலர்கள், மலையவும் - சூடவும், புலவர் - புலவர்கள், பூ - பொற்பட்டம் (யானைகளின் நெற்றியில் சூடும் அணிகலன்), நுதல் - நெற்றி, யானையோடு - யானையோடு, புனை - அலங்கரிக்கப்பட்ட, தேர் - தேர், பண்ணவும் - அமைக்கவும், அறனோ - அறம் தானோ, மற்று - அசைநிலை, இது - இவ்வாறு செய்தல், விறல் - வெற்றி, மாண் - மாட்சி, பெருமை, குடுமி - பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, இன்னா ஆக - துன்பம் ஆகுமாறு, பிறர் மண் கொண்டு - பிறர் நாட்டை வெற்றி கொண்டு, இனிய - இனியவற்றை, செய்தி - செய்வை (செய்தி - முன்னிலை வினைமுற்று), நின் - உன்னிடம், ஆர்வலர் - பரிசு பெறுவோர், முகத்தே - இடத்தில் (முகத்தே - ஏகாரம் அசைநிலை) முந்தைய பாடல்
|
|
13
|
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
|
சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி.
|
பாடாண்.
|
வாழ்த்தியல்
|
இவன் யார்? என்குவை ஆயின், இவனே,
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய,
எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்,
மறலி அன்ன களிற்றுமிசை யோனே;
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்,
5
பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்,
சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப,
மரீஇயோர் அறியாது, மைந்துபட் டன்றே;
நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம!
பழன மஞ்ஞை உகுத்த பீலி
10
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்,
கொழுமீன், விளைந்த கள்ளின்,
விழுநீர் வேலி நாடுகிழ வோனே.
|
புறநானூறு - 13. நோயின்றிச் செல்க!
|
இவன் யார் என்று கேட்பாயானால், சொல்கிறேன் கேள். அழகிய நெஞ்சில் புலிநிறம் பட்ட கவசம் அணிந்தவன். அந்த நிறம் பிறர் எய்த அம்புகளால் உருவானது. எமன் போன்ற களிற்றின்மேல் உள்ளான். அது கடலில் மிதக்கும் நாவாய்க் கப்பல் போல் வருகிறது. அதனைச் சூழ்ந்து சுறாமீன் கூட்டம் போல் வாள்வீரர்கள் மொய்த்துக்கொண்டு வருகின்றனர். அந்தக் களிற்றுக்கு மதம் பிடித்துவிட்டது என்பது அந்த வாள்வாரர்களுக்குத் தெரியவில்லை. அம்மம்ம! அவன் துன்பம் இல்லாமல் திரும்புவானாக! மயில் உகுத்த தோகையை உழவர் நெல் கட்டோடு சேர்த்துக் கட்டும் வயல்நாட்டை உடையவன் அவன். கொழுத்த மீனில் விளைந்த கள்ளைப் பருகும் மக்கள் பருகும் நாட்டை உடையவன் அவன். முந்தைய பாடல்
|
|
14
|
கபிலர்.
|
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.
|
பாடாண்.
|
இயன்மொழி
|
கடுங்கண்ண கொல் களிற்றால்
காப் புடைய எழு முருக்கிப்,
பொன் இயல் புனை தோட்டியான்
முன்பு துரந்து, சமந் தாங்கவும்;
பார்உடைத்த குண்டு அகழி
5
நீர் அழுவம் நிவப்புக் குறித்து,
நிமிர் பரிய மா தாங்கவும்;
ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்;
பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும்; குரிசில்!
10
வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை,
புலவு நாற்றத்த பைந்தடி
பூ நாற்றத்த புகை கொளீஇ, ஊன்துவை
கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது
பிறிதுதொழில் அறியா ஆகலின், நன்றும்
15
மெல்லிய பெரும! தாமே, நல்லவர்க்கு
ஆரணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு
இருநிலத்து அன்ன நோன்மை
செருமிகு சேஎய் ! நின் பாடுநர் கையே.
|
புறநானூறு - 14. மென்மையும்! வன்மையும்!
|
கோட்டைக்கதவுத் தடைமரத்தை முரிக்கக் கொல்களிற்றைப் பொன்பூண் போட்ட அங்குசத்தால் வலிமையுடன் குத்திப் போரிட்டுத் தாக்கவும், நிலத்தைப் பிளந்து உருவாக்கிய அகழி நீரை நிவந்து தாண்டும்படிப் போர்க்குதிரைகளை இழுத்துப் பிடிக்கவும், தேர்மீது இருந்துகொண்டு வில்லின் நாணை வலிமையாக இழுத்து எதிராளி வடுக் கொள அம்பு எய்யவும், பரிசிலர்களுக்கு அரிய அணிகலன்களை வழங்கவும். வலிமையாக உள்ளது. என் கை மென்மையாக உள்ளது. ஏனென்றால்… புலால் நாறும் கறித்துண்டைப் பூமணம் கமழும் தீயில் வாட்டி, உணவும், துவையலும், கறிச்சோறுமாக நீ வழங்கியதை உண்டு வருந்தும் தொழில் அல்லது வேறு தொழில் அறியாததால் மென்மையாக உள்ளது. முந்தைய பாடல்
|
|
15
|
கபிலர்.
|
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.
|
பாடாண்.
|
இயன்மொழி
|
கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,
வெள்வாய்க் கழுதைப் புல்லினப் பூட்டிப்,
பாழ்செய் தனை, அவர் நனந்தலை நல்லெயில்;
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்,
வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்
5
தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்துத்;
துளங்கு இயலாற், பணை எருத்தின்,
பா வடியாற்,செறல் நோக்கின்,
ஒளிறு மருப்பின் களிறு அவர
காப் புடைய கயம் படியினை;
10
அன்ன சீற்றத்து அனையை; ஆகலின்,
விளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகையொடு
நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்,
நசைதர வந்தோர் நசைபிறக்கு ஒழிய,
15
வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்? புரையில்
நற் பனுவல் நால் வேதத்து
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்கப், பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,
20
யூபம் நட்ட வியன்களம் பலகொல்?
யாபல கொல்லோ? பெரும! வார் உற்று
விசிபிணிக் கொண்ட மண்கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே.
25
|
புறநானூறு - 15. எதனிற் சிறந்தாய்?
|
நீ சினம் மிக்கவன். அதனால் பகைவர் நாட்டில் தேர் நடத்தினாய். அந்தத் தேர்க்கால் பள்ளத்தில் கழுதை - ஏர் பூட்டி உழுதாய். அவரது கோட்டைகளை அழித்தாய். பறவைகள் மேயும் விளைவயல்கள் உன் குதிரைக் குளம்புகளால் மிதிபடத் தேரோட்டினாய். நடை பயில்வதும், பருத்த முதுகுக் கொட்டேறியும், பரந்த காலடியும், அழிக்கும் பார்வையும், ஒளி வீசும் கொம்புகளையும் கொண்டதுமான உன் யானைகளை ஊர்மக்கள் குடிப்பதற்காகப் பாதுகாக்கப்பட்ட குளத்தில் குளித்துத் திளைக்கும்படி செய்தாய். இப்படிப்பட்ட சீற்றம் கொண்டவன் நீ. பொன் - கேடயமும் வேலும் ஏந்தி பகைவர் நடத்திய காலாள் படையை வெல்லும் ஆசையோடு போரிட்டும், ஏமாந்தும் மக்கள் வசை பாட வாழ்ந்தவர் பலரா? அல்லது, நால்வேதச் சிறப்புக் குழியில் நெய் ஊற்றி ஆவி பொங்க வேள்வி செய்து தூண் நட்டுச் சிறப்பெய்தியவர் பலரா? கனை - முழவினை முழக்கிக்கொண்டு உன்னைப் பாடும் பாடினியின் வஞ்சிப் பாடலை விரும்பும் வலிமை மிக்கவனே! முந்தைய பாடல்
|
|
16
|
பாண்டரங் கண்ணனார்.
|
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி.
|
வஞ்சி.
|
வினை மாட்சிய விரை புரவியொடு,
மழை யுருவின தோல் பரப்பி,
முனை முருங்கத் தலைச்சென்று, அவர்
விளை வயல் கவர்பு ஊட்டி
மனை மரம் விறகு ஆகக்
5
கடி துறைநீர்க் களிறு படீஇ
எல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்,
புலம்கெட இறுக்கும் வரம்பில் தானைத்,
துணை வேண்டாச் செரு வென்றிப்,
10
புலவு வாள் புலர் சாந்தின்
முருகன் சீற்றத்து, உருகெழு குருசில்!
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல்,
பனிப் பகன்றைக், சுனிப் பாகல்,
கரும்பு அல்லது காடு அறியாப்
15
பெருந் தண்பணை பாழ் ஆக,
ஏமநன் னாடு ஒள்எரி ஊட்டினை,
நாம நல்லமர் செய்ய,
ஒராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே.
|
புறநானூறு - 16. செவ்வானும் சுடுநெருப்பும்!
|
செயல்திறம் மிக்க குதிரைப்படை, மழைமேகம் போன்ற காலால் - படை ஆகியவை முரியும்படி போரிட்டான். அவர்களது விளைவயல்களில் தம் குதிரைகளை மேயவிட்டான். அவர்களது வீட்டு - மரங்களை எரிக்கும் விறகாக்கிக்கொண்டான். காவல் மிக்க அவர்களது நீர்த் துறைகளில் களிறுகளைக் குளிக்கும்படிச் செய்தான். பட்டப்பகலில் அவன் ஊரை எரிக்கும் தீ மாலையில் சூரியன் மறையும்போது தோன்றுவது போல வானத்தைச் செந்நிறம் கொள்ளச் செய்தது. நிலத்தில் துகள் பரக்கச்செய்யும் வரம்பில்லாத பெரும்படை கொண்டவன். யாரையும் துணைக்குச் சேர்த்துக் கொள்ளாமல் தானே வெற்றி கண்டவன். கையிலே புலால் நாறும் வாள். மார்பிலே சந்தனம். கடவுள் முருகன் போல் சீற்றமும் உருவமும் கொண்டவன். வள்ளை, ஆம்பல், பகன்றை, பாகல், கரும்பு ஆகியவற்றைக் கொண்ட வயல்நாடு பாழாகும்படி எரி ஊட்டினான். இதற்கு உதவியது இவனது யானை. முந்தைய பாடல்
|
||
17
|
சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
|
அரசவாகை; இயன்மொழியும் ஆம்.
|
தென் குமரி, வட பெருங்கல்,
குண குட கடலா வெல்லை,
குன்று, மலை, காடு, நாடு
ஒன்று பட்டு வழி மொழியக்,
கொடிது கடிந்து, கோல் திருத்திப்,
5
படுவது உண்டு, பகல் ஆற்றி,
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல!
குலை இறைஞ்சிய கோள் தாழை
அகல் வயல், மலை வேலி,
10
நிலவு மணல் வியன் கானல்,
தெண் கழிமிசைச் சுடர்ப் பூவின்,
தண் தொண்டியோர் அடு பொருந!
மாப் பயம்பின் பொறை போற்றாது,
நீடு குழி அகப் பட்ட
15
பீடு உடைய எறுழ் முன்பின்
கோடு முற்றிய கொல் களிறு,
நிலை கலங்கக் குழி கொன்று,
கிளை புகலத் தலைக்கூடி யாங்கு
நீ பட்ட அரு முன்பின்,
20
பெருந் தளர்ச்சி, பலர் உவப்பப்,
பிறிது சென்று, மலர் தாயத்துப்
பலர் நாப்பண் மீக் கூறலின்,
உண் டாகிய உயர் மண்ணும்,
சென்று பட்ட விழுக் கலனும்,
25
பெறல் கூடும், இவன்நெஞ்சு உறப்பெறின்எனவும்,
ஏந்து கொடி இறைப் புரிசை,
வீங்கு சிறை, வியல் அருப்பம்,
இழந்து வைகுதும்.இனிநாம்; இவன்
உடன்று நோக்கினன், பெரிது எனவும்,
30
வேற்று அரசு பணி தொடங்குநின்
ஆற்ற லொடு புகழ் ஏத்திக்,
காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய
மழையென மருளும் பல் தோல், மலையெனத்
தேன்இறை கொள்ளும் இரும்பல் யானை,
35
உடலுநர் உட்க வீங்கிக், கடலென
வான்நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது
கடுஒடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப,
இடியென முழங்கு முரசின்,
வரையா ஈகைக் குடவர் கோவே!
40
|
புறநானூறு - 17. யானையும் வேந்தனும்!
|
பொருளுரை: not found in the page
|
|||
18
|
பாண்டியன் நெடுஞ்செழியன். திணை: பொதுவியல்.
|
பொதுவியல்.
|
முதுமொழிக் காஞ்சி : பொருண்மொழிக் காஞ்சி எனவும் பாடம்.
|
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து, தம்புகழ் நிறீஇ:
ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்!
ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய
5
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே!
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்
பூக் கதூஉம் இன வாளை,
நுண் ஆரல், பரு வரால்,
குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி;
10
வான் உட்கும் வடிநீண் மதில்;
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,
ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
15
நல்இசை நிறுத்தல் வேண்டினும், மற்றதன்
தகுதி கேள், இனி, மிகுதியாள!
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
20
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்புற்று ஆயினும், நண்ணி ஆளும்
25
இறைவன் தாட்குஉத வாதே; அதனால்,
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண்தட் டோரே;
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே.
30
|
புறநானூறு - 18. நீரும் நிலனும்!
|
பொருளுரை: not found in the page
|
||
19
|
குடபுலவியனார்.
|
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
|
வாகை.
|
அரசவாகை.
|
இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து,
மன்உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும்.
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய!
இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய
5
பெருங்கல் அடாரும் போன்ம் என விரும்பி,
முயங்கினேன் அல்லனோ யானே! மயங்கிக்
குன்றத்து இறுத்த குரீஇஇனம் போல,
அம்புசென்று இறுத்த அறும்புண் யானைத்
தூம்புஉடைத் தடக்கை வாயொடு துமிந்து.
10
நாஞ்சில் ஒப்ப, நிலமிசைப் புரள,
எறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர்
எந்தையோடு கிடந்தோர் எம்புன் தலைப்புதல்வர்;
இன்ன விறலும் உளகொல், நமக்கு?என,
மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணிக்
15
கூற்றுக்கண் ஓடிய வெருவரு பறந்தலை,
எழுவர் நல்வலங் கடந்தோய்! நின்
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே?
|
புறநானூறு - 19. எழுவரை வென்ற ஒருவன்!
|
பொருளுரை: not found in the page
|
|
20
|
குறுங்கோழியூர்கிழார்.
|
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை;
|
வாகை.
|
அரச வாகை.
|
இரு முந்நீர்க் குட்டமும்,
வியன் ஞாலத்து அகலமும்,
வளி வழங்கு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்றாங்கு
அவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை;
5
அறிவும், ஈரமும், பெருங்க ணோட்டமும்;
சோறு படுக்கும் தீயோடு
செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது
பிறிது தெறல் அறியார் நின் நிழல்வாழ் வோரே;
திருவில் அல்லது கொலைவில் அறியார்;
10
நாஞ்சில் அல்லது படையும் அறியார்;
திறனறி வயவரொடு தெவ்வர் தேய, அப்
பிறர்மண் உண்ணும் செம்மல்; நின் நாட்டு
வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது,
பகைவர் உண்ணா அருமண் ணினையே;
15
அம்பு துஞ்சும்கடி அரணால்,
அறம் துஞ்சும் செங்கோலையே;
புதுப்புள் வரினும், பழம்புள் போகினும்,
விதுப்புற அறியா ஏமக் காப்பினை;
அனையை ஆகல் மாறே,
20
மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே.
|
புறநானூறு - 20. மண்ணும் உண்பர்!
|
கடலின் ஆழத்தையும், உலகின் பரப்பையும், காற்று வாழும் திசையையும், ஏதுமில்லாத ஆகாயத்தையும் என்று எல்லாவற்றையும் அளந்து அறிந்தாலும் உன்னை அளக்க முடியாது. உன் ஆட்சிக்குடை நிழலில் வாழ்பவர்கள் உன் அறிவு, இரக்கம், உதவும் எண்ணம் (கண்ணோட்டம்) ஆகியவற்றை அறிவர். அவர்களுக்குச் சோறாக்கும் தீ, வெயில் ஆகியவற்றின் சூடு அல்லது வேறு சூடு தெரியாது. (பகைவர் ஊரைக் கொளுத்துதல் இல்லை) வானவில் அல்லது (பகைவரின்) கொலைவில் தெரியாது. நிலத்தை உழும் கலப்பைப்படை அல்லது (பகைவர் தாக்கும்) கருவிப்படை தெரியாது. உன்னை எதிர்க்கும் படைத்திறம் அறிந்த வல்லாளரும், பகைவரும் தேயப் படைவர் மண்ணை நீ உண்டாய். ஆனால் உன் மண்ணைக் கருவுற்ற பெண்கள் உண்பதைத் தவிர வேறு யாரும் உண்டு அறியார். உன் கோட்டையில் அம்புகள் வேலை இல்லாமல் தூங்குகின்றன. நாட்டில் செங்கோல் அறம் தூங்குகிறது. உன் நாட்டுக்குள் புதிய பறவைகள் வந்தாலும், பழைய பறவைகள் போனாலும் மக்கள் விறுவிறுப்பு காட்டாமல் பாதுகாப்பாக வாழ்கின்றனர். முந்தைய பாடல்
|
|
21
|
ஐயூர் மூலங்கிழார்.
|
கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி.
|
வாகை.
|
அரசவாகை.
|
புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்!
நிலவரை இறந்த குண்டுகண் அகழி,
வான்தோய் வன்ன புரிசை, விசும்பின்
மீன்பூத் தன்ன உருவ ஞாயில்,
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை,
5
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்,
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன,
வேங்கை மார்பின் இரங்க வைகலும்
ஆடுகொளக் குழைந்த தும்பைப், புலவர்
10
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே!
இகழுநர் இசையொடு மாயப்,
புகழொடு விளங்கிப் பூக்க, நின் வேலே!
|
புறநானூறு - 21. புகழ்சால் தோன்றல்!
|
மண்ணின் ஆழம் வரையில் தோண்டிய அகழி, வான் அளாவும் மதில், மீன் பூத்தது போல் தோன்றும் ஞாயில் (மதில் - ஆள் - இருக்கைகள்), சூரிய ஒளி புகாவண்ணம் இருண்டிருக்கும் காவல் - காடுகள், கடத்தற்கு அரிய காவலர்களைக் கொண்ட கூடாரங்கள் (குறும்பு) - ஆகியவற்றைக் பொண்ட கானப்பேர் நகரக் கோட்டையை - காய்ச்சிய இரும்பு உண்டது போல மீட்டுக்கொள்ள முடியாதது என்று போற்றப்பட்ட கோட்டையை, அதன் அரசன் வேங்கை மார்பன் நாள்தோறும் வருந்தும்படி குழையச்செய்த வெற்றி வேந்தே! உன்னை இகழ்பவர் உன் புகழைப் பாடிச் சாகும்படி உன் வேல் பூக்கட்டும். முந்தைய பாடல்
|
|
22
|
குறுங்கோழியூர் கிழார்.
|
சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை.
|
வாகை.
|
அரசவாகை.
|
தூங்கு கையான் ஓங்கு நடைய,
உறழ் மணியான் உயர் மருப்பின,
பிறை நுதலான் செறல் நோக்கின,
பா வடியால் பணை எருத்தின,
தேன் சிதைந்த வரை போல,
5
மிஞிறு ஆர்க்கும் கமழ்கடா அத்து,
அயறு சோரூம் இருஞ் சென்னிய,
மைந்து மலிந்த மழ களிறு
கந்து சேர்பு நிலைஇ வழங்கப்:
பாஅல் நின்று கதிர் சோரும்
10
வான உறையும் மதி போலும்
மாலை வெண் குடை நீழலான்,
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க,
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
ஆய் கரும்பின் கொடிக் கூரை,
15
சாறு கொண்ட களம் போல,
வேறு வேறு பொலிவு தோன்றக்
குற் றானா உலக் கையால்;
கலிச் சும்மை வியல் ஆங்கண்
பொலம் தோட்டுப் பைந் தும்பை
20
மிசை அலங்கு உளைய பனைப்போழ் செரிஇச்,
சின மாந்தர் வெறிக் குரவை
ஓத நீரில் பெயர்பு பொங்க;
வாய் காவாது பரந்து பட்ட
வியன் பாசறைக் காப் பாள!
25
வேந்து தந்த பணி திறையாற்
சேர்ந் தவர் கடும்பு ஆர்த்தும்,
ஓங்கு கொல்லியோர், அடு பொருந!
வேழ நோக்கின் விறல்வெம் சேஎய்!
வாழிய, பெரும! நின் வரம்பில் படைப்பே!
30
நிற் பாடிய அலங்கு செந்நாப்
பிற்பிறர் இசை நுவ லாமை,
ஒம்பாது ஈயும் ஆற்றல் எங்கோ!
மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
புத்தேள் உலகத்து அற்று எனக் கேட்டு, வந்து
35
இனிது காண்டிசின்: பெரும! முனிவிலை,
வேறுபுலத்து இறுக்கும் தானையோடு
சோறுயட நடத்தி; நீ துஞ்சாய் மாறே!
|
புறநானூறு - 22. ஈகையும் நாவும்!
|
களிறு தொங்கும் கை, பெருமித நடை, ஒலிக்கும் மணி, மேலே வளைந்து உயர்ந்திருக்கும் கொம்பு, பிறை போன்ற நெற்றி, சினம் கொண்ட பார்வை, விரிந்த காலடி, பருத்த கழுத்து, தேன் சிந்தும் மலை போல வண்டு மொய்க்க ஒழுகும் மதநீர், இரும்பைப் போன்ற தலை, வலிமை - ஆகியவற்றைக் கொண்ட உன் வாலிபக் களிறு அதன் நிலைகளத்தில் கட்டிக் கிடக்கிறது. பால் ஒழுகும் நிலா போன்று மாலை தொங்கும் உன் வெண்கொற்றக் குடை காப்பு இல்லாமல் அதன் நிழலில் காப்போர் உறங்குகின்றனர். நெல்லோடு வேயப்பட்ட நெல்லந்தாள் கூரை வீடும், கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருகின்றன. உலக்கையால் குற்றும் பாடல் ஒலி கேட்கிறது. போர் இல்லாததால் சினம் கொண்ட மக்கள் தும்பைப் பூவையும் பனம்பூவையும் சூடிக்கொண்டு குரவை ஆடி மகிழும் ஒலி கடலொலி போல முழங்கிக்கொண்டே இருக்கிறது. நீயோ வாயில் காப்பு இல்லாத பாசறையில் இருக்கிறாய். அங்கு வேந்தர்கள் உனக்குத் தந்த திறைப் பொருள்களை உன் அரசுச் சுற்றத்தாருக்கு வழங்கி மகிழ்கிறாய். கொல்லிமலை நாட்டை வென்ற பின்னர் உனக்கு இந்த நிலை. வேழநோக்குபோர் இல்லாத இந்த அமைதிப் பார்வைதான் வேழநோக்கு. இது விறல் நோக்கு. (வெற்றிப் பெருமித நோக்கு) அதனால் நீ வேழ நோக்கின் விறல் வெஞ்சேய். (யானை நோக்குடைய வெற்றியும் விரும்பத்தக்க சாயலும் கொண்ட முருகன்) வாழிய, பெரும! உன் படைப்புகளும் வாழ்க. உன்னைப் பாடிய என் நாக்கு வேறு யாரையும் பாடாவண்ணம் எனக்குக் கொடை வழங்குபவன் நீ. நீ மாந்தரஞ்சேரல் இரும்பொறை. நீ பாதுகாக்கும் நாடு வானுலகம் போல மகிழ்ச்சியில் திளைக்கிறது எனச் சொல்லக் கேட்டு வந்து காண்கிறேன். சினம் இல்லாமல் மற்றவர் நிலத்தில் படை நடத்தி நீடு வாழ்வாயாக! முந்தைய பாடல்
|
|
23
|
கல்லாடனார்.
|
பாண்டியன் தலையாலங் கானத்து நெடுஞ்செழியன்.
|
வாகை.
|
அரச வாகை; நல்லிசை வஞ்சியும் ஆம்.
|
வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்,
களிறுபடிந்து உண்டெனக், கலங்கிய துறையும்!
கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்,
சூர்நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின்
கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர்
5
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில்
கொள்பதம் ஒழிய வீசிய புலனும்;
வடிநவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும்
கடிமரம் துளங்கிய காவும்; நெடுநகர்
வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்பக்,
10
கனைஎரி உரறிய மருங்கும்; நோக்கி,
நண்ணார் நாண, நாள்தொறும் தலைச்சென்று,
இன்னும் இன்னபல செய்குவன், யாவரும்
துன்னல் போகிய துணிவினோன், என,
ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை
15
ஆலங் கானத்து அமர்கடந்து அட்ட
கால முன்ப! நின் கண்டனென் வருவல்;
அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச்,
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை
20
வேளை வெண்பூக் கறிக்கும்
ஆளில் அத்தம் ஆகிய காடே.
|
புறநானூறு - 23. நண்ணார் நாணுவர்!
|
நெடுஞ்செழியன் தலையாலங்கானப் போரில் வென்று அழித்த பகைவர் நாட்டின் அழிவைப் பற்றிக் கல்லாடனார் கூறும் பாடல் இது. கொட்டகையில் (வெளிறு இல்லில்) கட்டப்பட்டிருப்பதை வெறுத்த யானை கலக்கிய நீர்த்துறை. நெடுஞ்செழியனின் படை கடம்பு சூடிப் போரிட்ட முருகனின் கூளியர் படை போல பகைநாட்டில் வேண்டிய அளவு உண்டது போக வீசி எறிந்திருக்கும் நிலம். படை கோடாரியால் வெட்டிச் சாய்த்த காட்டரண், படை எரி ஊட்டிய நகர்ப் பகுதி, இவற்றையெல்லாம் அந்த நாட்டு அரசர்கள் பார்த்து நாணி, நம்மால் நெருங்க முடியாத அந்தத் துணிவாளன் உலகம் நெளியக்கூடிய பெருபடையை நடத்தி இன்னும் வந்து இன்னது செய்வான் என நடுங்கும் நாட்டைக் கண்டு வந்தேன். ஆண்மான் புலிவாயில் பட்டதை எண்ணிப் பெண்மான் பூளாப் பூ நிறைந்த காட்டில் வேளைச் செடியின் வெள்ளைப் பூக்களைக் கறிக்கும் நாடாக இப்போது அவர்களின் நாடு உள்ளது. முந்தைய பாடல்
|
|
24
|
மாங்குடி கிழவர்:மாங்குடி
|
பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற
|
பொதுவியல்.
|
பொருண்மொழிக் காஞ்சி.
|
நெல் அரியும் இருந் தொழுவர்
செஞ் ஞாயிற்று வெயில் முனையின்,
தென் கடல்திரை மிசைப்பா யுந்து;
திண் திமில் வன் பரதவர்
வெப் புடைய மட் டுண்டு,
5
தண் குரவைச் சீர்தூங் குந்து;
தூவற் கலித்த தேம்பாய் புன்னை
மெல்லிணர்க் கன்ணி மிலைந்த மைந்தர்
எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து;
வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
10
முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்,
பூங் கரும்பின் தீஞ் சாறும்
ஓங்கு மணற் குலவுத் தாழைத்
தீ நீரோடு உடன் விராஅய்,
15
முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும்;
தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய
ஒம்பா ஈகை மாவேள் எவ்வி
புனலம் புதவின் மிழலையொடு_ கழனிக்
கயலார் நாரை போர்வில் சேக்கும்,
20
பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்,
குப்பை நெல்லின், முத்தூறு தந்த
கொற்ற நீள்குடைக், கொடித்தேர்ச் செழிய!
நின்று நிலைஇயர் நின் நாண்மீன்; நில்லாது
படாஅச் செலீஇயர், நின்பகைவர் மீனே;
25
நின்னொடு, தொன்றுமூத்த உயிரினும், உயிரொடு
நின்று மூத்த யாக்கை யன்ன, நின்
ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த
வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த,
இரவன் மாக்கள் ஈகை நுவல,
30
ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப, மகிழ்சிறந்து,
ஆங்குஇனிது ஒழுகுமதி, பெரும! ஆங்கது
வல்லுநர் வாழ்ந்தோர், என்ப, தொல்லிசை,
மலர்தலை உலகத்துத் தோன்றிப்
35
பலர்செலச் செல்லாது, நின்று விளிந் தோரே.
|
புறநானூறு - 24. வல்லுனர் வாழ்ந்தோர்!
|
நல்லூர் மிழலைக் கழனி (நன்செய் வயல்) வேளாளர் தொன்றுமுதிர் வேளிர். இவர்களின் நெல் அறுக்கும் தொழுவர் (தொழிலாளர்) வெயில் கடுமையாக இருந்தால் கடலலையில் பாய்ந்து தணித்துக்கொள்வர். திமிலில் சென்று கடலில் மீன் பிடித்துத் திரும்பிய பரதவர் சூடான மட்டுக் கள் உண்டு குரவை ஆடிக்கொண்டு பாடுவர். அவ்வூர் மைந்தர் (வாலிபர்) தூவலில் பூக்கும் புன்னை மலரைத் தலையில் அணிந்துகொண்டு வளையல் கை மகளிரொடு ‘தழூஉ’ (துணங்கை) ஆடுவர். அவ்வூர் வளையல்கை மகளிர் (பருவப் பெண்கள்) கானலில் பூக்கும் முண்டக மலர் மாலை அணிந்துகொண்டு மூன்று வகையான தீஞ்சுவை நீரைக் கலந்து உண்டு மகிழ்ந்து கடல்நீரில் பாய்ந்து விளையாடுவர். பனங்குரும்பை தரும் நீர், கருப்பஞ்சாறு, தாழையில் இறக்கிய நீர் ஆகியவற்றின் கலவையே அவர்கள் உண்ட முந்நீர். நல்ல விளைச்சல் தரும் நல்லூர்க் கழனியில் நாரை கயல்மீன்களை மேய்ந்தபின் வைக்கோல் போரில் உறங்கும். மிழலை நாடு புனல் பாயும் புதவங்களை (மடைகளை)க் கொண்டது. இதன் அரசன் தங்குதடை இன்றிப் பெருவேள்விக் கொடை வழங்கும் எவ்வி. இங்கு வாழும் ‘தொன்முதிர் வேளிர்’ பொன்னாலான அணிகலன்களைப் பூண்ட யானைகளில் செல்லும் பெருமிதம் கொண்டவர்கள். முத்தூறு நிலப்பகுதி இவர்கள் வாழ்விடம். நெடுஞ்செழியன் இந்த முத்தூரைத் தனதாக்கிக்கொண்டான். இந்த அரசன் கொடித்தேர்ச் செழியன் எனப் போற்றப்படுபவன். இவன் பிறந்த நாள்மீன் (நட்சத்திரம்) மீண்டும் மீண்டும் வந்து வளரவேண்டும். இவனது பகைவர்களின் நாள்மீன் மறுமுறை இவர்குக்கு வராமல் இருக்க வேண்டும். உன் உடலும் உயிரும் பொருந்தி இருப்பது போல உன் உயிரோடு உயிராகவும், உடலோடு உடலாகவும் இருந்து வாளேந்தி உன்னைக் காக்கும் மூத்த குடிமக்கள் உன்னை வாழ்த்திக் கொண்டிருக்கையில், இரவலர்களுக்கு நீ வழங்கிக்கொண்டே இருக்கையில், உன் மகளிர் உனக்கு ஊட்டும் தேறலை உண்டுகொண்டு நீ மகிழ்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு வாழும் வாழ்க்கையை புகழ் பெற்ற சிலரே பெறுவர். பிறர் ஏதோ செத்தவர் போகச் சாவாமல் இருப்பவர்களாக மதிக்கப்படுவர். முந்தைய பாடல்
|
|
25
|
கல்லாடனார்.
|
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
|
வாகை.
|
அரசவாகை.
|
மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது,
உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு,
நிலவுத்திகழ் மதியமொடு, நிலஞ்சேர்ந் தாஅங்கு,
உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை
5
அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப்,
பிணியுறு முரசம் கொண்ட காலை,
நிலைதிரிபு எறியத், திண்மடை கலங்கிச்
சிதைதல் உய்ந்தன்றோ, நின்வேல்; செழிய!
முலைபொலி அகம் உருப்ப நூறி,
10
மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,
அவிர் அறல் கடுக்கும் அம் மென்
குவை யிரும் கூந்தல் கொய்தல் கண்டே.
|
புறநானூறு - 25. கூந்தலும் வேலும்!
|
கல்லாடனார் நெருஞ்செழியனுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். (தலையாலங்கானப்) போர்க்களத்தில் திங்களும் ஞாயிறும் மறைவது போல (சோழன், சேரன் ஆகிய) இருபெரு முரசுகளைக் கைப்பற்றும்போது அவர்களது மனைவிமார் கைமைக் கோலத்தில் மார்பில் அடித்துக்கொள்ளா வண்ணமும், கூந்தல் களையா வண்ணமும் பார்த்துக்கொள்க. (அவர்களைக் கொல்ல வேண்டாம் என்பது கருத்து) முந்தைய பாடல்
|
|
26
|
மாங்குடி கிழவர்; மாங்குடி
|
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
|
வாகை.
|
அரச வாகை.
|
நளி கடல் இருங் குட்டத்து
வளி புடைத்த கலம் போலக்,
களிறு சென்று களன் அகற்றவும்,
களன் அகற்றிய வியல் ஆங்கண்
ஒளிறு இலைய எகு ஏந்தி,
5
அரைசு பட அமர் உழக்கி,
உரை செல முரசு வெளவி,
முடித் தலை அடுப் பாகப்,
புனல் குருதி உலைக் கொளீஇத்,
தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின்,
10
அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய!
ஆன்ற கேள்வி, அடங்கிய கொள்கை,
நான்மறை முதல்வர் சுற்ற மாக,
மன்னர் ஏவல் செய்ய, மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே!
15
நோற்றோர் மன்ற நின் பகைவர், நின்னொடு
மாற்றார் என்னும் பெயர் பெற்று,
ஆற்றார் ஆயினும், ஆண்டுவாழ் வோரே.
|
புறநானூறு - 26. நோற்றார் நின் பகைவர்!
|
புள்ளிருக்கு வேளூர் சிவனே! உன் கண்ணிலே தீ, கையிலே தீ, சிரிப்பிலே நீ, உடம்பெல்லாம் தீ. இப்படி இருக்கும் உன்னை இந்தப் பெண் உமையம்மை உன்னோடு எப்படி அம்மையப்பர் நிலையில் சேர்ந்திருக்கிறார். முந்தைய பாடல்
|
|
27
|
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
|
சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
|
பொதுவியல்.
|
முதுமொழிக் காஞ்சி.
|
சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ்,
நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன,
வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து,
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை,
உரையும் பாட்டும் உடையோர் சிலரே;
5
மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே:
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்ப, தம் செய்வினை முடித்து எனக்
கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி!
10
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்,
அறியா தோரையும், அறியக் காட்டித்,
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து,
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
15
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி,
அருள வல்லை ஆகுமதி; அருளிலர்
கொடா அமை வல்லர் ஆகுக;
கெடாஅத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே.
|
புறநானூறு - 27. புலவர் பாடும் புகழ்!
|
தாமரை சேற்றில் பிறக்கிறது. அது நூற்றுக்கணக்கான இதழ்களுடன் பொலிவாகத் தோன்றுகிறது. யார் பிறப்பிலும் வேற்றுமை இல்லை. சிலர் தாமரைப் பூப் போல விளங்குகின்றனர். பாராட்டும் புகழும் பெறுகின்றனர். சிலர் அதன் இலை போலக் கிடக்கின்றனர். செய்யும் செயலால் புலவர் பாடும் புகழுடையோர் வானத்தில் யாரும் ஓட்டாத வான ஊர்தியில் செல்வர் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். சேட்சென்னி நலங்கிள்ளி! தேய்தலும் வளர்தலும், இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்னும் உண்மை தெரியாதவர்களுக்குத் தெரியும்படி நிலாத்தெய்வம் தேய்ந்து வளர்ந்தும், மறைந்து தோன்றியும் காட்டிக்கொண்டிருக்கிறது. எனவே, வல்லவர் ஆயினும், வல்லவர் அல்லர் ஆயினும் வருந்தி வந்தோரின் நிலைமையைப் பார்த்து அருள் தருபவனாக விளங்குக! உன் பகைவர் கொடாத்தன்மை உடையவராகிக் கிடக்கட்டும். முந்தைய பாடல்
|
|
28
|
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
|
சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
|
பொதுவியல்.
|
முதுமொழிக் காஞ்சி.
|
எண்பேர் எச்சங்கள் பற்றிய விளக்கம். அறம் பொருள் இன்பம்
|
எனும் உறுதிப் பொருள்கள் பற்றிய குறிப்பு.
சிறப்பில் சிதடும், உறுப்பில் பிண்டமும்,
கூனும், குறளும், ஊமும், செவிடும்
மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு
எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்
5
பேதைமை அல்லது ஊதியம் இல், என
முன்னும் அறிந்தோர் கூறினர்; இன்னும்,
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது:-
வட்ட வரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
10
கானத் தோர், நின் தெவ்வர்; நீயே
புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து, அகத்தோர்
புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
பூம்போது சிதைய வீழ்ந்தெனக், கூத்தர்
ஆடுகளம் கடுக்கும் அகநாட் டையே;
15
அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும், பெரும! நின்செல்வம்;
ஆற்றாமை நின் போற்றா மையே.
|
புறநானூறு - 28. போற்றாமையும் ஆற்றாமையும்!
|
மனவளம் குன்றிய சிதடு, உறுப்புக் குறையுள்ள உடல், கூன் (முதுகு வளைவு), குள்ளம், ஊமை, செவிடு, விலங்குத் தன்மை, பித்து ஆகிய எட்டும் அச்சம் தரும் பிறவிகள். இவற்றுடன் வாழ்வது நலமில்லா வாழ்க்கை என்று அறிந்துணர்ந்த முன்னோர் கூறியுள்ளனர். அதனைப் பற்றி இன்னும் சொல்கிறேன் கேள். தினைப்புனம் காப்போர் (யானை வருவதை) அறியும் வகையில் பறவைச் சேவல் கூவிக் காட்டும் கானம் உடையவர் நின் பகைவர். கோட்டையை முற்றுகையிட்டிருப்பவர்களுக்கு அறம் உணர்த்தும் வகையில் கோட்டைக்குள் இருப்போர் கரும்பு அம்பு எய்து காட்டுவர். எனினும் அது அகழியில் உள்ள தாமரைப் பூவைச் சிதைக்கும். கூத்தரின் ஆடுகளம் போன்றது நீ பெற்றிருக்கும் நாடு. இந்தச் செல்வமானது அறம், பொருள், இன்பம் மூன்றும் விளைவிக்க வல்லது. உன் நாடாகிய செல்வம் உனக்கு அவற்றைத் தரவில்லையாயின் நீ உன் நாட்டைப் போற்றவில்லை என்பதே பொருள். முந்தைய பாடல்
|
29
|
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
|
சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
|
பொதுவியல்.
|
முதுமொழிக் காஞ்சி. சிறப்பு : சிறந்த அறநெறிகள்.
|
சிறந்த அறநெறிகள்.
|
அழல் புரிந்த அடர் தாமரை
ஐது அடர்ந்ற நூற் பெய்து,
புனை விளைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல்
பாறு மயிர் இருந்தலை பொலியச் சூடிப்,
பாண் முற்றுக, நின் நாள்மகிழ் இருக்கை!
5
பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர்
தோள் முற்றுக, நின் சாந்துபுலர் அகலம்! ஆங்க
முனிவில் முற்றத்து, இனிது முரசு இயம்பக்,
கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்குஅளித்தலும்,
ஒடியா முறையின் மடிவிலை யாகி
10
நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை என்போர்க்கு இனன் ஆகி லியர்!
நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்
ஒழி மடல் விறகின் கழுமீன் சுட்டு,
வெங்கள் தொலைச்சியும் அமையார், தெங்கின்
15
இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு
பெற்றனர் உவக்கும் நின் படைகொள் மாக்கள்
பற்றா மாக்களின் பரிவு முந்து உறுத்துக்,
கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்,
சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு
20
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
ஊழிற்று ஆக, நின் செய்கை! விழவின்
கோடியர் நீர்மை போல முறை முறை
ஆடுநர் கழியும்இவ் உலகத்துக், கூடிய
நகைப் புறனாக, நின் சுற்றம்!
25
இசைப்புற னாக, நீ ஓம்பிய பொருளே!
|
புறநானூறு - 29. நண்பின் பண்பினன் ஆகுக!
|
உன் நாளவை நீ அளித்த பொன்னாலான தாமரையை விரிந்த மயிர் கொண்ட தலையில் சூடிக்கொண்டுள்ள பாணர் முற்றுகையில் திளைக்கட்டும். அதன் பின் உன் சந்தனம் பூசிய மார்பு மகளிரின் தோள் முற்றுகையில் திளைக்கட்டும். இப்படி உன் சுற்றம் முரசு முழக்கத்துடன் விளங்கட்டும். எப்போதும் கொடியவர்களை அழிப்பதும் நல்லவர்களுக்கு உதவுவதுமாக இருப்பாயாக. நல்லது செய்தால் நன்மையும் தீயது செய்தால் தீமையும் விளையாது என்பவர் பக்கம் நீ சேராதே. உன் படையினர் நெல்வயலில் பறவைகளை ஓட்டிக்கொண்டும், தானே விழுந்த பனைமட்டையை எரித்து மீனைச் சுட்டுத் தின்றுகொண்டும், கள் பருகிக்கொண்டும், கள்ளை விரும்பாதபோது இளநீரைக் குடித்துக்கொண்டும் மகிழ்ந்திருக்கட்டும். பெற்றது போதும் என்று கூவைக்கொடி படர்ந்த சிறிய நாலு கால் பந்தல் மனையில் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வு செழிக்க நீ உதவ வேண்டும். வந்தவர்களுக்கெல்லாம் உதவும் பண்புடையதாக உன் வாழ்நாள் செய்கை அமையட்டும். விழாவில் இசை முழக்குவோர் வந்து போவது போல வாழ்க்கை நிலை இல்லாதது. நகைத்து மகிழும் பக்கம் உன் சுற்றம் சேரட்டும். (பகைத்து மகிழும் பக்கம் சேரவேண்டாம்.) உன் செல்வம் புகழின் பக்கம் இருக்கட்டும். முந்தைய பாடல்
|
30
|
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
|
சோழன் நலங்கிள்ளி.
|
பாடாண்.
|
இயன்மொழி.
|
தலைவனின் இயல்பு கூறுதல்.
|
செஞ்ஞா யிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,
பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்,
வளி திரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்றிவை
5
சென்றளந்து அறிந்தார் போல, என்றும்
இனைத்து என்போரும் உளரே அனைத்தும்
அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக்,
களிறுகவுள் அடுத்த எறிகல் போல
ஒளித்த துப்பினை ஆதலின், வெளிப்பட
10
யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு
மீப்பாய் களையாது, மிசைப் பரந் தோண்டாது,
புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே!
15
|
புறநானூறு - 30. எங்ஙனம் பாடுவர்?
|
ஞாயிறு செல்லும் பாதையையும், அந்த ஞாயிறு தாங்கிக் கொண்டிருக்கும் சுமைகளையும், அந்தச் சுமைக்குள் சூழ்ந்திருக்கும் உருண்டை மண்டலங்களையும், காற்று திரியும் திசையையும், ஒன்றுமில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் ஆகாயத்தையும் தாமே நேரில் சென்று அளந்து அறிந்தவர் போல இனைத்து என்று அளவு கூறுவாரும் உளர். அவர்களாலும் அளவிட்டுக் கூறமுடியாத அடக்கம் கொண்டவன் நீ. எறிகல் = விளாம்பழம் யானை வாயில் பட்ட விளாம்பழம் போலச் செரிக்கும் வலிமையை மறைத்துக்கொண்டிருப்பவன் நீ. இப்படிப்பட்ட உன்னைப் புலவர் எப்படிப் பாடமுடியும்? கூம்பின் பாய்மரத்தைத் தொய்ய விடாமல் புகார் நகரத்தில் புகுந்த பெருங்கலத்தை (பெருங்கப்பலை)த் தடுத்து நிறுத்தி அதிலுள்ள பண்டங்களை உள்நாட்டுப் பகுதிகளுக்குக் கொண்டுவந்து கொடுக்கும் கடல்பஃறாரம் (கடல்படு செல்வம்) நிறைந்த நாட்டுக்கு உரியவன் நீ. முந்தைய பாடல்
|
31
|
கோவூர்கிழார்.
|
சோழன் நலங்கிள்ளி.
|
வாகை.
|
அரசவாகை: மழபுல வஞ்சியும் ஆம்.
|
வடபுலத்து அரசர்கள் இச்சோழனது மறமாண்பைக் கேட்டு அஞ்சிய
|
துஞ்சாக் கண்ணர் ஆயினமை.
சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,
இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை
உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,
5
நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப்
பாசறை யல்லது நீயொல் லாயே;
நிதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்
கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே;
போர் எனில் புகலும் புனைகழல் மறவர்,
10
காடிடைக் கிடந்த நாடுநனி சேஎய;
செல்வேம் அல்லேம் என்னார்; கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்,
குண கடல் பின்ன தாகக், குட கடல்
வெண் தலைப் புணரி நின் மான்குளம்பு அலைப்ப,
15
வலமுறை வருதலும் உண்டு என்று அலமந்து
நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்,
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே.
|
புறநானூறு - 31. வடநாட்டார் தூங்கார்!
|
அறத்தைப் பின்தொடர்ந்து பொருளும் இன்பமும் வருவது போல, உன் குடையைப் பின்தொடர்ந்து சேரர், பாண்டியர் குடைகள் வருகின்றன. இதனால் தமிழகமே ஒன்றுபட்டுள்ளது. நீ புகழ் வேட்டைக்குப் புறப்பட்டுவிட்டாய். பாசறையில் உள்ளாய். கூர் மழுங்கிய கொம்புகளுடன் போருக்குத் துடிக்கும் உன் களிறு அடங்க மறுக்கிறது. போரை விரும்பும் உன் வீரக்கழல் மறவர் தொலைதூரம் செல்ல விரும்புகின்றனர். கீழைக்கடல் அரசனாகிய நீ தென்கடல் பாண்டியனையும் மேலைக்கடல் சேரனையும் அழைத்துக்கொண்டு வலம் வருவாயோ என்று வடபுலத்து அரசர்கள் நெஞ்சம் நடுங்கித் தூங்காமல் கிடக்கின்றனர். முந்தைய பாடல்
|
32
|
கோவூர்கிழார்.
|
சோழன் நலங்கிள்ளி.
|
பாடாண்.
|
இயன்மொழி.
|
சோழனது நினைத்தது முடிக்கும் உறுதிப்பாடு.
|
கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ?
வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்,
ஒண்ணுதல், விறலியர் பூவிலை பெறுக! என,
மாட மதுரையும் தருகுவன்; எல்லாம்
5
பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்!
தொன்னிலக் கிழமை சுட்டின், நன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமண் குரூஉத்திரள் போல, அவன்
கொண்ட குடுமித்தும், இத் தண்பணை நாடே.
10
|
புறநானூறு - 32. பூவிலையும் மாடமதுரையும்!
|
நலங்கிள்ளி தன் குடும்பத்தார் சமைப்பதற்காக வஞ்சி நகரத்தையே தருவான். அவனைப் பாடும் விறலியர் தலையில் பூ வைத்துக்கொள்ள விலைப் பொருளாக மதுரை நகரத்தையே தருவான். எல்லோரும் வாருங்கள். அவனைப் பாடிப் பெற்றுக்கொள்ளலாம். அவனைப் பாட நமக்கு உரிமை உண்டு. குயவர் சிறுவர் விளையாடுகையில் தந்தையைப் போலப் பானை செய்யும் சக்கரத்தில் வைத்த ஈரக் களிமண் போல அவன் மலை இருக்கும். (மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் மலை). அவன் நாடு அதனைச் சூழ்ந்திருக்கும் வயல்வெளிகளைக் கொண்டது. முந்தைய பாடல்
|
33
|
கோவூர்கிழார்.
|
சோழன் நலங்கிள்ளி.
|
வாகை.
|
அரசவாகை.
|
பகைவரது கோட்டைகளைக் கைப்பற்றியவுடன், அவற்றின் கதவுகளில்
|
கான் உறை வாழ்க்கைக் கதநாய், வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும், நிறைய,
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
5
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் புன்னாட்டுள்ளும்,
ஏழெயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு நின்;
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை;
பாடுநர் வஞ்சி பாடப், படையோர்
10
தாதுஎரு மறுகின் பாசறை பொலியப்,
புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற் றமலை பான்கடும்பு அருத்தும்
செம்மற்று அம்மநின் வெம்முனை இருக்கை;
15
வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற
அல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்
காம இருவர் அல்லது, யாமத்துத்
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்,
ஒதுக்குஇன் திணிமணல் புதுப்பூம் பள்ளி
20
வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப
நீஆங்குக் கொண்ட விழவினும் பலவே.
|
புறநானூறு - 33. புதுப்பூம் பள்ளி!
|
இவ்வூர் மக்கள் உழவர். இவர்களின் பெருங்குடி மகள் நெல்லைப் பண்டமாற்றாகத் தருவாளாம். வேட்டுவன் நாய்த்துணையுடன் வேட்டையாடிக் கொண்டுவந்த மான் தசையைக் கொடுத்துவிட்டு நெல்லைப் பெற்றுச் செல்வானாம். ஆயர் குடிமகள் மொந்தையில் கொண்டுவந்த தயிரைக் கொடுத்துவிட்டு நெல்லைப் பெற்றுச் செல்வாளாம். இந்த ஊரில் ஏழெயில் கதவம் என்னும் கோட்டை இருந்தது. இதனைக் கைப்பற்றிய சோழன் நலங்கிள்ளி அதன் கதவில் தன் புலிச்சின்னத்தைப் பொறித்தானாம். புலிச்சின்னம் பிளந்த வாயைக் கொண்டிருந்தது. பாசறைக் காட்சி பாடுபவர்கள் அரசன் பிற நாட்டைக் கைப்பற்றிய வஞ்சி வெற்றியைப் பாடிக்கொண்டிருந்தனர். படைவீரர்கள் பாசறைத் தெருவில் பொலிவுடன் இருந்தனர். பச்சிலை வைத்துக் கட்டிய மாலைப்பந்து போன்ற கறிச்சோற்றுக் கவளங்களை அரசன் பாணர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தான். இது போர்ப் பாசறையில் நிகழ்ந்தது. தலைநகர்க் காட்சி கைத்திறன் கொண்ட கலைஞன் தைத்து உருவாக்கிய அல்லிப்பாவை ஆடுவது போல காம உணர்வோடு இருவர் ஆடுவது அல்லாமல் நள்ளிரவில் தனிமகன் நடமாட்டம் இல்லாத மணல் ஒதுக்குப் பூம்பள்ளியில் காம இருவர் ஆடினர். இந்தப் பூம்பள்ளி மாடங்களின் வாயில்தோறும் ஆட்டுக்கறி உணவு படைக்கப்பட்டது. இப்படி அரசன் விழா நடைபெற்றது. முந்தைய பாடல்
|
34
|
ஆலத்தூர் கிழார்.
|
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
|
பாடாண்.
|
இயன்மொழி.
|
'செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என்னும் அறநெறி பற்றிய
|
ஆன்மலை அறுத்த அறனி லோர்க்கும்,
மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்,
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்,
வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என,
நிலம்புடை பெயர்வ தாயினும், ஒருவன்
5
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
அறம் பாடின்றே ஆயிழை கணவ!
காலை அந்தியும், மாலை அந்தியும்,
புறவுக் கருவன்ன புன்புல வரகின்
பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக்,
10
குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு,
இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக்,
கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி,
அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்,
15
எங்கோன்,வளவன் வாழ்க!என்று, நின்
பீடுகெழு நோன்தாள் பாடேன் ஆயின்,
படுபறி யலனே, பல்கதிர்ச் செல்வன்;
யானோ தஞ்சம்; பெரும! இவ் வுலகத்துச்
சான்றோர் செய்த நன்றுண் டாயின்,
20
இமையத்து ஈண்டி, இன்குரல் பயிற்றிக்,
கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய, பலவே!
|
புறநானூறு - 34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!
|
பசுவின் முலையை அறுத்தல் (உழவுக்குப் பயன்படுத்தல்) தாலி அணிந்த பெண்ணின் கருவைச் சிதைத்தல் பார்ப்பானை அடித்தல் இவை பாவச் செயல்கள். இந்தப் பாவங்களைக் கழுவாய் செய்து போக்கிக்கொள்ளலாம். ஆனால் உலகமே கைவிட்டுப் போவதாயினும் நன்றி மறந்தவனுக்கு அப் பாவத்திலிருந்து தப்புவதற்கு வேறு வழியே இல்லை என்று அறநூல் பாடுகிறது எந்நன்றி கொன்றாற்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு - அறம் எனப் புலவர் ஆலத்தூர் கிழார் சுட்டும் திருக்குறள் ஆயிழை கணவ! எம் அரசன் வாழ்க என்று உன்னைப் பாடாவிட்டால் எனக்குப் பொழுது போகாது. நீ செய்திருக்கும் உதவி அத்துணைப் பெரியது. அமலை வெண்சோறு பால் ஊற்றிப் பொங்கிய வரகரிசிப் பொங்கலைத் தேனில் தொட்டுக்கொண்டு முயல் கறியோடு இரத்தி (இற்றி) மர நிழலில் இருந்துகொண்டு காலை, மாலை ஆகிய இரு அந்திப் பொழுதிலும் குடும்பத்தாரோடு சேர்ந்து உண்ணுமாறு உன் செல்வம் அனைத்தையும் உனக்காக மறைத்து வைத்துக் கொள்ளாமல் இனிமையாக் பேசி ஏற்றுக்கொள்ளுமாறு பாணர்களுக்கு அமலை வெண்சோறு வழங்கியவன் நீ. நான் உனக்கு அடைக்கலம். இந்த உலகத்தில் சான்றோர் செய்த நன்று ஒன்று இருந்தால், (வங்கக் கடலிலிருந்து சென்று இமயமலையில் தங்கித் திரும்பி இடி முழக்கத்துடன் பொழியும் கீழைக்காற்று மழைத்துளியைக் காட்டிலும் பல்லாண்டு காலம் வாழ்வாயாக). முந்தைய பாடல்
|
35
|
வெள்ளைக்குடி நாகனார்.
|
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
|
பாடாண்.
|
செவியறிவுறூஉ
|
அரச நெறியின் செவ்வி பற்றிய செய்திகள்.
|
நளிஇரு முந்நீர் ஏணி யாக,
வளிஇடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்,
முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்,
அரசுஎனப் படுவது நினதே, பெரும!
5
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்,
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்,
அந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்டத்,
தோடு கொள் வேலின் தோற்றம் போல,
ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்
10
நாடுஎனப் படுவது நினதே அத்தை; ஆங்க
நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே!
நினவ கூறுவல்: எனவ கேண்மதி!
அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து
முறைவெண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு
15
உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோறே;
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்டுமூ
மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்,
கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
வெயில்மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய
20
குடிமறைப் பதுவே; கூர்வேல் வளவ!
வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்,
களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை,
வருபடை தாங்கிப், பெயர்புறத் தார்த்துப்,
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
25
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே;
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்,
காவலர்ப் பழிக்கும், இக் கண்ணகன் ஞாலம்;
அதுநற்கு அறிந்தனை யாயின், நீயும்
30
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது,
பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்,
குடிபுறம் தருகுவை யாயின், நின்
அடிபுறம் தருகுவர், அடங்கா தேரே.
|
புறநானூறு - 35. உழுபடையும் பொருபடையும்!
|
உன்னிடம் முறை வேண்டும்போது எளிமையாகக் காட்சி தந்து சரியான தீர்ப்பைப் பெற்றால் மழை விரும்பும்போது மழையைப் பெற்றது போன்று மக்கள் மகிழ்வர். உன் குடை உனக்கு வெயிலை மறைக்க அன்று. குடிமக்களின் துயரைப் போக்கி அவர்களுக்கு நிழல் தருவதற்காகவே. உன் கொற்றம் உழவரின் உழவுப் படையால் விளைந்தது. மழை பொய்த்தாலும் வருவாய் குறைந்தாலும் இயற்கை அல்லாத செயற்கை தோன்றினாலும் உலகம் அதனைக் காக்கும் அரசனைத்தான் பழிக்கும். இதனைப் புரிந்துகொண்டு உனக்கு வேண்டியவர்களின் சொல்லைக் கேளாமல் காளை மாடுகளை போற்றி உழவு செய்யும் குடிகளின் சுமையை நீ குறைத்து அவர்களைப் பேணினால் அடங்காத உன் பகைவர் உன்னிடம் அடிபணிவர். முந்தைய பாடல்
|
36
|
ஆலத்தூர் கிழார்.
|
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
|
வஞ்சி.
|
துணை வஞ்சி.
|
அடுநை யாயினும், விடுநை யாயினும்,
நீ அளந் தறிதி நின் புரைமை; வார்தோல்,
செயறியரிச் சிலம்பின், குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்
தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்,
5
கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின், நிலையழிந்து,
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக், காவுதொறும்
கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்
நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப,
10
ஆங்குஇனி திருந்த வேந்தனொடு, ஈங்குநின்
சிலைத்தார் முரசும் கறங்க,
மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே.
|
புறநானூறு - 36. நீயே அறிந்து செய்க!
|
அரசன் கிள்ளிவளவன் கருவூரை முற்றுகை இட்டிருந்தான். கருவூர் அரசன் தன் கோட்டைக் கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருந்தான். எதிர்க்காதவன் ஊரை முற்றுகை இட்டுக்கொண்டே இருத்தல் நாணத்தக்க செயல் என்று கூறுகிறார் புலவர். போரிட்டு அழித்தாலும், போரைக் கைவிட்டுத் திரும்பினாலும் நீ உன் உயர்ந்த நிலையை எண்ணிப்பார். மகளிர் கழங்கைத் தெற்றி விளையாடும் ஆன்பொருநை ஆற்றுமணல் சிதைய, தன் காவல்மரக் காடுகள் கோடாரியால் வெட்டப்படும் ஓசையைக் கேட்டுக்கொண்டு கோட்டைக்குள் இருக்கும் அரசனை முரசு முழங்கும் படையுடன் எதிர்க்கிறாய் என்பது நாணத்தக்க செயலாகும். முந்தைய பாடல்
|
|
37
|
மாறோக்கத்து நப்பசலையார்.
|
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
|
வாகை; உழிஞை எனவும் பாடம்.
|
அரச வாகை குற்றுழிஞை எனவும், முதல் வஞ்சி எனவும் பாடம்.
|
நஞ்சுடை வால் எயிற்று, ஐந்தலை சுமந்த,
வேக வெந்திறல், நாகம் புக்கென,
விசும்புதீப் பிறப்பத் திருகிப், பசுங்கொடிப்
பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்,
புள்ளுறு புன்கண் தீர்த்த, வெள் வேல்
5
சினங்கெழு தானைச், செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டுகண் அகழி,
இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி,
யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்,
10
செம்புஉறழ் புரிசைச், செம்மல் மூதூர்,
வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்,
நல்ல என்னாது, சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை! செருவத் தானே!
|
புறநானூறு - 37. புறவும் போரும்!
|
பறவையின் துன்பம் தீர்த்த செம்பியனின் (சிபிச் சக்கரவர்த்தி) வழித்தோன்றலே! வேந்தன் தன் யானையொடு உள்ளே இருப்பதால் செம்பு போன்ற கோட்டையைச் சிதைத்தல் நல்லதன்று என உணர்ந்திருந்தும் போரிட்டுச் சிதைக்கும் வல்லமை பெற்றவன் நீ. நச்சுப் பற்களை உடைய ஐந்தலை நாகம் புகுந்தது போலவும். மின்னலுடன் கூடிய இடி மலையைப் பிளந்தது போலவும், தாக்கி அந்தக் கோட்டையைத் தகர்த்தாய். நள்ளிரவில் காவல் புரிவோர் விளக்கின் நிழல் நீரில் விழ அதனை அகழியிலுள்ள முதலை (இரை என்று எண்ணிக்) கவ்வும் அகழி கொண்டது அந்தக் கோட்டை. முந்தைய பாடல்
|
|
38
|
ஆவூர் மூலங் கிழார்.
|
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
|
பாடாண்.
|
இயன்மொழி,
|
வரை புரையும் மழகளிற்றின் மிசை,
வான் துடைக்கும் வகைய போல
விரவு உருவின கொடி நுடங்கும்
வியன் தானை விறல் வேந்தே!
நீ, உடன்று நோக்கும்வாய் எரிதவழ,
5
நீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச்,
செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்,
வெண் திங்களுள் வெயில் வேண்டினும்,
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்,
நின்நிழல் பிறந்து, நின்நிழல் வளர்ந்த,
10
எம் அளவு எவனோ மற்றே? இன்நிலைப்
பொலம்பூங் காவின் நன்னாட் டோரும்
செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை,
உடையோர் ஈதலும், இல்லோர் இரத்தலும்
கடவ தன்மையின், கையறவு உடைத்துஎன,
15
ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்,
நின்நாடு உள்ளுவர், பரிசிலர்:
ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத் தெனவே.
|
புறநானூறு - 38. வேண்டியது விளைக்கும் வேந்தன்!
|
மலை போன்ற வாலிபக் களிற்றின் மேல் வானத்தைத் துடைப்பது போன்ற கொடியுடன் கூடிய யானைப்படையை உடையவன் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். இப்படிப்பட்ட வெற்றி வேந்தனே! நீ மாறுபட்டு நோக்கும் இடம் தீப்பற்றி எரியும். விரும்பி நோக்கும் இடம் பொன் பூக்கும். அதனால் நீ ஞாயிற்றில் நிலவையும், நிலாவில் வெயிலையும் விளைவிக்கும் ஆற்றலை உடையவன். உன் நிழலிலே பிறந்து, உன் நிழலிலே வளர்திருக்கும் என் அளவு எத்துணை? பொன்னுலகம் என்னும் மேலுலக வாழ்வு இவ்வுலகில் செய்யும் நல்வினையால் இறந்தபின் கிடைக்குமாம். அங்கே உடையவர் ஈதலும், இல்லாதவர் இரத்தலும் இல்லை. இந்த இன்பத்துடன் உன் குடை நிழல் ஆண்டு சென்று நுகரும் பொன்னுலக இன்பத்தை ஈண்டே பெறவைப்பதால் புலவர்கள் உன் நாட்டையே நினைக்கின்றனர். நீ பெற்றுவிடுவாய் என்று எண்ணிப் பகைவர் நாட்டையும் உன்னிடையது என்றே உண்ணுகின்றனர். முந்தைய பாடல்
|
|
39
|
மாறோக்கத்து நப்பசலையார்.
|
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
|
பாடாண்.
|
இயன்மொழி,
|
வளவன் வஞ்சியை வெற்றி கொண்டது.
|
புறவின் அல்லல் சொல்லிய, கறையடி
யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக!
ஈதல்நின் புகழும் அன்றே; சார்தல்
ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்
5
தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்,
அடுதல்நின் புகழும் அன்றே; கெடுவின்று,
மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம்நின்று நிலையிற் றாகலின், அதனால்
முறைமைநின் புகழும் அன்றே; மறம்மிக்கு,
10
எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்,
கண்ணார் கண்ணிக், கலிமான், வளவ!
யாங்கனம் மொழிகோ யானே; ஓங்கிய
வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்டு
இமையம் சூட்டியஏம விற்பொறி,
15
மாண்வினை நெடுந்தேர், வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டும்நின்
பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே?
|
புறநானூறு - 39. புகழினும் சிறந்த சிறப்பு!
|
புறாவின் உயிரைக் காப்பாற்றத் தன்னையே தந்தக்கோல் தராசுக்கோல் தட்டில் நிறுத்துக் (கழுகுக்குக்) கொடுத்த உன் முன்னோன் சிபியின் வழிவந்தவன் நீ ஆகையால் ஈதல் உன் புகழ் அன்று. நீ தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் வழிவந்தவன் ஆதலால் பகைவரை அழித்தல் உன் புகழ் அன்று. உறையூர் அரசவையில் தொன்றுதொட்டு அறநெறி நிலைத்திருப்பதால் மக்களுக்கு முறை வழங்குதல் உன் புகழ் அன்று. வளவ! நீ ஏழு போர்களில் வெற்றி கண்டவன். கோட்டைக் கதவின் குறுக்குத் தாழ்ப்பாள் மரம் (எழு) போன்ற தோளை உடையவன். ஆத்தி மாலை சூடியவன். குதிரை வீரன். இமயத்தில் வில் பொறித்த வானவன் தொலைய வஞ்சி நகரத்தை வாடச்செய்த உன் பொருமையைப் பாடும்போது உன்னை எப்படிப் பாடுவேன்! முந்தைய பாடல்
|
40
|
ஆவூர் மூலங்கிழார்.
|
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
|
பாடாண்.
|
செவியறிவுறூஉ.
|
நீயே, பிறர் ஓம்புறு மறமன் னெயில்
ஓம்பாது கடந்தட்டு, அவர்
முடி புனைந்த பசும் பொன்னின்
அடி பொலியக் கழல் தைஇய
வல் லாளனை, வய வேந்தே!
5
யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்தடங்கப்,
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற,
இன்றுகண் டாங்குக் காண்குவம், என்றும்
இன்சொல் எண்பதத்தை ஆகுமதி; பெரும!
ஒருபிடி படியுஞ் சீறிடம்
10
எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே!
|
புறநானூறு - 40. ஒரு பிடியும் எழு களிரும்!
|
வெற்றி வேந்தே! நீயோ பிறர் கோட்டைகளை வென்று அதன் புனைந்திருக்கும் அரசுமுடியால் உன் காலுக்கு வீரக்கழல் செய்துகொண்டவன். நானோ உன்னை இகழ்வோர் கொற்றம்(கொட்டம்) அடங்கப் பாடுபவன். நீ இன்று போல் என்றும் காட்சிதர வேண்டும். என்றென்றும் எளிதில் காட்சி தந்து இன்சொல் வழங்கவேண்டும். ஒரு யானை படுக்கும் நிலப்பரப்பில் ஏழு யானைகளுக்கு உணவளிக்கும் வளம் மிக்க நாடு உன்னுடையது. முந்தைய பாடல்
|
|
41
|
கோவூர் கிழார்.
|
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
|
வஞ்சி.
|
கொற்ற வள்ளை.
|
காலனும் காலம் பார்க்கும்; பாராது
வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய,
வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே!
திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்,
பெருமரத்து, இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்,
5
வெங்கதிர்க் கனலி துற்றவும், பிறவும்,
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்,
எயிறுநிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,
களிறுமேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்,
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்,
10
கனவின் அரியன காணா, நனவின்
செருச்செய் முன்ப,! நின் வருதிறன் நோக்கி,
மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர்,
புதல்வர் பூங்கண் முத்தி, மனையோட்கு
எவ்வம் சுரக்கும் பைதல் மாக்களொடு
15
பெருங்கலக் குற்றன்றால் தானே; காற்றோடு
எரிநிகழ்ந் தன்ன செலவின்
செருமிகு வளவ! நிற் சினைஇயோர் நாடே.
|
புறநானூறு - 41. காலனுக்கு மேலோன்!
|
தீக் கனா எட்டுத் திசைகளிலும் எரிமீன் விழுதல் பச்சை மரம் பற்றி எறிதல் சூரியன் விழுங்கல் அச்சம் தரும் பறவைகள் ஒலித்தல் பல் நிலத்தில் விழுதல் தலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் யானை அடங்காமை மேலாடை கீழே விழுதல் அரியணை கவிழ்தல் இப்படியெல்லாம் கனவு காணும்படி நனவிலேயே போரிடும் வல்லமை உடையவன் நீ. இப்படி நீ வருவதைப் பார்த்த பகைவர் தன் மகனை முத்தமிட்டுக்கொண்டு மனைவி முன் தன் கண் கலங்குவதை மறைத்துக்கொண்டு நிற்பர். காற்றும் செருப்பும் வீசுவது போல பகை நாட்டின்மீது நீ செல்வாய். முந்தைய பாடல்
|
|
42
|
இடைக்காடனார்.
|
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
|
வாகை.
|
அரச வாகை.
|
சோழனின் மறமேம் பாடும், கொடை மேம்பாடும், வலிமைச்
|
ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின்
யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின்
தானையும் கடலென முழங்கும்; கூர்நுனை
வேலும் மின்னின் விளங்கும் ; உலகத்து
அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின்,
5
புரைதீர்ந் தன்று; அது புதுவதோ அன்றே;
தண்புனற் பூசல் அல்லது, நொந்து,
களைக, வாழி, வளவ! என்று, நின்
முனைதரு பூசல் கனவினும் அறியாது,
புலிபுறங் காக்கும் குருளை போல,
10
மெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப்,
பெருவிறல் யாணர்த் தாகி, அரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையும், உழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையும், அறைநர்
கரும்பிற் கொண்ட தேனும், பெருந்துறை
15
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்,
வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!
மலையின் இழிந்து, மாக்கடல் நோக்கி,
நிலவரை இழிதரும் பல்யாறு போலப்,
20
புலவ ரெல்லாம் நின்நோக் கினரே;
நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்றுவெகுண் டன்ன முன்பொடு,
மாற்றுஇரு வேந்தர் மண்நோக் கினையே.
|
புறநானூறு - 42. ஈகையும் வாகையும்!
|
உன் யானையோ மலை போல் உள்ளது. உன் படையோ கடல் போல் முழங்குகிறது. உன் வேலோ மின்னிக்கொண்டே இருக்கிறது. இதனால் உலகின் அரசர்களெல்லாம் நடுங்குகின்றனர். இது குற்றமற்ற செயல் அன்று. இது உனக்குப் புதியதும் அன்று. உன் நாட்டில் ஆற்றுநீர் மோதல் அன்றிப் பிற மோதல் இல்லாமல் களைந்தெறிவாயாக. போர்ப் பூசல் கனவிலும் இல்லாமல் புலி தன் குட்டியைப் பாதுகாப்பது போல நாட்டில் செங்கோலாட்சி புரிவாயாக. புன்செய் நில நாட்டின்மீது (பாண்டிய நாட்டின்மீது) போர் தொடுக்க வேண்டாம். உன் நாடு வளமான நாடு. இதன் மடைநீரில் அரித்துக்கொள்ளும் வாளை, உழும்போது புரளும் ஆமை, கரும்பில் தொடுத்திருக்கும் தேன், துறையில் மகளிர் பறித்த குவளை ஆகியவற்றைப் புன்செய் நில மக்களுக்கு விருந்தாகத் தருபவர்கள் உன் நாட்டு மக்கள். அந்த நாட்டின்மீது நீ போர் தொடுக்கிறாய். மலையிலிருந்து நிலத்தில் பாயும் ஆறு போலப் புலவர்கள் உன்னை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். நீயோ கூற்றுவன் போல இருபெரு வேந்தர்களின் மண்ணைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய். முந்தைய பாடல்
|
43
|
தாமப்பல் கண்ணனார்,
|
சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்.
|
வாகை.
|
அரசவாகை.
|
எறிந்தானைச் , 'சோழன் மகன்
அல்லை' என, நாணியுருந்தானை அவர் பாடியது.
நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்,
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்,
கால்உண வாகச், சுடரொடு கொட்கும்
5
அவிர்சடை முனிவரும் மருளக், கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித், தொரீஇத்,
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!
10
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி! வார் கோல்,
கொடுமர மறவர் பெரும! கடுமான்
கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:
ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்
15
பார்ப்பார் நோவன செய்யலர்: மற்றுஇது
நீர்த்தோ நினக்கு? என வெறுப்பக் கூறி,
நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்,
நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே;
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்!
20
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும் எனக்
காண்டகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின்,
யானே பிழைத்தனென் ! சிறக்கநின் ஆயுள்;
மிக்குவரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!
25
|
புறநானூறு - 43. பிறப்பும் சிறப்பும்!
|
அவிர்சடை முனிவர்கள் நிலமக்களின் துன்பம் நீங்கவேண்டும் என்பதற்காகத் தவம் செய்வார்கள். வெயிலிலும் காற்றை மட்டுமே உணவாக உண்டுகொண்டு தவம் செய்வார்கள். இந்த முனிவர்களும் மருளும்படி புள்ளினங்களும் வாழும்படி சிபி மன்னன் ஆட்சி புரிந்தான். கொடிய சிறகும், கூரிய நகங்களும் கொண்ட பருந்தின் பிடியிலிருந்து தப்பித் தன்னிடம் வந்த புறாவைக் காப்பாற்றுவதற்காக (அந்தப் புறாவின் எடைக்கு எடை தசை தரத் தன் தொடையிலிருந்து அறுத்துத் தந்தபோது எடை குறைந்தமையால் அதனை ஈடு செய்யும் பொருட்டுத்) தானே தன்னைத் துலாக்கோலில் நிறுத்த மன்னன் சிபி. அவன் வழியில் வந்தவர் சோழர். பகைவரின் முரண்பாட்டை நீக்கிய தேர்வண் கிள்ளி (தேர்க்கொடையாளி நலங்கிள்ளி) தம்பி நீ. வார்கோல் கொடுமர மறவர் (அம்பு வில் வீரர்) படையின் தலைவனே! குதிரை வீரனே! உன் பிறப்பில் ஐயம் ஊடையேன். ஆத்திமாலை அணிந்த உன் முன்னோர் பார்ப்பார் நோகும் செயல்களைச் செய்யமாட்டார்கள். இது என்னை வட்டுக் காயால் அடித்தது சரியா? - என்று வெறுக்குபடி கூறினேன். அதனைக் கேட்ட நீ உனக்கு நான் செய்த பிழையைப் பொருட்படுத்தாமல், நீ பிழை செய்தது போலப் பெரிதும் நாணினாய். தமக்குப் பிழை செய்தோரைப் பொறுத்துக்கொள்ளும் செம்மாப்பு இந்தச் சோழர் குடிக்கு எளிது என்பதைக் கண்ணாரக் காட்டிநுள்ளாய். அதனால் காவிரியாறு குவித்துள்ள மேட்டுமணலின் எண்ணிமகையைக் காட்டிலும் பல்லாண்டு வாழ்வாயாக. முந்தைய பாடல்
|
|
44
|
கோவூர் கிழார்.
|
சோழன் நெடுங்கிள்ளி.
|
வாகை.
|
அரச வாகை.
|
இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா,
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ,
திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி,
நிலமிசைப் புரளும் கைய, வெய்துயிர்த்து,
அலமரல் யானை உருமென முழங்கவும்,
5
பாலில் குழவி அலறவும், மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவும், நீரில்
வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும்,
இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்;
துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்!
10
அறவை யாயின்,நினது எனத் திறத்தல்!
மறவை யாயின், போரொடு திறத்தல்;
அறவையும் மறவையும் அல்லை யாகத்,
திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
15
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே.
20
|
புறநானூறு - 44. அறமும் மறமும்!
|
நெடுங்கிள்ளியின் யானை நீராடவில்லை. நெல்லஞ்சோறும் நெய்யும் கலந்து உண்ணும் அது உணவுக் கவளம் பெறவில்லை. அது கட்டப்படிருக்கும் வெளில் என்னும் கூடாரம் வருந்தும்படி மோதிக்கொண்டு நிலத்தில் விழுந்து பெருமூச்சு விட்டுக்கொண்டு புரண்டு வருந்துகிறது; முழங்குகிறது. குழந்தைகள் பால் இல்லாமல் அலறுகின்றன. மகளிர் பூ இல்லாமல் வெறுந்தலையை முடிந்துகொள்கின்றனர். குடிக்கத் தண்ணீர்கூட இல்லாமல் இல்லங்களில் மக்கள் அழும் ஒலி கேட்கிறது. இப்படி இருக்கும்போது கோட்டைக்குள் நீ பாதுகாப்பமாக இருத்தல் மிகமிகக் கொடுமை. நீ நெருங்க முடியாத அரிமா போன்று வலிமை மிக்கவன். நீ அறநெறியை விரும்பினால் கோட்டை உனடுடையது என்று திறந்து விட்டுவிடுக. மறநெறியை விரும்பினால் போரிடுவதற்காகத் திறந்துவிடுக. இரண்டும் இல்லாமல் மதிலுக்குள் ஒரு மூலையில் ஒடுங்கிக் கிடத்தல் நாணத்தக்க செயல். முந்தைய பாடல்
|
|
45
|
கோவூர் கிழார்.
|
வஞ்சி.
|
இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்!
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே;
5
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே!
|
புறநானூறு - 45. தோற்பது நும் குடியே!
|
பெரிய பனை மரத்தினது வெண்மை நிறம் கொண்ட குருத்து இலை மாலை அணிந்தவன் இல்லை (சேர மன்னனைப் போல்). கரிய கிளைகளையுடைய வேம்பின் மாலை அணிந்தவன் இல்லை (பாண்டிய மன்னனைப் போல்). உன்னுடைய மாலையும் ஆத்தி மலர்களால் நெருக்கமாகக் கட்டப்பட்டது. உன்னுடன் போரிடுபவன் மாலையும் ஆத்தி மலர்களால் நெருக்கமாகக் கட்டப்பட்டது. இப்பகையினால் உண்டாகும் போரில், ஒருவர் தோற்றாலும் உங்கள் சோழர் குலம் தோற்றதாக ஆகும். போரில், இருவரும் வெற்றி பெறுவது என்பது இயலாதது. உங்களது குலத்திற்குப் பொருந்தாதது உங்களுடைய இந்தச் செய்கை. அழகிய கொடியால் அலங்கரிக்கப்பட்ட தேர்களைக் கொண்ட உங்களைப் போன்ற பிற மன்னர்களுக்கு (சேர, பாண்டிய மன்னர்களுக்கு) உடல் பூரிக்கும்படி மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் உங்களது இந்தப் பகைமை. குறிப்பு: நின்ன (3) - ஒளவை துரைசாமி உரை - நின கண்ணியுமென்பது நின்ன கண்ணியுமென விகாரமாயிற்று. சொற்பொருள்: இரும் பனை - பெரிய பனை மரம், வெண்தோடு - வெள்ளை நிற இலை, மலைந்தோன் அல்லன் - அணிந்தவன் இல்லை, கருஞ்சினை - கரிய கிளைகளையுடைய, வேம்பின் - வேப்ப மரத்தின், தெரியலோன் அல்லன் - மாலை அணிந்தவன் இல்லை (தெரியல் - பூ மாலை), நின்ன கண்ணியும் - உன்னுடைய மாலையும், ஆர் மிடைந்தன்றே - ஆத்தி மலர்களால் நெருக்கமாகக் கட்டப்பட்டது (மிடைந்தன்றே - ஏகாரம் அசைநிலை), நின்னொடு பொருவோன் - உன்னுடன் போரிடுபவன், கண்ணியும் - மாலையும், ஆர் மிடைந்தன்றே - ஆத்தி மலர்களால் நெருக்கமாக கட்டப்பட்டது (மிடைந்தன்றே - ஏகாரம் அசைநிலை), ஒருவீர் தோற்பினும் - உங்களில் ஒருவர் தோற்றாலும், தோற்ப - தோற்பது, நும் குடியே - உங்கள் குலம் தான் (சோழர் குலம்), இருவீர் - இருவர், வேறல் - வெல்லுதல், இயற்கையும் அன்றே - இயற்கையும் இல்லை (ஏகாரம் அசைநிலை), அதனால் - அதனால், குடிப் பொருள் - குடிக்கு ஏற்றது, அன்று - இல்லை, நும் செய்தி - உங்கள் செய்கை, கொடித்தேர் - கொடியுடைய தேர்களைக் கொண்ட, நும்மோர் அன்ன - உங்களைப் போன்ற, வேந்தர்க்கு - பிற மன்னர்களுக்கு (சேரர், பாண்டியர்), மெய் - உடம்பு, மலி உவகை - மிகுந்த மகிழ்ச்சி, செய்யும் - செய்யும், இவ் - இந்த, இகலே - பகைமை (ஏகாரம் அசைநிலை) முந்தைய பாடல்
|
புறநானூறு (Purananuru)
📝 Dataset Description
புறநானூறு (Purananuru) is one of the eight classical anthologies (Ettuthokai) in Sangam Literature, containing 400 poems. Each poem is written by a different poet and is dedicated to various kings, chieftains, or deities.
This dataset provides a structured digital format of Purananuru, including:
Poem ID
Title
Original Tamil Poem text
Explanation (பொருளுரை)
The dataset bridges ancient Tamil literature with modern NLP research.
📂 Dataset Structure
Fields
id (int) → Unique ID of the poem
title (string) → Title of the poem
poem (string) → Original Tamil poem text
explanation (string) → Tamil explanation / commentary of the poem
Example { "id": 1, "title": "புறநானூறு - 1. இறைவனின் திருவுள்ளம்!", "poem": "கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்\nவண்ண மார்பின் தாருங் கொன்றை; ...", "explanation": "தலையில் கொன்றைப் பூ சூடியவன். மார்பில் கொன்றை மாலை அணிந்தவன்... அவன் தவம் செய்துகொண்டிருக்கிறான்." }
📊 Dataset Statistics
Total Poems: ~400
Language: Tamil (ta)
Format: JSON
Size: ~1.5 MB
💡 Use Cases
This dataset can be used for:
Tamil Natural Language Processing (NLP)
Poem-to-Explanation alignment
Summarization and translation tasks (Tamil ↔ English)
Cultural and historical research
Educational applications (Digital Sangam literature resources)
🔑 Licensing
License: Open Data for research and educational purposes.
Attribution is required when using this dataset in publications or applications.
#புறநானூறு #சங்கஇலக்கியம் #தமிழ் #Tamil #Purananuru #SangamLiterature #TamilPoetry #ClassicalLiterature #AncientTamil #TamilNLP #DigitalHeritage #TamilCulture #TamilClassics #PoetryDataset #TamilAI #OpenSource
- Downloads last month
- 24